Skip to main content

மீண்டும் அதிரடி காட்டும் கரோனா... அதிர்ச்சியில் ஆந்திரா!

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

jkl

 

இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவியது. ஆரம்பத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த ஆந்திராவில் தற்போது கரோனா மீண்டும் வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,765 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 9,18,548 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 7,279 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

 

இன்று மட்டும் 1,245 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 11 பேர் இன்று மட்டும் இந்த நோய்த் தாக்குதலால் பலியாகியுள்ளனர். 8,94,508 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு படிப்படியாக குறைந்து வருவது அம்மாநில மக்களுக்கு ஒரு ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்