Skip to main content

குட்கா ஊழல் !   சி.பி.ஐ.விசாரணையில் உயரதிகாரிகள் ! 

Published on 07/02/2019 | Edited on 07/02/2019
ge

                         

   குட்கா ஊழல் குறித்த சி.பி.ஐ.விசாரணை சத்தமில்லாமல் வேகமெடுத்து வருகிறது. தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்காவை தயாரித்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்த மாதவராவை கைது செய்தது சி.பி.ஐ.!  குட்காவை அனுமதித்ததில் தமிழக காவல்துறையின் கீழ்நிலை அதிகாரிகள் தொடங்கி உயரதிகாரிகள் வரை பல லட்சங்கள் லஞ்சம் கொடுக்கப்பட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். 

 


          வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்திய சி.பி.ஐ.அதிகாரிகள், பலரிடமும் விசாரணை நடத்தியதையடுத்து, கடந்த வாரம் சென்னை மாநகர கூடுதல் ஆணையர் தினகரன், சி.பி.சி.ஐ.டி.துறையின்  ஐ.ஜி. ஸ்ரீதர், இதே துறையின் டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் ஆகிய 3 உயரதிகாரிகளை அழைத்து சுமார் 6 மணி நேரம் தனித்தனியாக விசாரித்தனர்.  அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, தற்போதைய விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமார், குட்கா உரிமையாளர் மாதவராவ் ஆகியோர் ஏற்கனவே கொடுத்திருந்த வாக்குமூலங்களின் அடிப்படையில் 200-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு காவல்துறை உயரதிகாரிகளை குடைந்தெடுத்துள்ளது சி.பி.ஐ.! பல கேள்விகளுக்கு பதில் சொன்ன காவல்துறை உயரதிகாரிகள், ‘’  லஞ்சத்திற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை. ஆனால், லஞ்சம் விளையாடியது உண்மை ’’ என சொன்னதாக ஐ.பி.எஸ். வட்டாரங்களில் தகவல்கள் கசிகின்றன.  

 


            இந்த நிலையில், குட்கா ஊழல் நடந்த காலக்கட்டத்தில் சென்னை மாநகர காவல்துறையின் உளவுப் பிரிவு டி.சி.யாகவும் தற்போது மத்திய மண்டல ஐ.ஜி.யாகவும் இருக்கும் வரதராஜுலுவையும் வரவழைத்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள் சி.பி.ஐ.அதிகாரிகள். இவரிடமிருந்து பல விசயங்களை கறந்திருப்பதாக சொல்கிறது சி.பி.ஐ.வட்டாரம் ! இந்த நிலையில், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கும், சென்னை மாநக காவல்துறையின் முன்னாள் கமிஷ்னர் ஜார்ஜுக்கும் விரைவில் சம்மன் அனுப்பி விசாரிக்க சி.பி.ஐ. முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் (படங்கள்)

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

தமிழ்நாட்டின் பெருமைகளையும் சட்டப்பேரவையின் மாண்புகளையும் சிதைத்து கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைதாப்பேட்டை வேளச்சேரி மெயின்ரோட்டிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கிய முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழ  உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் வாசுகி உள்ளிட்ட கட்சித்தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 

 

 

Next Story

"அதானி உலகப்பணக்காரராக ஆனது மோடியின் சாதனை" - கே.பாலகிருஷ்ணன் 

Published on 05/09/2022 | Edited on 05/09/2022

 

"Adani became the world's richest man is Modi's achievement" - CPIM K. Balakrishnan

 


அதானி உலகப்பணக்காரராக ஆனதை மோடியின் சாதனையாக பார்க்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 

திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, " ஏன் இலவசங்களை பறிக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள். இலவசங்களை பறித்து கார்பரேட் நிறுவனங்களை கொழுக்க வைப்பீர்கள். இதை கேள்வி கேட்டல் அண்ணாமலைக்கு கோவம் வருகிறது. அண்ணாமலை நாவடக்கத்தோடு பேச வேண்டும். அவரின் பேச்சு அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

 

உலகப்பணக்காரராக இந்தியர் இருந்தால் எந்த அளவுக்கு நாட்டு மக்களின் பணத்தை அவர் கொள்ளை அடித்து இருக்க வேண்டும். அதானி உலகப்பணக்காரராக வந்தது மோடி அரசின் சாதனை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் இந்தியாபின்னடைவை சந்தித்து வருகிறது. ஆனால் பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டிருப்பதாக மத்திய அரசு மக்களை நம்பவைத்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.