Skip to main content

கரோனா வைரஸ் எதிரொலி... டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மூடல்!

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

கரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் 1,09,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்று காரணமாக 3800 பேர் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் மாதம் முதல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் கரோனா, தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 62 ஆக உயர்ந்துள்ளது.

 

coronavirus issue - Delhi schools and colleges Closed

 



இந்நிலையில் இந்த வைரஸ் பரவி வருவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் வரும் 31ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.   

 

 

சார்ந்த செய்திகள்