Skip to main content

விரைவில் பயன்பாட்டிற்கு வரும் மூன்று புதிய கரோனா தடுப்பூசிகள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

union health minister

 

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கரோனா தடுப்பூசி தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநிலங்களவையின் கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே பதிலளித்தார்.

 

அப்போது அவர், "இந்தியாவில் இதுவரை 47 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. மொத்த நாட்டிற்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் 7 முதல் 9 சதவீத தடுப்பூசிகள் அரசு தடுப்பூசி மையத்தில் பயன்படுத்தப்படுகிறது" எனக் கூறியுள்ளார்.

 

மேலும், தடுப்பூசி செலுத்தும் திட்டம் சுமுகமாகச் செல்வதாகத் தெரிவித்துள்ள மன்சுக் மாண்டவியா, "அக்டோபர் முதல் நவம்பருக்குள் மேலும் நான்கு இந்தியத் தடுப்பூசி நிறுவனங்கள், உள்நாட்டுத் தடுப்பூசிகளைத் தயாரிக்கத் தொடங்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. அது உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும். பயோலொஜிக்கல் - இ, நோவார்டிஸ் தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். ஸைடஸ் காடிலா தடுப்பூசி விரைவில் நிபுணர் குழுவிடமிருந்து விரைவில் ஒப்புதலைப் பெறும்" எனவும் கூறியுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி.... கேரளா விரைகிறது மத்தியக் குழு! 

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

One person in Kerala confirmed with Monkey Pox....Kerala rushes Central Committee!

 

 

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதியான நிலையில் அம்மாநிலத்திற்கு விரைகிறது மத்தியக் குழு. 

 

"ஜூலை 12- ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டது. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்" என்று கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

 

இந்த நிலையில், கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதியான நிலையில் அம்மாநிலத்திற்கு விரைகிறது மத்திய குழு. கேரள சுகாதாரத்துறைக்கு உதவுவதற்காக மத்திய சுகாதாரத்துறை சார்பில் குழு அனுப்பி வைக்கப்படவுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டுதலை மத்தியக் குழு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

மதுரை எய்ம்ஸுக்கு ஜப்பான் நிறுவனம் ரூபாய் 1,500 கோடி ஒதுக்கீடு! 

Published on 05/05/2022 | Edited on 05/05/2022

 

Japanese company allocates Rs 1,500 crore to Madurai AIIMS

 

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஜப்பானைச் சேர்ந்த ஜைக்கா நிறுவனம் முதற்கட்டமாக ரூபாய் 1,500 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

 

மதுரை மாவட்டம், தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க, கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைக் கட்ட மொத்த திட்ட மதிப்பான ரூபாய் 1,977 கோடியில், தற்போது ரூபாய் 1,500 கோடியை ஜைக்கா நிறுவனம் ஒதுக்கியுள்ளதாகவும், மீதமுள்ள நிதியை வரும் அக்டோபர் மாதம் 26- ஆம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.