Skip to main content

தோல்வி அடைந்த வியூகம்! பிரசாந்த் கிஷோருக்கு தாக்கரே கொடுத்த டோஸ் !

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோருக்கு செம டோஸ் கொடுத்திருக்கிறது மகாராஷ்டிராவின் ஆளும் கட்சியான சிவசேனா. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து மகாராஷ்டிராவின் முதல்வராகியுள்ள சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே, சிவசேனாவின் தேர்தல் வியூக வல்லுனராக செயலாற்றிய பிரசாந்த் கிஷோரை, தனது முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவில்லை.

 

 Failure Strategy! thackray dose for Prashant Kishore!


மாநில நலன்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உத்தவ்தாக்கரே கவனம் செலுத்தி வரும் அதே வேளையில், தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோருக்கு செம டோஸ் கொடுத்திருக்கும் சம்பவம்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் மத்தியில் பரபரப்பாக எதிரொலிக்கிறது. இது குறித்து விசாரித்தோம்.

நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 124 இடங்களில் போட்டியிட்ட சிவசேனா கட்சியால், வெறும் 56 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இந்த தேர்தலில் சிவசேனாவுக்காக தேர்தல் வியூக வகுப்பாளராகவும் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார் ஐ.-பேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர்..

பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஆலோசனைகளின்படியே தேர்தல் களத்தில் களமாடியது சிவசேனா. 124 இடங்களில் போட்டியிடும் சிவசேனா, 115 இடங்களை கைப்பற்றும் என நம்பிக்கையை கொடுத்து, தனது யோசனைகளின்படிதான் தேர்தல் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என கட்டளையிட்டிருந்தார் கிஷோர். அதன்படியே சிவசேனா தலைமையும் நடந்துகொண்டது.

 

 Failure Strategy! thackray dose for Prashant Kishore!


ஆனால், பிரசாந்த் கிஷோர் உறுதி தந்ததுபோல் தேர்தல் முடிவுகள் அமையவில்லை. வெறும் 56 இடங்களை மட்டுமே கைப்பற்றியது சிவசேனா. முந்தைய சட்டமன்ற தேர்தலில் 63 இடங்களை சிவசேனா கைப்பற்றியிருந்த நிலையில் தற்போதைய தேர்தலில் அதைவிட 7 இடங்கள் குறைந்ததில் தாக்கரே அப்-செட்டானார். சிவசேனாவின் இந்த பின்னடைவை தாக்கரேவால் ஜீரணிக்க முடியவில்லை.

இது குறித்து மூத்த தலைவர்களிடம் தாக்கரே விவாதித்த போது,  ’’ சிவசேனாவின் தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை நியமித்ததுதான் தவறு. அவரது வியூகம் சமீபகாலமாக எந்த மாநிலத்திலும் எடுபடவில்லை. அவர் போட்டுக்கொடுத்த யோசனைகள் அனைத்துமே தேர்தல் களத்தில் நமக்கு எதிராக மாறிவிட்டன. மாநிலத்தின் கள நிலவரம் அறிந்தவராக அவர் இல்லை. அதனால் நமது பின்னடைவுக்கு முழு காரணம் பிரசாந்த் கிஷோரின் யோசனைகள்தான். அவரது யோசனைகளை புறந்தள்ளியிருந்தால் 90 இடங்களுக்கு மேல் ஜெயித்திருப்போம் ‘’ என விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள் சிவசேனாவின் மூத்த தலைவர்கள். இதனைத் தொடர்ந்து கிஷோரை தொடர்புகொண்டு செம டோஸ் கொடுத்துள்ளார் தாக்கரே.

இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணியை முறித்துவிட்டு, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் புதிய கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு அக்கட்சிகளின் ஆதரவுடன் முதல்வரானார் உத்தவ்தாக்கரே. அவரது பதவியேற்பு நிகழ்வை மிக பிரமாண்டமாக நடத்தியது சிவசேனா. அந்த விழாவுக்கு பிரசாந்த் கிஷோர் அழைக்கப்படவில்லை. கிஷோரை அழைப்பது குறித்து சிவசேனா தலைவர்கள் சிலர் தாக்கரேவிடம் கேட்டபோது, அவரை அழைக்க வேண்டாம் என கடுமையாக சொல்லிவிட்டதாக மும்பை அரசியலில் எதிரொலிக்கிறது.

தாக்கரே தன்னை அழைக்காததில் ஆத்திரமடைந்த பிரசாந்த் கிஷோர், முதல்வராகியுள்ள உத்தவ்தாக்கரேவுக்கு வாழ்த்துகளைச் சொல்லாமல், சோனியாவுக்கும் காங்கிரசுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனையும் தாக்கரேவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர் சிவசேனா தலைவர்கள். இந்த நிலையில்தான், மும்பை அரசியலில் இனி தனக்கு மரியாதை இருக்காது என கருதி, தமிழகத்தின் அரசியல் கட்சிகள் மீது பார்வையைத் திருப்பியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். எந்த கட்சிகள் அவரது வலையில் விழப்போகிறதோ ? என கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.