குஜராத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 137 கிரிமினல்கள்!
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் 137 பேர் கிரிமினல்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் 977 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தல் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய ஜனநாயக மறுசீரமைப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஆய்வில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் 137 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் பலர் கொலை, ஆள்கடத்தல் மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆவர்.
இதில் பாஜகவினர் 10, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 20, பகுஜன் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்கள் 8 என்பது குறிப்பிடத்தக்கது.