Skip to main content

சேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..! செந்தில்பாலாஜி அதிரடி..!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020
Senthil Balaji

 

 

அதிமுகவில் தற்போதைய சூழ்நிலையில் ஓ.பி.எஸ். அணி, இ.பி.எஸ். அணி, டி.டி.வி.தினகரன் அணி என உள்ளன. மேலும் இந்த மூன்று அணிகளையும் பிடிக்காத ர.ர.க்களும் உள்ளனர். 2021 தேர்தலை சந்திக்க ஓரளவு நெருங்கிவிட்ட நிலையிலும் அதிமுக அணிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாகவே தெரிகின்றன. ஏற்கனவே பெற்ற வெற்றி ஜெயலலிதா ஏற்படுத்திக்கொடுத்தது. தற்போது அதிமுக இப்படி பிரிந்து ஈகோ யுத்தமாக நடைபெறுதால் தேர்தலை சந்தித்தாலும் வெற்றி எப்படி இருக்கும் என்று ர.ர.க்கள் கவலையில் உள்ளனர். 

 

இந்தநிலையில் கரூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிளிலும் திமுக வெற்றி பெறும் என்றதோடு, இந்த சவாலுக்கு நாங்கள் ரெடியாக இருக்கிறோம் என்று அதிரடியாக கூறி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''2021ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் ஆட்சி அமையும். 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும். கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். நான்கு தொகுதிகளிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும். 

 

ஆளும் கட்சிக்காரர்கள் என்கிட்டேயோ அல்லது வேறுயாருக்கிட்டேயோ சேலஞ்ச் பண்றதுக்கு, சவால் விடுவதற்கு, பந்தயம் கட்டுவதாக இருந்தால் சொல்லுங்கள் நாங்க ரெடியா இருக்கிறோம். நாங்கள் சவாலுக்கு ரெடியா இருக்கிறோம். நான்கு தொகுதியிலும் தொகுதிக்கு தலா 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான்கு தொகுதியிலும் வெற்றி பெறுவோம். யாராவது சேலஞ்ச் பண்ணா சொல்லுங்க சேலஞ்ச் பண்ணுவோம்.

 

ஏற்கனவே அரவக்குறிச்சியில் சேலஞ்ச் பண்ணினோம். ஒருத்தர் வீர வசனம் பேசினார். டெபாசிட் வாங்கிவிட்டால் நான் அரசியலைவிட்டு போய்விடுகிறேன் என்றார். இப்ப அந்த வீரவசனமெல்லாம் வரட்டும், களத்திற்கு வரட்டும். இப்ப சொல்றேன், அடிச்சு சொல்றேன் நான்கு தொகுதியிலும் திமுக ஜெயிக்கும், உதயசூரியன் ஜெயிக்கும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர்'' என்றார். 

 

சேலஞ்ச் செய்கிறேன், சவால் விடுகிறேன், பந்தயம் கட்ட தயார் என்று செந்தில் பாலாஜி அறிவித்தது கரூர் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து வந்தவர் என்பதால் மாவட்டத்தில் அதிமுகவுக்கு உள்ள பலம், பலவீனம் எல்லாம் செந்தில்பாலாஜிக்கு தெரியும், அதனால்தான் இவ்வளவு நம்பிக்கையாக சவால் விடுகிறார் என்கின்றனர் திமுகவினர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.