Skip to main content

கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! வெல்வாரா குமாரசாமி?

Published on 25/05/2018 | Edited on 25/05/2018

 


கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

அண்மையில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டனர். ஆனால் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை சேர்ந்த எடியூரப்பாவை முதலமைச்சராக பதிவியேற்க அளுநர் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தினால் எடியூரப்பா பதவி விலகினார்.

இதையடுத்து, மஜத தலைவர் குமாரசாமி முதல்வராக பதவியேற்றார். அவருடன் துணை முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் பதவியேற்றார்.

இவர்கள் இருவரை தவிர மேலும் 32 பேர் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர். இதில் காங்கிரசுக்கு 22 மந்திரி பதவிகளும், மஜதவுக்கு 12 மந்திரி பதவிகளும் அடக்கம். சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து பேரவையில் இன்று குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு முடிவடைந்ததும் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு...கர்நாடக சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு!

Published on 28/07/2019 | Edited on 28/07/2019

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 14 பேரை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிரடியாக அறிவித்தார். ஏற்கனவே 3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு. முதல்வர் எடியூரப்பா நாளை காலை 10.00 மணியளவில் சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க உள்ள நிலையில், சபாநாயகர் அதிரடி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

KARNATAKA MLAS DISQUALIFIED STRENGTH INCREASE ASSEMBLY SPEAKER RAMESH KUMAR ANNOUNCED

 

 

 

கர்நாடக சட்டப்பேரவை மொத்தம் 224 உறுப்பினர்களை கொண்டது. அதில் பாஜகவிற்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா எளிதில் வெற்றி பெறுவார். தமிழகத்தை பின்பற்றி இது போன்ற நடவடிக்கையை கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் எடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்குமாறு சபாநாயகர் ரமேஷ்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

 

 

 

 

Next Story

கர்நாடக சட்டப்பேரவையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு- தேதியை அறிவித்த முதல்வர் எடியூரப்பா!

Published on 26/07/2019 | Edited on 26/07/2019


கர்நாடகா மாநிலத்தின் நான்காவது முறையாக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். பெங்களுருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் பாஜக கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

 

karnataka assembly floor test date announced cm yeddiurappa

 

 

பதவியேற்புக்கு பின் பெங்களுருவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பா, ஜூலை 29 ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் காலை 10.00 மணியளவில் பெரும்பான்மை நிரூபிக்க உள்ளதாக தெரிவித்தார். ஆளுநர் முதல்வர் எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஜூலை 31 ஆம் தேதி காலக்கெடு நிர்ணயித்த நிலையில், முதல்வர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் கர்நாடக அமைச்சரவை குறித்து பாஜகவின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை செய்து முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

karnataka assembly floor test date announced cm yeddiurappa

 

அதே போல் கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபித்தவுடன், நிதி மசோதா தாக்கல் செய்யப்படும் என கூறினார். கர்நாடக சட்டப்பேரவை மொத்தம் 224 உறுப்பினர்களை கொண்டது. இதில் பாஜகவுக்கு 105 உறுப்பினர்களும், காங்கிரஸ் மற்றும் ம.ஜ.க கூட்டணிக்கு 100 உறுப்பினர்களும், அதிருப்தி உறுப்பினர்கள் 14 பெரும், மூன்று பேர் தகுதி நீக்கம், இரண்டு சுயேட்சை உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் மீண்டும் இரண்டாவது முறையாக கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.