Skip to main content

குலுக்குச் சீட்டு முறையில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்!

Published on 02/12/2017 | Edited on 02/12/2017
குலுக்குச் சீட்டு முறையில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்!

உபி. உள்ளாட்சித் தேர்தலில் குலுக்குச் சீட்டு முறையில் பாஜக வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.



உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளாட்சித்தேர்தல் முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மதுரா தொகுதியில் உள்ள 56ஆவது வார்டில் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இதில் இருவரும் 874 வாக்குகள் பெற்று போட்டி ‘டிரா’ ஆனது. இதனால், யார் வெற்றிபெற்றார் என்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், இரண்டு வேட்பாளர்களின் பெயர்களும் துண்டு சீட்டுகளில் எழுதி குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் மீரா அகர்வால் வெற்றி வெற்றதாக அறிவித்தார். சரிபாதி வேட்பாளர்களின் அதிருப்தியுடன் பாஜக வேட்பாளர் அந்தப் பகுதியில் பொறுப்பு வகிப்பார் என்பது கவனிக்கத்தக்கது.

இதற்கு முன் இந்த ஆண்டு மும்பையிலும், 2014ஆம் ஆண்டு மேகாலயாவிலும் இதே முறையில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது நினைவுகூரத் தக்கது.

சார்ந்த செய்திகள்