Skip to main content

ராஜினாமா செய்ய தயக்கம் - ரெய்டு பயத்தில் தமிழக எம்‌பி‌-கள் !

Published on 29/03/2018 | Edited on 29/03/2018
mp

 

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் கொடுத்த 6 வார காலக்கெடு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஆனால் மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை.

 

காவேரி மேலாண்மை  வாரியம் அமைக்க கோரி கடந்த 18 நாட்களாக நாடாளுமன்றத்தில் தமிழக எம்‌பி-கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அதிமுக எம்‌பி நவநீத கிருஷ்ணன், “காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க பட வில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வோம்” என்று அறிவிக்கவே பரபரப்பாக பேசபட்டது. ஆனால் தற்கொலை எல்லாம் செய்ய வேண்டாம் எம்‌பி பதவியை ராஜினாமா செய்தால் மட்டுமே போதும் என்று பல தரப்பிலிருந்து பேச்சுகள் வந்தன.

 

இந்த நிலையில் இன்று எம்‌பி குமார், அருண் மொழிதேவன், ஹரி ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசி இருக்கிறார்கள். இந்த பேச்சு வார்தையின் போது ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் டெல்டா பகுதியை சேர்ந்த எம்‌பி-களை மட்டும் ராஜினாமா செய்யச் சொல்லும் முடிவில் முதல்வர் இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி செய்தால் எம்‌பி-களுக்குள் பிரச்சனை ஏற்படும் என்று சொல்லவே இறுதி முடிவு எடுக்கப்படாமல் இருக்கிறது.

 

இது ஒரு புறம் இருக்க அதிமுக எம்‌.பி-களை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யச் சொல்லும் பட்சத்தில் மத்திய அரசு ரெய்டு செய்து விடும் என்று பயம் இருப்பதாக டெல்லியில் இருக்க கூடிய எம்‌.பி.கள் சொல்கிறார்கள். அதிமுக தலைமையின் உத்தரவுக்காக டெல்லியில் எம்‌பிக்கள் காத்துகிடக்கிறார்கள்.  டி‌டி‌வி ஆதரவு எம்‌பி கோவை நாகராஜன், சசிகலா அனுமதித்தால் திங்கள் அன்று ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.       
 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் ராஜினாமா; இ.பி.எஸ். மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Karnataka State ADMK Sec Resigns EPS Allegation of sensationalism 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் தனது பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மிகவும் நொந்து போய் இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் படத்தை மட்டும் பெரிதாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். படத்தை ஸ்டாம்ப் ஸைசில் வைத்துக் கொண்டிருக்கிறார். இது போன்று வேறு யாராவது வைத்திருந்தால் கூட பரவாயில்லை. எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்தியும், அதிமுக கொடியை பிடித்துக் கொண்டு எம்.ஜி. ஆரை சிறுமைப்படுத்துவது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று ஆகும். ஒவ்வொரு எம்.ஜி.ஆர் ரசிகரும் வேதனையோடும், கொதிப்போடும் இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் விருப்பமனு கொடுக்கப்பட்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.  கர்நாடக சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக சார்பில் போட்டியிட அனுமதிக்கவில்லை. இவ்வாறு கட்சி தலைமையே கட்சியை அழிக்கும் வேதனைக்குரிய செய்தியை அறிந்த பின்னரும் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பதவியில் இருந்து என்ன பயன்” எனத் தெரிவித்தார். 

Next Story

பா.ஜ.க.வில் இணைந்த கவுரவ் வல்லப்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Gaurav Vallabh joined BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த கவுரவ் வல்லப் அக்கட்சியில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தது குறித்து கவுரவ் வல்லப் கூறுகையில், “மல்லிகார்ஜுன கார்கேவுக்கு விரிவான கடிதம் எழுதி, எனது உணர்வுகள் அனைத்தையும் வெளிப்படுத்தினேன். கூட்டணியின் சில பெரிய தலைவர்கள் சனாதனம் மற்றும் கட்சியின் நிலைப்பாட்டை எதிர்த்தபோது காங்கிரஸ் கட்சியின் மௌனம் என்னை காயப்படுத்தியது. ராமர் கோவில் மீதும், நம் நாட்டில் காங்கிரஸ் கட்சி நாட்டின் வளத்தை உருவாக்குபவர்களை இரவு பகலாக துஷ்பிரயோகம் செய்கிறது. இந்த விஷயங்களை நான் தெளிவாக உணர்ந்து, கட்சி மேடையிலும் பல இடங்களில் இந்த விஷயத்தை எழுப்பினேன்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க. பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் கவுரவ் வல்லப் இன்று (04.04.2024) தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார். முன்னதாக பிரபல குத்துச்சண்டை வீரரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜேந்தர் சிங் நேற்று (03.04.2024) பா.ஜ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.