Skip to main content

எடியூரப்பாவை எதிர்க்கட்சிகளால் நீக்க முடியும்!

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

ஒரு மிகப்பெரிய ஜனநாயகப் போராட்டத்தை கர்நாடகாவில் தொடங்கியிருக்கிறார்கள். பா.ஜ.க. புதைசேற்றில் சிக்கியிருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இந்தச் சேற்றிலிருந்து எடியூரப்பா எப்படி மீள்கிறார்? அல்லது எடியூரப்பாவையும் பா.ஜ.க.வையும் எதிர்க்கட்சிகள் எப்படி புதைசேற்றில் சிக்கவைக்கப் போகின்றன என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்துவிடும்.

 

yeddy

 

116 எம்எல்ஏக்களை கையில் வைத்திருக்கிற காங்கிரஸ்-ம.ஜ.த. கூட்டணியை ஒதுக்கிவிட்டு, 104 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்திருக்கிற பா.ஜ.க.வை ஆட்சி அமைக்கஅழைத்திருப்பதன் மூலம், அப்பட்டமான ஒரு ஜனநாயகப் படுகொலையை கவர்னர் வஜுபாய் வாலா நடத்தியிருக்கிறார்.

 

இதை எதிர்த்து இரவோடிரவாக உச்சநீதிமன்றத்தை காங்கிரஸ் கட்சி நாடியது. ஆனால், அங்கும் எடியூரப்பா பதவிஏற்புக்கு தடைவிதிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும், அவருடைய பதவியேற்பு இறுதித்தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அதாவது வெள்ளிக்கிழமை இதுதொடர்பான இறுதித்தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆனால், அதற்குள் முழுமையான முதல்வராகவே மாறிவிட்டார் எடியூரப்பா. பதவியேற்றவுடன் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார். தனது பதவியே உறுதியாக இல்லை. அதற்குள் அவருடைய இந்த நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று அரசியல் விமர்சகர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் பா.ஜ.க.வினருக்கு உரைக்கவா போகிறது…

 

congress

 

இப்படிப்பட்ட நிலையில்தான், காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதாதளமும் இணைந்து போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். தங்களுடைய எம்எல்ஏக்களை பாதுகாப்பதுதான் முதல் வேலை என்று கூறியிருக்கிற குமாரசாமி, பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத போக்கை கண்டிக்க எதிர்க்கட்சி முதல்வர்களிடம் ஆதரவு கேட்டிருப்பதாக கூறினார்.

 

பா.ஜ.க.வின் ஜனநாயகப் படுகொலையை மக்களிடம் கொண்டு செல்வோம் என்று காங்கிரஸும் ம.ஜ.த.வும் கூறியிருக்கின்றன. இதோபோன்ற ஜனநாயகப் படுகொலை 1982ல் ஆந்திராவில் நடைபெற்றது. பெரும்பான்மை பலத்துடன் இருந்த ராமராவ் ஆட்சியை வெறும் 10 பேருடன் பிரிந்த பாஸ்கரராவைக் கொண்டு கவிழ்த்தது காங்கிரஸ். அதை எதிர்த்து தனது எம்எல்ஏக்களுடன் மாநிலம் முழுவதும் பயணம் செய்தார். தினமும் 100 முதல் 120 கிலோமீட்டர் வரை அவர் பயணம் செய்து மக்களிடம் பிரச்சாரம் செய்தார்.

 

RamaRao

 

கடைசியில் குடியரசுத்தலைவர் மாளிகையிலேயே தனது ஆதரவு எம்எல்ஏக்களின் பலத்தை நிரூபித்து ஆட்சியில் மீண்டும் அமர்ந்தார். அந்த நிகழ்வு தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட உதவியாக அமைந்தது. தேசிய முன்னணியை அவர் அமைக்க அதுவே அடித்தளமாக இருந்தது.

 

அதுபோல, தங்களுடைய எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு கர்நாடகா முழுவதும் பயணத்தை மேற்கொள்ள சித்தராமய்யாவும் குமாரசாமியும் திட்டமிட வேண்டும். அல்லது இந்தியா முழுவதுமிருந்து எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து, ஆதரவு எம்எல்ஏக்களை மக்கள் மத்தியில் நிறுத்தி பா.ஜ.க.வின் கேவலமான பதவி வெறியை அம்பலப்படுத்த வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பா.ஜ.க.வை எதிர்வரும் தேர்தல்களில் துடைத்தெறிய கர்நாடகம் நல்லதோர் தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.