Skip to main content

வில்லன் நடிகர் மீதான பாலியல் புகாரை நடிகை ராணி வாபஸ் பெற்றார்

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
rani

 

நடிகர் சண்முகராஜன் மீது அளித்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி. சண்முகராஜன் மன்னிப்பு கேட்டதை அடுத்து அப்புகாரை வாபஸ் பெற்றுள்ளார் ராணி.

 

கமல்ஹாசனின் விருமாண்டி படத்தின் மூலம்  நல்ல நடிகராக அறியப்பட்டவர் சண்முகராஜன்.  இவர் ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.  

 

திரைப்பட நடனக்குழுவில் இருந்த ராணி,  கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடித்த வில்லுப்பாட்டுக்காரன் படத்தின் மூலம் நாயகி ஆனார். இதன் பின்னர் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் ஓ போடு பாடலுக்கு நடனம் ஆடினார்.  இப்பாடலின் மூலம் உலக அளவில் புகழ் பெற்றார் ராணி.  காதல் கோட்டை படத்தில் ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ பாடலுக்கும் இவர் நடனம் ஆடினார்.   இப்பாடலும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு பெற்றது.  சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தில் ராணி நடித்திருந்த டீச்சர் கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது.   தமிழ் தவிர  தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து வந்த ராணி தற்போது சண்முகராஜன் மீது கூறியுள்ள பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

திரைப்படங்களில் நடித்து வரும் சண்முகராஜன்,  நந்தினி என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார்.   இதே தொடரில் நடிகை ராணியும் நடித்து வருகிறார்.   இத்தொலைக்காட்சி தொடரில் தனக்கு கணவராக நடிக்கும் அந்த சண்முகராஜன், காட்சிகளின் போது தவறான எண்ணத்துடன் தொடுவதாக ராணி புகாரில் கூறியுள்ளார். அடிப்பது போன்ற காட்சிகளில் தன்னை சண்முகராஜன் உண்மையிலேயே அடித்ததாகவும், இதுகுறித்து கேட்டபோது தன்னையும், தனது கணவரையும் சண்முகராஜன் தாக்கியதாகவும் புகாரில் கூறியிருந்தார். படப்பிடிப்பு சமயங்களில் சண்முகராஜன் தன்னுடன் உணவருந்த வருமாறும், தனியாக தங்க அழைத்ததாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்.

 

இதையடுத்து புகாரில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் சண்முகராஜன் செங்குன்றம் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். போலீசார் விசாரணையில் சண்முகராஜன் - ராணி இடையே சமரசம் ஏற்பட்டது.   இதனால் புகாரை வாபஸ் பெற்றார் ராணி.

 

பின்னர் ராணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  சண்முகராஜன் மன்னிப்பு கேட்டதால் புகாரை வாபஸ் பெற்றேன் என்று கூறியுள்ளார்.

 

சண்முகராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாலியல் புகாரில் உண்மையில்லை.  எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு களைந்து சமரசம் ஏற்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்.

 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

விடுதியில் பெண்ணிடம் பணபேரம் -விசாரணைக்கு ஆளான ஸ்ரீவில்லிபுத்தூர் காக்கிகள்!

Published on 15/05/2019 | Edited on 20/05/2019

“நடவடிக்கை எடுத்தால் தூக்கில் தொங்கி உயிரை விடுவேன்..”

விருதுநகர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியிடம் இப்படி பேசி நடவடிக்கையில் இருந்து தப்பியிருக்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமைக் காவலர் மாரிமுத்து.  

 

உயிரை விடும் அளவுக்கு அப்படி என்ன விவகாரம்?

 

 Woman at the hotel... sexual worker... Srivilliputhur catches for investigation onto police

 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் புறக்காவல்நிலைய பாதுகாப்பு அலுவலை மேற்கொண்டு வருபவர் தலைமைக் காவலர் மாரிமுத்து.  பணி நேரத்தில் சீருடை அணிய மாட்டார். உயர் அதிகாரி அறிவுறுத்தினாலும் கேட்க மாட்டார். ஏதோ ஒரு செல்வாக்கில் காவல்துறையில் ‘கெத்து’ காட்டிவந்த அவர், பெண் விவகாரத்தில் சிக்கியதால் விசாரணைக்கு ஆளாகியிருக்கிறார்.  அது என்னவென்றால், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலை ஒட்டிய சன்னதி தெருவில் பட்டர் ஒருவருக்குச் சொந்தமான விடுதி ஒன்று இருக்கிறது. அந்த விடுதியில் பாலியல் தொழில் நடந்துவருவது, ஆண்டாள் கோவிலில்  ‘ட்யூட்டி’ பார்க்கும் ஏட்டு மாரிமுத்துவுக்கு தெரியவந்தது. இதை வைத்துப் பணம் பண்ணலாம் என்று திட்டம் போட்ட அவர், இன்ஸ்பெக்டர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு சோதனை என்ற பெயரில் அந்த விடுதிக்குச் சென்றார். அங்கு பாலியல் தொழில் ஈடுபட்ட இளம் பெண் சிக்கிவிட, அவளை இன்னொரு பெரிய லாட்ஜுக்கு இழுத்துச் சென்றார்கள் ஏட்டு மாரிமுத்துவும் அந்த இன்ஸ்பெக்டரும். அங்கு வைத்து, ரூ.1 லட்சம் தந்தால் விட்டுவிடுவேன் என்று பேரம் நடத்தி, ரூ.50000-க்கு இறங்கி வந்திருக்கிறார்கள் இரு காக்கிகளும். இதையறிந்த பாலியல் தரகர் ஒருவர், விருதுநகர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்றார். பாலியல் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டுவது குறித்து இரு காக்கிகளிடமும் விசாரிக்கும்படி அந்த உயர் அதிகாரி உத்தரவிட, ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை அதிகாரி விசாரணை நடத்தினார். அப்போது, அந்தப் பெண், ரூ.50000 கேட்டு மிரட்டினார் என்று ஏட்டு மாரிமுத்துவைக் கை காட்டியிருக்கிறாள்.   

 

 

விஷயத்தை அறிந்து ‘அட கேவலமே’ என்று நொந்துகொண்ட விருதுநகர் மாவட்ட காவல்துறை அதிகாரி, மாரிமுத்துவை ‘சஸ்பெண்ட்’ செய்வதென்று முடிவெடுத்தார். ஆனாலும், மாரிமுத்துவின் மீது கரிசனம் கொண்டு, சிவகாசி ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்தார். மாரிமுத்துவோ   “என் மீது புகார் அளித்தவர் வீட்டில் உள்ள ஃபேனில் கயிறு மாட்டி தூக்கில் தொங்கி உயிரை விடப்போகிறேன்.” என்று திரும்பத் திரும்ப கெஞ்சியிருக்கிறார்.  உயர் அதிகாரியும் மனமிரங்கி, ஏற்கனவே பார்த்த கோவில் பாதுகாப்பு பணியைத் தொடர்வதற்கு உத்தரவிட்டிருக்கிறார். பாலியல் தொழிலாளியிடம் பேரம் நடத்தியபோது உடன் இருந்த காவல்துறை ஆய்வாளர், நடவடிக்கை என்ற பெயரில்,  இடைத்தேர்தல் நடக்கும் ஒட்டப்பிடாரத்துக்கு,  10 நாட்கள் பணிக்கு  அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். 

 

 

ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. ராஜாவை தொடர்புகொண்டோம். “எனக்கு எதுவும் தெரியாது.” என்று லைனை துண்டித்தார். இந்த விவகாரம் குறித்து நாம் விசாரித்து வருவதை அறிந்த ஏட்டு மாரிமுத்துவின் நண்பர் ஒருவர் “மாரிமுத்து ரொம்ப நல்லவர்.” என்றார் நம்மிடம்.  ‘என்ன நடந்ததென்று  அந்த நல்லவர் விளக்கம் தரட்டும். மாரிமுத்துவை பேசச் சொல்லுங்கள்.’ என்றோம்.  மாரிமுத்துவிடம் பேசிவிட்டு நம்மிடம் “மாரிமுத்து விளக்கம் அளிக்க விரும்பவில்லை. செய்தி போட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.” என்றார்.  

 

 

அந்த பாலியல் தொழிலாளி கட்டிட வேலை பார்த்துவரும் வறுமைச் சூழலில் உள்ளவராம். அவரிடம் போய், ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள் காக்கிகள். 

 

                                                                         -அதிதேஜா

 

Next Story

பெண்ணை வைத்து பாலியல்தொழில்;தலைமறைவான காவலர்!!

Published on 28/11/2018 | Edited on 28/11/2018

 

Disappeared

 

சென்னையில் ஒரு பெண்ணை வைத்து காவலர் ஒருவர் பாலியல் தொழில் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதுதொடர்பாக தலைமறைவான காவலரையும் சம்பந்தப்பட்ட பெண்ணையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

Disappeared

 

சென்னை அமைந்தகரை ரசாக் தோட்ட சாலை, நேரு தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் ஒரு பெண்ணை தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கோயம்பேடு தலைமை காவலர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்த காவலரின்  பெயர் பார்த்திபன் என்பதும் தெரியவந்துள்ளது. 

 

அந்த பெண்ணிடம் வரும் வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்தப் பெண் மற்றும் காவலர் பார்த்திபன் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர்.,தலைமறைவான இருவர் மீதும் விபச்சாரம், கொலை மிரட்டல் மற்றும் வழிப்பறி ஆகிய வழக்குகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Disappeared

 

அந்த  பெண் தங்கியிருந்த வீடு முதலில் என் எஸ் கே நகர்  இரண்டாம்தெரு எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது ரசாக் தோட்ட சாலை, நேரு தெருவில் பாலியல் தொழில் நடந்த வீட்டை கண்டறிந்துள்ளனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவரையும் பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

காவலர் பொறுப்பில் உள்ளவரே இப்படி பாலியல் தொழில் செய்திருக்கும் செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.