Skip to main content

வகுப்பறை பிரச்சனை: 10 ஆம் வகுப்பு மாணவனை சுட்டுக்கொன்ற சக மாணவன்!

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

up

 

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டம் ஷிகார்பூரில், 10ஆம் வகுப்பு படித்து வந்த இரண்டு மாணவர்களிடையே அமருமிடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆசிரியர் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து அமர வைத்துள்ளார்.

 

இருப்பினும் ஆத்திரம் அடங்காத ஒரு மாணவன், துப்பாக்கியை எடுத்துவந்து தன்னிடம் தகராறில் ஈடுபட்ட மாணவனை மூன்றுமுறை சுட்டுள்ளான். இதில் அந்த மாணவனின் தலை, நெஞ்சு மற்றும் வயிற்றில் குண்டு பாய்ந்து உயிரிழந்தான். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன், வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே அங்கிருந்து ஓட முயல, அப்பள்ளியின் ஆசிரியர்கள் அவனை மடக்கிப் பிடித்து, துப்பாக்கியைப் பிடுங்கியதோடு போலீஸாரிடமும் ஒப்படைத்தனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீஸார், "துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன், விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் தனது (ராணுவத்தில் பணியாற்றும்) மாமாவின் துப்பாக்கியை எடுத்துவந்து, சக மாணவனை சுட்டதாகவும், அந்த மாணவனின் பையில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

 

துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, மாணவன் பயன்படுத்திய துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வகுப்பறையில் அமரும் இடம் தொடர்பான பிரச்சனையில், 10 ஆம் வகுப்பு மாணவன், சக மாணவனை சுட்டுக் கொன்றிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்