புதுச்சேரியில் விபத்துக்களை தடுக்கும் விதமாக ஹெல்மெட் கட்டாயம் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவும், காவலர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஒட்டவும் டிஜிபி சுந்தரி நந்தாவுக்கு ஆளுநர் கிரண்பேடி நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது,
புதுச்சேரியில் ஹெல்மெட் சட்டத்தினை நடைமுறை படுத்துவது தொடர்பாக சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து இது தொடர்பாக ஏற்கனவே முடிவு எடுத்து ஆயத்த வேலைகளை பார்த்ததில் நடைமுறைபடுத்தவும், அபராதம் போடுவதும் புதுச்சேரியில் சரி வராது என்பதுதான் நடைமுறை.
மேலும் ஹெல்மெட் அணிவது தொடர்பாக மாநில அரசு சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் கிரண்பேடி தனிப்பட்ட முறையில் ஹெல்மெட் அணிய டிஜிபிக்கு உத்தரவு போடமுடியாது. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே உத்தரவு போடும் அதிகாரம் உள்ளது. ஆளுநர் ஹெல்மெட் அணிய காவல்துறை தலைவர் சுந்தரி நந்தாவிற்கு உத்தரவு பிறப்பித்தது தொடர்பாக அவர்கள் கோப்பு அனுப்பிய பிறகு பார்க்கலாம் என்று அவர் கூறினார்.
அதைச்சொல்ல அவருக்கு அதிகாரமில்லை: கிரண்பேடி - நாராயணசாமி ஏட்டிக்கு போட்டி!
சார்ந்த செய்திகள்
Next Story
'இதுவே ஆட்சி கவிழ்ப்புக்கு வித்திடும்' - நாராயண சாமி கருத்து
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (15.02.2024) தீர்ப்பு வழங்கியுள்ளது.
'அரசை கணக்கு கேட்கும் உரிமை, நாட்டு மக்களுக்கு உள்ளது எனப் பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. இந்த திட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப்பிரிவு 19-ன் கீழ் உட்பிரிவு 1 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. எனவே தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே கருப்புப் பணத்தை ஒழிக்க உதவாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்க தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது அதனால் ஏற்படும் ஆதாயங்களை கருத்தில் கொண்டு இருக்கலாம். தகவல் அறியும் உரிமை சட்டம் அரசியல் நன்கொடைகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது' எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலரும் வரவேற்று வருகின்றனர். இந்தநிலையில், இது குறித்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ள கருத்தாவது, 'ஒரு அரசியல் கட்சிக்கு நிதி கொடுப்பவர்கள் அந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாது. அந்த அரசியல் கட்சியினுடைய அனுதாபிகள் என்றும் சொல்ல முடியாது. அவர்கள் அந்த அரசியல் கட்சிக்கு நிர்ப்பந்தம் காரணமாக அல்லது சலுகைகள் பெறுவதற்காக தேர்தல் நிதி கொடுக்கலாம். அதனால் அவர்கள் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் என மத்திய அரசு வைக்கும் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
பணத்தை வைத்து ஆளுங்கட்சியானது தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, ஆட்சி கவிழ்ப்பு வேலை செய்வதற்கு இது வித்திடுவதாக அமையும். அதற்காகத்தான் உச்சநீதிமன்றம் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு நன்கொடை என்பது வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் இதை வரவேற்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.
Next Story
“ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக மக்களுக்கு துரோகி என்பதை தெளிவாக காட்டுகிறது” - நாராயணசாமி
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சமீபத்தில் “நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனைக் கேள்விக்குறியாக்கும். நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க வேண்டும் என அவசியமில்லை. நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தெரிவித்து ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன்” எனத் தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆளுநருக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் அண்மையில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவன் ஜெகதீஸ்வரன் (வயது19) என்பவர் 2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவனின் தந்தை செல்வ சேகரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். நீட் விலக்கு மசோதா குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியது குறித்துப் பேசுகையில், “இளைஞர்களின் வாழ்க்கையில் தமிழ்நாடு ஆளுநர் விளையாடுகிறார். அவருடைய செயல் ஆளுநர் பதவிக்கு தகுதியில்லாத செயல். தமிழ்நாடு ஆளுநர் நான் அதிகாரத்துடன் இருந்தால் நீட் தேர்வு விலக்குக்கு உறுதியாக ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று சொல்லுவது, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகி என்பது தெளிவாக காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.
நீட் விலக்கு மசோதா; ஆளுநருக்கு மாணவியின் தந்தை சரமாரி கேள்வி