Skip to main content

திடீரென அனைவரின் மனதையும் கொள்ளையடித்த சூயி!!! மீம்ஸ்களை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்...

Published on 28/06/2018 | Edited on 29/06/2018
tzusu


 

ஒருவர் கவனத்தை திசைதிருப்பி நம்பக்கம் இழுத்துக்கொள்ளவும், ஓவர் நைட்டில் உலக ஃபேமஸ் ஆவதற்கும் சிறந்த தளமாக இருப்பது சமூக வலைத்தளம்தான். பேஸ்புக், இன்ஸ்ட்ராகாம், வாட்சப், ட்விட்டர் என்று பரவி கிடக்கும் சமூக வலைதளங்களின் வழியாக பலர் ஒருவருடன் ஒருவர் இணைந்தும், பிரபலமாகியும் உள்ளனர். அப்படி நம் கவனத்தை திருப்பியவர்கள்தான் ஷெரில், ஓவியா மற்றும் ப்ரியா பிரகாஷ்வாரியர் போன்றோர். சரி பெண்கள்தான் கவனத்தை திசை திரும்புவார்களா என்றால் அதுதான் இல்லை. பல ஆண்களும் இதன்மூலம் பிரபலமாகியுள்ளனர். இதற்கு உதாரணம் சமீபத்தில் ஒருவரை ஸ்பூஃப் செய்தார்கள். இன்று அவரைத் தூக்கி வைத்து கொண்டாட கொண்டாடுகிறார்கள் அவர்தான் பிஜிலி ரமேஷ். இவர்களைப்போல தற்போது அழகிய சிரிப்புடன், கூந்தல் சிறகடிக்க ஒரு தைவானிய முகம் பலரை கவர்ந்து வருகிறது. ப்ரியா கண் அடித்ததற்கே கலங்கியவர்களெல்லாம், சூயி (tzuju) வீடியோவை பார்க்கும்போது “என்னா பொண்ணுடா” என்று புலம்புகின்றனர். 

 

TZUSU

 

 

 


ஒரு வீடியோ பிரபலமாகி வருகிறது. அதில் அம்பை வில்லில் வைத்து குறி பார்த்து, இழுத்து வெளியிட தவறுதலாக  அவரின் கூந்தலை சீண்டி செல்கிறது. இதுதான் அந்த வீடியோவின் விஷயமே. இது எப்படியோ ஒரு மீம் கிரியேட்டர் கண்ணில்பட, அது மளமளவென காட்டுத்தீயாக அந்த கூந்தலின் அழகு பரவச்செய்தது. மீம்ஸ் ஒரு பக்கம் பரவ. நம்மூர் எடிட்டர்கள் அதில் கண், காதல் போன்றவற்றை வர்ணிக்கும் தமிழ் பாடல்களை கோர்த்து மேலும் அழகு கூட்டினர். அதுவும் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ்களாக பரவ ஆரம்பித்தது. இன்றும் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. மீம் கிரியேட்டர்கள், அந்த கொரிய பெண்ணை திருமணம் முடிக்க போவது போல மீம்கள் போட்டுத்தள்ளுகின்றனர். அந்த பெண்ணுக்கு தமிழ் மட்டும் தெரிந்தால் கண்டிப்பாக இவர்களின் மீம்களை பார்த்து, "ஏன் இப்படி அசடு வழிகிறார்கள்" என்றே கேட்டுவிடுவார் அந்தளவிற்கு மீம்ஸ்கள் போடுகிறார்கள்.

 

 

ARCHERY

 

 

 


தமிழக இளைஞர்களை கவர்ந்த இந்த சூயி யார்? கொரியாவில் வளரும் இந்த பெண், பிறந்தது தைவானில் உள்ள தைனான்  என்னும் பகுதியில். பிறப்பால் இவர் ஒரு தைவானியர் என்றாலும் வளர்ந்தது, பிரபலம் ஆகியது எல்லாம் கொரியாவில். இவர் ஜூன் மாதம் 14 ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு பிறந்தவர். 2012 ஆம் ஆண்டில் தைனானில் உள்ள ஒரு டேலண்ட் ஸ்கவுட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதே ஆண்டில் நவம்பர் 15 ஆம் தேதி பயிற்சிக்காக கொரியா சென்றவர், இரண்டு வருட பயிற்சி பெற்ற பின்னர் 2015 ஆம் ஆண்டில் “சிக்ஸ்டீன்” என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். இதிலிருந்த 9 பெண்கள் சேர்ந்து “ட்வைஸ்” என்ற பெயரில் ஒரு இசைக்குழு உருவாக்கினர். அதில் பிரபலமானவராக இருந்தார் சூயி. அக்டோபர் மாதம் 2015 ஆம் ஆண்டில் அரங்கேறினார்கள். சவுத் கொரியாவின் 2016 ஆம் ஆண்டின் பிரபலமான இளைஞர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பெற்றிருந்தார்.
 

 

TZUSU



ட்வைஸ் குழுவில் சூயி தைவானிய கொடி ஏந்தி வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சீனர்கள் எல்லாம் கடுமையாக விமர்சிக்க, சோ டூசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இதற்கு தைவானியர்கள் சார்பில் விமர்சனும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. எது என்னவோ சூயி தன்னுடைய வெகுளிதனத்தாலும், அசட்டு சிரிப்பாலும் பிரபலமாகிக் கொண்டே இருந்தார். நம் ஊரில் சூயி ஒரு வில் வித்தை வீரர் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதுதான் இல்லை அவர் 2016 ஆம் ஆண்டில் ஐடோல் ஸ்டார் அதிலட் சாம்பியன்ஷிப் என்ற டிவி போட்டியில் கலந்து கொண்டார். தற்போது நம்மிடம் பேமஸாக ஓடிக்கொண்டிருக்கும் வீடியோ. அது 2016 ஆம் ஆண்டு வந்தது. அப்போது அந்த அம்புகூட மிஸ் ஆகிவிட்டதாம்...

 

 

 

 

 

 

Next Story

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ. 62 லட்சம் போனஸ்; ஊழியர்களைத் திக்குமுக்காட வைத்த நிறுவனம்!

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Rs.62 lakh bonus for having a child in private company at south korea

கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது தென் கொரியா. சிறிய அளவில் பரப்பளவு கொண்ட இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 5 கோடி. இந்த நாட்டின் அண்டை நாடான வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை வீசி அச்சுறுத்தி வருகிறது. ஒரு பக்கம் இப்படியொரு பிரச்சனை என்றால், மறுபக்கம் தென்கொரியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை, முன்னெப்போதும் இல்லாத அளவு பிறப்பு விகிதம் சரிந்து இருப்பதே ஆகும். 

கடந்த ஆண்டு தென் கொரியாவின் தேசிய புள்ளியியல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘2022 ஆம் ஆண்டு சுமார் 1,91,700 திருமணங்கள் நடந்தன. இது முந்தைய ஆண்டை விட 0.4 சதவீதம் குறைவு ஆகும்’ என்று தெரிவித்திருந்தது.

திருமணங்கள் குறைந்து கொண்டே வருவதால் குழந்தைகள் பிறப்பு விகிதமும் குறைந்து வருவதாக அந்த நாடு வருத்தம் கொள்கிறது. வேலைப் பளு உள்ளிட்ட பல காரணங்களால் தென் கொரிய இளம் தலைமுறையினர், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாகப் பல்வேறு விழிப்புணர்வுகளையும் தென்கொரியா அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது, ‘குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் விதமாகத் தங்கள் நிறுவன ஊழியர்கள் குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு ரூ. 62.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். ஒவ்வொரு குழந்தைக்கும் இது கொடுக்கப்படும். ஆண், பெண் என இருவருக்குமே இந்த சலுகை கிடைக்கும். நமது நிறுவனத்தின் இந்த முயற்சி குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயர்த்தி, நாட்டின் எதிர்கால பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக அமையும்’ என்று கூறியுள்ளது. 

பல விசித்திரமான சட்டங்களைக் கொண்டு வரும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகொரியா பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“தென்கொரியாவை தூண்டும் நாடுகளை அழித்துவிடுவோம்” - வடகொரியா பகிரங்க எச்சரிக்கை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
North Korea's warning on We will destroy countries that provoke South Korea

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கியிருக்கும் நாடு வடகொரியா. அதேபோல சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.  ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் கிம் ஜாங் உன், அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி பயமுறுத்தி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி அடிக்கடி பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவர் நிகழ்த்தி வருகிறார்.

இதற்கிடையே, வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக, சில தினங்களுக்கு முன் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தியது. வடகொரியா வீசிய 200க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் யோன்பியோங் தீவுக்கு அருகே இருநாட்டிற்கும் இடையேயான பாதுகாக்கப்பட்ட மண்டலமான கடல் பகுதியில் விழுந்தன. இதனால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. 

இந்த நிலையில், தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல், உக்ரைன் மீதான தாக்குதலில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியுள்ளது. மேலும், அமெரிக்கா - தென் கொரியா நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி, தென்கொரியாவில் அமெரிக்காவின் குண்டு வீசும் விமானங்கள், அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற சக்தி வாய்ந்த ராணுவத் தளவாடங்களை அமெரிக்கா நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால், வடகொரியா அதிபர், தென்கொரியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், “தென்கொரியா எங்கள் முக்கியமான எதிரி. தென்கொரியாவை தூண்டும் நாடுகளை அழித்துவிடுவோம்” என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.