Skip to main content

"கரோனா அச்சம்" காஷ்மீரில் பள்ளிகளுக்கு விடுமுறை; பயோமெட்ரிக் வருகை பதிவுக்கு தடை!

Published on 07/03/2020 | Edited on 07/03/2020


சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இருந்த போதிலும் இதுவரை இந்தியாவிலும் 31 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது. 



சில நாடுகளில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பெரிய அளவில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் உலக நாடுகளில் உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சீனாவுக்கு சிறிதும் தொடர்பில்லாத நாடுகளில் கூட கொரோனா வைரஸ் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் சுகாதார அமைச்சர் தலைமையில் இதுவரை பலமுறை நடந்து முடிந்துள்ளது. மேலும் காஷ்மீரில் கரோனா பயம் தற்போது அதிகமாக இருந்துவரும் நிலையில், மாநிலத்தில் உள்ள சில குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பயோ மெட்ரிக் வருகை பதிவுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்