Skip to main content

இணையத்தில் பாதுகாப்பு இருக்கிறதா??? 

Published on 14/08/2018 | Edited on 14/08/2018


இரும்புத்திரை படம் வெளியான பின்பு தமிழக மக்கள் பலருக்கு ஒரு அச்சம் இருக்கிறது. அந்த படத்தில் வருவது போல நம்முடைய அந்தரங்கங்களையும் ஹேக்கர்கள் எளிதில் திருடிவிடுவார்களோ, அதை வைத்து நம்மையும் மிரட்டுவார்களோ என்கிற பயம் மனதின்  ஏதாவது ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு ஏற்றாற்போல் டிராய் அமைப்பின் தலைவர் 'ஆதார் எண்'ணை  சமூக வலைதளத்தில் பகிர்ந்து, முடிந்தால் என்னுடைய தகவலை வெளியிடுங்கள் என்று பகிரங்கமாக சவால் விட்டார். அதற்கு பதிலடியாக, பிரான்ஸை சேர்ந்த ஒரு ஹேக்கர் டிராய் தலைவருடைய அந்தரங்களை எல்லாம் எடுத்து மீண்டும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஏற்கனவே அச்சத்தில் இருக்கும் பொது மக்களின் அச்சத்தை இன்னும் எக்கச்சக்கமாக ஏற்றிவிட்டார். ஆனால், ஆதார் அமைப்பு டிராய் தலைவருடைய எந்த அந்தரங்கமும் ஹேக் செய்யப்படவில்லை என்று மறுப்புதான் தெரிவித்திருக்கிறது.

 

uidai


இந்த செய்திகள் ஓய்ந்து முடிவதற்குள், மேலும் ஒரு செய்தி மக்களின் அச்சத்தை கூட்டியிருக்கிறது. இதைப்படித்துக்கொண்டு இருக்கும்போதே உங்களுடைய ஆன்ட்ராய்டு கைபேசியில் காண்டாக்ட் லிஸ்ட்டை எடுத்து பாருங்கள், நீங்கள் சேமிக்காத ஒரு எண் 18003001947  'UIDAI' என்று சேமிக்கப்பட்டிருக்கும். அப்படி அந்த எண் உங்கள் மொபைல்களில் சேமிக்கப்பட்டிருந்தால், உங்களது மொபைல் ஹேக் செய்யப்பட்டதாக வாட்ஸப்பில் செய்திகள் உலாவருகிறது. இது உண்மையா என்று மக்கள் பலருக்கும் குழப்பத்திலேயே இருக்கின்றனர். இது பற்றி ஆதார் அமைப்பும்," எதோ ஒரு மர்மமான முறையில் உங்களது மொபைல்களில் சேமிக்கப்பட்டிருக்கிறது" என்று அறிக்கை வெளியிட்டது. ஆதாருக்கே இந்த விஷயம் தெரியவில்லையே என்று மேலும் மக்கள் குழம்ப ஆர்மபிக்கின்றனர். அதற்குள் இந்த செய்தி இந்தியா முழுவதும் பரவிவிட்டது.

 


உண்மையில் படங்களில் காட்டுவது போன்று நம்முடைய வாழ்க்கையின் முக்கிய தேவையாக இருக்கும் மொபைல் ஹேக் செய்யப்பட்டதா, செய்யப்பட்டதா... என்று தீவிர யோசனையிலேயே இருக்கும் மக்களுக்கும், எதையாவது ஒரு செய்தி வைத்து மக்களை பயமுறுத்தலாம் என்று யோசித்தவர்களுக்கும் கூகுள் நம்பிக்கை அளிக்கும் விதமாக இந்த பிரச்சனைக்கு நாங்கள் தான் காரணம் என்றது. கூகுள் அறிக்கையில்," ஆன்ட்ராய்டு செட்டப் விசார்டில் தவறுதலாக ஆதார் உதவி மையம் இலவச அழைப்பு எண் கோடிங் செய்யப்பட்டு உள்ளது. மேலும், 2014-ல் வழங்கப்பட்ட ஆன்ட்ராய்டு செட்டப் தளத்தில் இருந்தது மட்டுமல்லாமல் புதிய சாதனத்திலும் அப்டேட் ஆகி உள்ளது " என்று தெரிவித்துள்ளனர். இந்த uidai எண் சில ஐபோன் ஓ.எஸ் பயன்பாட்டாளர்களுக்கும் சேமிக்கப்பட்டிருப்பதாக சொல்கின்றனர். இது ஆதார் சேவைமையத்தின் எண்ணே இல்லை, இதற்கு முந்தைய அரசாங்கம் 2014ஆம் ஆண்டில் சேர்க்க சொன்ன விஷயத்தை கூகுள் நிறுவனம் தவறுதலாக தற்போது சேர்த்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

 

google


நம்முடைய அனைத்து தகவல்களையும் கூகுளும், பேஸ்புக்கும் இதர சமூக வலைதளங்களும் நோட்டமிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன, நாம் என்ன மாதிரியான பதிவுகளை விரும்புகிறோம் என்பதை தெரிந்து, விரும்பிய விஷயங்களின் விளம்பரங்களை நமக்கு காட்டும் அளவுக்கு இந்த டிஜிட்டல் யுகம் இருக்கிறது. நாம் ஏற்கனவே நம்முடைய தகவல்களை தாரைவார்த்துவிட்டோம். UIDAI என்ற எண் உங்கள் மொபைலில் ஏற்றப்பட்டிருந்தால் பயப்படவேண்டாம். ஆனால், ஒரு விஷயம் உங்களுடைய அனுமதி இல்லாமலே உங்களுடைய மொபைலில் ஏற்றப்பட்டிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய தவறான ஒன்று அதற்கு அந்த நிறுவனமோ ஒரு அறிக்கையில் பதில் அளித்து முடித்துவிட்டனர். இது போன்ற ஒரு விஷயம் அமெரிக்காவிலோ, ஐரோப்பிய நாடுகளிலோ நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும், பல சுதந்திரங்களை பற்றி பேசும் நாம் இந்த அத்துமீறலை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருப்பது வருங்காலத்தில் பெரிய சிக்கலை உருவாக்கும். இணையத்தில் நமக்கு தனியுரிமை (privacy) எதும் இல்லை என்று கூறும் அளவிற்கு ஆகிவிட்டது. இதற்குமேல் தாரைவார்க்க ஏதேனும் இருக்கிறதா இந்த டிஜிட்டல் உலகத்தில்? என்று மக்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

 

Next Story

ஆதார் தகவலை திருடி வாக்கு சேகரிக்கும் பாஜக? - விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

 

ஆதார் தகவலை திருடி வாக்கு சேகரிக்கும் பாஜக? - விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!


தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் பூத் அளவிலான வாக்காளர்களுக்கு பாஜக வாட்ஸ்-அப் குழுவில் இணையுமாறு இணைப்புடன் (லிங்) குறுஞ்செய்திகள் வருவதாகக் கூறியுள்ளார்.


மேலும் அவர், ஆதார் அட்டையில் அளிக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணில் மட்டுமே அவ்வாறான குறுஞ்செய்திகள் வருவதாகவும், மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆதார் தகவல்களைத் திருடியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து ஏற்கனவே புகார் அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


இந்த வழக்கை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம், இந்தப் புகார் மிகத் தீவிரமானது எனக் கூறி, இதுகுறித்து விசாரித்து வெள்ளிக்கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 

 

 

 

Next Story

”தனிநபர் உரிமைகளை மறுக்கக்கூடாது” -ஆதார் வழக்கில் நீதிபதி

Published on 26/09/2018 | Edited on 26/09/2018
adhar


”வங்கி கணக்குகளுக்கும், மொபைல் இணைப்பு சேவைகளுக்கும் ஆதார் கட்டாயம் இல்லை. தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்ட விரோதம். தனிநபர் கண்ணியம் காக்க ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும். குறைந்த, அத்தியாவசிய தகவல்களே ஆதாருக்காகப் பெறப்படுகிறது.ஆதார் எண்னை போலியாக உருவாக்க முடியாது.நீட்,சிபிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கூடாது. பான் கார்டுக்கு ஆதார் கார்ட் அவசியம். பள்ளிச் சேர்க்கைக்கும் ஆதார் கட்டாயம கிடையாது. ஆதாருக்காகப் பெறப்படும் தகவல்கள் குறைவு, நன்மைகள் அதிகம்” என்று நீதிபதி ஏ.கே சிக்ரி தெரிவித்தார்.
 

அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆதார் இல்லை என்பதற்காக தனிநபரின் உரிமைகள் மறுக்கப்பட கூடது, அதேபோல, யாருக்கும் அரசின் சலுகைகளும் மறுக்கப்படக் கூடாது என்று தீபக் மிஸ்ரா தலைமையில் அடங்கிய ஐந்து பேர் கொண்ட நீதிபதிகளின் அமர்வு தெரிவித்துள்ளது.