Skip to main content

கேரளாவில் இரண்டாவது நாளாக 30 ஆயிரத்தை தாண்டிய தினசரி கரோனா பாதிப்பு!

Published on 26/08/2021 | Edited on 26/08/2021

 

corona

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், கேரளாவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கேரளத்தில் நேற்று மட்டும் ஒரேநாளில் 31,445 பேருக்கு கரோனா உறுதியானது. இது நாடு முழுவதும் நேற்று பதிவான கரோனா எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70 சதவீதமாகும்.

 

இந்தநிலையில் இன்று மீண்டும் கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 30,007 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 162 பேர் உயிரிழந்துள்ளனர். ஓணம் பண்டிகைக்கு அளிக்கப்பட்ட தளர்வுகளால், கரோனா பரவல் அதிகரித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்