Skip to main content

ஐ.பி.எல். டிக்கெட் வாங்கக் கூட ஆதார் கட்டாயமா?

Published on 06/05/2018 | Edited on 06/05/2018

அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பலவற்றிற்கு ஆதாரைக் கட்டாயமாக்கி இருப்பது குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், ஐ.பி.எல். டிக்கெட்டுகள் வாங்கவும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

pune

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள், மேரா ஈவண்ட்ஸ் என்ற இணையதளத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் வாயிலாக மாதவி குர்ரம் என்பவர் டிக்கெட் வாங்க முயற்சி செய்தபோது, ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவிடவேண்டும் என கேட்டதால் அதிருப்தி அடைந்துள்ளார். அரசு சார்ந்த விவகாரங்கள் என்றால் சரி.. ஐ.பி.எல். போட்டிகளுக்கும் ஆதார் கட்டாயம் என்றால் என்ன செய்வது? என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். 

 

டிக்கெட் விற்பனையில் நடக்கும் மோசடிகளைத் தடுப்பதற்காகவே ஆதார் எண் கேட்கிறோம். ஆதார் எண் பாதுகாப்பிற்காக மட்டுமே; அதை என்கிரிப்ட் செய்து பத்திரமாக வைத்துக்கொள்வோம் என மேரா ஈவண்ட்ஸ் விளக்கம் அளித்தது. ஆனால், மைதானத்திற்குள் ஆதார் குறித்த எந்தவித சோதனைகளுக்கும் வாய்ப்பில்லை. ஆதார் எண் கேட்பதற்கான தேவை என்ன இருக்கிறது? என்ற கேள்வி எழுவதற்கு இதுவொன்றே போதுமானது.

 

aadhaar

 

‘சிம் கார்டுகள் வாங்கவே ஆதார் தேவையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆதாரைக் கட்டாயமாக்குமாறு சட்டம் சொல்கிறது. ஆனால், சில விஷயங்களில் அதை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. தனிநபரின் தகவல்கள் பாதுகாப்பாக இருந்தால் இந்த குழப்பங்களுக்கு இடமில்லாமல் போகும்’ என இணையதள ஆராய்ச்சியாளர் ஸ்ரீனிவாச கோடாலி தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதார் தகவலை திருடி வாக்கு சேகரிக்கும் பாஜக? - விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

 

ஆதார் தகவலை திருடி வாக்கு சேகரிக்கும் பாஜக? - விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!


தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் பூத் அளவிலான வாக்காளர்களுக்கு பாஜக வாட்ஸ்-அப் குழுவில் இணையுமாறு இணைப்புடன் (லிங்) குறுஞ்செய்திகள் வருவதாகக் கூறியுள்ளார்.


மேலும் அவர், ஆதார் அட்டையில் அளிக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணில் மட்டுமே அவ்வாறான குறுஞ்செய்திகள் வருவதாகவும், மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆதார் தகவல்களைத் திருடியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து ஏற்கனவே புகார் அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


இந்த வழக்கை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம், இந்தப் புகார் மிகத் தீவிரமானது எனக் கூறி, இதுகுறித்து விசாரித்து வெள்ளிக்கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 

 

 

 

Next Story

"இருவரும் மோதி பார்க்கலாமா என தோனியிடம் சவால் விட்டேன்" - பிராவோ பகிர்ந்த சுவாரசிய தகவல்....

Published on 20/04/2020 | Edited on 20/04/2020

2018 ஐ.பி.எல். தொடரின்போது தோனிக்கும், தனக்கும் இடையே நடைபெற்ற ஓட்டப்போட்டிக்கு பின்னால் உள்ள சுவாரசிய காரணத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் பிராவோ.

 

story behind dhoni and bravo running race

 

இன்ஸ்டாகிராம் தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய பிராவோ, "2018 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் ஒரு போட்டியின்போது, தோனி என்னை வயதானவர், வயதானவர் எனக்கூறி சீண்டிக்கொண்டே இருந்தார். மேலும், எனக்கு வயதாகிவிட்டதால்தான் வேகமாக ஓடமுடியவில்லை எனக்கூறி கிண்டல் செய்தார். அப்போது நான் அவரிடம், இருவரும் ஆடுகளத்தில் ஓடிப் பார்க்கலாமா, யார் வேகமாக ஓடுகிறார்கள் என்று பார்ப்போம் என்றேன்.
 

 nakkheeran app



முதலில் அதற்கு மறுத்த தோனி பின்னர் ஒப்புக்கொண்டார். ஐ.பி.எல். தொடர் முடிந்தபிறகு சவாலை வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் போட்டியின் நடுவே இந்த சவாலால் யாராவது ஒருவருக்குத் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இறுதிச்சுற்றுக்குப் பிறகு ஓட்டப் பந்தயத்தை வைத்துக்கொள்ளலாம் என்றேன். அப்படிதான் அந்த போட்டி நடைபெற்றது. அது மிகவும் கடுமையான போட்டி. நூலிழையில் அவர் என்னைத் தோற்கடித்தார். அவர் விரைவாக ஓடினார்" என்று கூறியுள்ளார்.