Skip to main content

ஒரே நேரத்தில் கையை அறுத்துக்கொண்ட 14 மாணவிகள்!

Published on 18/09/2023 | Edited on 18/09/2023

 

14 students incident their hands at the same time karnataka

 

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தின் தண்டேலி அருகே பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 9 ஆம் மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 14 பேரில் தங்களது கைகளை பிளேடு போன்ற கூர்மையான பொருள் கொண்டு அறுத்துக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இது குறித்து தலைமையாசிரியருக்கு தெரியவர, அந்த 14 மாணவிகளையும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

 

இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து மாணவிகளையே விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் மாணவிகள் டாஸ்க் விளையாட்டு விளையாடியதாகவும், அப்போது அந்த டாஸ்கில் கூறப்பட்டுள்ளது படி ஒரே நேரத்தில் மாணவிகள் கையை அறுத்துக்கொண்டதாகத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்