Skip to main content

இந்தியாவில் 31 ஆயிரம் பேருக்கு 'கரோனா' 

Published on 29/04/2020 | Edited on 29/04/2020
 'Corona' for 31 thousand people in India


கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.


இந்நிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 31,332 என்ற எண்ணிக்கையில் இருந்து, 31,787 என்ற எண்ணிக்கைக்கு உயர்ந்துள்ளது. அதேபோல் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,689-லிருந்து 7,797 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,007 என்ற எண்ணிக்கையில் இருந்து 1,008  ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 9,318 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 400 ஆக உள்ளது. குஜராத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,774 என்ற அளவிலும், டெல்லியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,314 என்ற அளவிலும் உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்