Skip to main content

மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் ஜியோ

Published on 31/03/2018 | Edited on 31/03/2018

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவையை ஒரு வருடம் நீடித்துள்ளது அது பற்றிய வரைவில். 

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் திட்டத்தில் ரூபாய் 99 செலுத்தி ஏற்கனவே உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு மேலும் ஒரு வருட இலவச சேவை தொடரும் எனவும், மார்ச் 31-ஆம் தேதிக்குள் (இன்றுக்குள்) ரூபாய் 99 செலுத்தி ஜியோ பிரைமில் சேர்பவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் கூறியுள்ளது.
 

jio prime

 

ஏற்கனவே ஜியோ  பிரைமில் ரூபாய் 99 செலுத்தியவர்கள் மார்ச் 31 க்கு பிறகு மீண்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் ஏப்ரல் மாதத்திற்கு பின் ஜியோ பிரைமில் இணைபவர்கள் ரூபாய் 99 உறுப்பினர் கட்டணமாக செலுத்தவேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

இந்த இலவச சேவை அடுத்த 12 மாதங்கள் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வரையில் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை  17 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்