Skip to main content

ஒரு இளம் நடிகையின் எம்.பி கனவை கலைத்த பாஜக

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

கன்னட திரையுலகில் பிரபலமாகிவருபவர் நடிகை நிஷா. கன்னடத்தில் அமர், பேஸ் டூ பேஸ், தேவா, ஐ லவ் யூ, கே.ஜி.எப் 2, தேவகி, போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர், அதோடு மாடலிங்கும் செய்து வருகிறார். இவருக்கு திடீரென அரசியல் மீது ஆசைவந்தது. அதற்கு காரணம் அவரது குடும்பம். நிஷாவின் அப்பா சி.பி.யோகேஸ்வர், கர்நாடாகா மாநிலம் சென்னப்பட்டிணம் தொகுதியின் எம்.எல்.ஏவாக, எம்.பியாக இருந்தவர். கடந்த எடியூரப்பா ஆட்சிக்காலத்தில் வனத்துறை அமைச்சராக இருந்தவர், இவரது சகோதரர் தற்போதும் உள்ளாட்சி பொறுப்பில் இருந்து வருகிறார்.

 

mp seat

 

யோகேஸ்வர்ரை, பெங்களுரூ ரூரல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நிறுத்த முடிவு செய்தது. இதனை அவரிடம் தெரிவித்தபோது, எனக்கு சீட் வேண்டாம் என் மகளுக்கு தாங்கள் என தனது மகள் நடிகை நிஷாவை முன்னிறுத்தியது. 29 வயதாகும் நிஷாவின் அழகு, சினிமா மூலம் அவருக்கு கிடைத்துள்ள பிரபலத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்த பாஜக தலைமை சரியென தலையாட்டியது. நிஷாவும் எம்.பி கனவில் பிரச்சாரத்துக்காக புதிய போட்டோக்களை எடுக்க துவங்கினார். சமூக வளைத்தளங்களில் இவரது புகைப்படங்கள் பரவியது, செய்தித்தாள்கள் இவரைப்பற்றி அலசி எழுத துவங்கின. இவரது ரசிகர்கள் தங்களது அழகு, கனவுக்கன்னி எம்.பியாகப்போகிறார் என கர்நாடகாவில் குதுகலித்தார்கள்.

 

 

இந்நிலையில் மார்ச் 25ந்தேதி வெளிவந்த பாஜக பட்டியலில் பெங்களுரூ ரூரல் தொகுதி வேட்பாளராக அஸ்வத்நாராயணன் என்பவரை அறிவித்தது. இது நடிகை நிஷா தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. இதுப்பற்றி பாஜக மேலிடத்திடம் யோகேஸ்வர் கேட்டபோது, பெரும் தொழிலதிபரும், அமைச்சராகவும் உள்ள காங்கிரஸ் சிவக்குமாரின் தம்பி டி.கே.சுரேஷ்சை ரூரல் தொகுதியில் காங்கிரஸ் களம்மிறக்கியுள்ளது. அவரை எதிர்த்து வெற்றி பெற வேண்டும்மென்றால் சமூக ரீதியாக பலமான வேட்பாளர் தேவை. நீங்கள் பிராமனர். அதனால் தான் கௌடா சமூகத்தை சேர்ந்த அஸ்வத் நாராயணனை நிறுத்தியுள்ளோம் எனச்சொல்லியுள்ளார்கள்.

 

 

தனது ஆசை மகளின் எம்.பி கனவு கரைந்துவிட்டதே என நொந்துப்போய்வுள்ளார் யோகேஸ்வர். அவரைவிட அவரது மகள் நடிகை நிஷா மன வேதனையில் உள்ளாராம். தன்னை எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்போகிறார்கள் என்கிற சந்தோஷத்தில், சக திரைக்கலைஞர்களுக்கு விருந்துயெல்லாம் வைத்துள்ளார். இப்போது சீட் இல்லை என்றாகிவிட்டதால் மனம் கசந்து சோகமாக உள்ளார் என்கிறார்கள்.

 

தங்களது 28 வயது கனவுக்கண்ணியை எம்.பி சீட் தருவதாக ஆசை வார்த்தை கூறி பாஜக ஏமாற்றியதை நினைத்து கண்ணீர் வடித்துவருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.