Skip to main content

புதுவையில் பெட்ரோல் பங்க் ஊழியரைக் கடத்தி, சேற்றில் முக்கிக் கொலை!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

incident in puducherry... police investigation

 

புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையம், அமைதி நகர் விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரது மகன் பிரகாஷ்(25). இவர் மேட்டுப்பாளையம் பான்லே பூத் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இவருக்கும், சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.


இந்த நிலையில், நேற்று காலை பிரகாஷ் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, 4 பேர் கொண்ட கும்பல், மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் பிரகாஷை மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாக அமர்த்தியுள்ளனர். அப்போது, தடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்களை மிரட்டி, கடத்திச் சென்றுள்ளது அந்த கும்பல். இதனால் அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், மீட்டு மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அதையடுத்து (வடக்கு) காவல் கண்காணிப்பாளர் சுபம்கோஷ், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன்(பொறுப்பு) தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

 

பின்னர், பெட்ரோல் பங்க் மேலாளரிடம் புகாரை பெற்று 364 பிரிவின் கீழ் (கொலை செய்யும் நோக்கில் கடத்தல்) வழக்குப் பதிந்த போலீசார் அருகிலுள்ள வில்லியனூர் மற்றும் கோரிமேடு காவல் நிலையங்களுக்குத் தகவல் கொடுத்தனர். அதையடுத்து கடத்தப்பட்ட ஜெயப்பிரகாஷை மீட்க விடிய விடிய போலீசாரும், ஜெயப்பிரகாஷின் உறவினர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


இதனிடையே, ஊசுட்டேரியை ஒட்டிய பொறையூர் ரோட்டிலுள்ள காலி மனையில் சேற்றில் முக்கி, தலையில் கல்லைப் போட்டு ஜெயப்பிரகாஷ் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். இதையறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் அங்கு சென்று பிரகாஷின் உடலை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

 

விசாரணையில், ஜெயப்பிரகாஷுக்கும், சண்முகாபுரத்தைச் சேர்ந்த சபரிநாதன்(25) என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன்பு, அங்குள்ள சாராயக் கடையில் பிரச்சனை ஏற்பட்டு, மோதலில் முடிந்ததும், அதனைத் தொடர்ந்து இருவரும் அவ்வப்போது செல்ஃபோனில் மிரட்டல் விடுத்துப் பேசி வந்ததும் தெரியவந்தது. மேலும், கடத்தப்பட்ட ஜெயப்பிரகாஷ் பணியாற்றிய பெட்ரோல் பங்கில் இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.

 

cnc

 

அதனைத் தொடர்ந்து சபரிநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் டெம்போ ராஜா(24), டெம்போ ராஜாவின் உறவினரான  மார்த்தான்(23), முத்தியால்பேட்டை எலி கார்த்திக்(26) ஆகியோரை போலீசார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். இதனிடையே ஜெயப்பிரகாஷின் சடலம் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது


இரண்டு நாட்களுக்கு முன்புதான் அஜித் என்பவரை எதிர்த்தரப்பு கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த கொலைக்குப் பழிக்குப்பழி வாங்குவதற்காக இந்தக் கொலை நடைபெற்று இருக்குமா என்று காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.