13-ம் தேதி கேரளாவில் முழு அடைப்பு
கேரள மாநிலத்தில் வரும் 13-ம் தேதி முழுஅடைப்பு நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தை கண்டித்து முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் அவர் கூறும் போது மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், ஜி.எஸ்.டியின் செய்தி தொடர்பாளராக மாறிவிட்டர் என்றும் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ள முழு அடைப்பு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.