Skip to main content

பசியால் அழுகின்றக் குழந்தைக்கு பால் வாங்க கூட காசு இல்ல... கண்ணீரில பொம்மை விற்பனையாளர்கள்!

Published on 18/04/2021 | Edited on 18/04/2021

 

There is not even money to buy milk for a hungry crying baby ... Teardrop toy sellers!

 

கரோனா பெருந்தோற்று தொடங்கிய நாள் முதலே ஒட்டு மொத்த மக்களையும் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. கூலி வேலை கிடைக்கவில்லை. இதனால் தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினி கிடக்கும் அவல நிலையும் இருந்தது. சில மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் நேரத்தில் மீண்டும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பழைய நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

 

தமிழகம் முழுவதும் திருவிழாக்களில் பாசி, மணி, ஊசி, விளையாட்டுப் பொருள், பொம்மைகள் விற்பனை செய்யும் நரிக்குறவர்களின் நிலை ரொம்பவே பரிதாபமாக உள்ளது. ரூபாய் 5 வட்டி, ரூபாய் 10 வட்டிக்கு கடன் வாங்கிப் பொருள் வாங்கி விற்பனை செய்யத் தொடங்கும் போது, கோயில் திருவிழாக்கள் ரத்து என்ற அறிவிப்பு இவர்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. இதனால் சுமார் 50 ஆயிரம் பாசி, மணி விற்கும் நரிக்குறவர் மக்கள் வாங்கியக் கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் தவியாய் தவிக்கிறார்கள்.

There is not even money to buy milk for a hungry crying baby ... Teardrop toy sellers!

 

இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அறிவொளி நகரில் வசிக்கும் உமா, ரகு போன்ற பலரும் நம்மிடம், "எங்கள் வாழ்வாதாரம் பலூன், பாசி, மணி, ஊசி, விளையாட்டுப் பொருள் விற்கிறது தான். நாங்கள் கட்டும் மாலை தான் ஐயப்ப பக்தர்களும், பழனி முருகன் பக்தர்களும் மாலையாக போடுவாங்க. நாங்க யாரையும் ஏமாற்றி பிழைக்க மாட்டோம். திருவிழா நேரங்கள்ல வட்டிக்கு கடன் வாங்கிப் பொருள் வாங்கி கோயில்ல வித்துட்டு உடனே கடனையும் வட்டியும் திருப்பிக் கொடுப்போம். அதனால எங்கள் நாணயத்தைப் பார்த்து அடுத்த முறையும் பணம் கேட்டால் கொடுப்பாங்க.

 

ஆனா கஜா புயல் வந்து மொத்தமா எல்லாத்தையும் அழிச்சது. அடுத்து போன வருசம் கரோனா வந்து அழிச்சது. எங்க ஊர்ல மட்டும் 100 பேர் வியாபாரம் செய்றோம். ஒவ்வொருத்தரும் ரூபாய் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கடன் வாங்கிப் பொருள் வாங்கி வந்து, திருவிழா இல்லாம வீட்டுக்குள்ளேயேக் கிடந்தது. இந்த வருசமாவது திருவிழா இருக்கும்னு மறுபடியும் கடன் வாங்கிப் பொருள் வாங்கி முடிச்சு 2 திருவிழா வியாபாரம் முடியும் போது திருவிழாவை நிறுத்திட்டாங்க. பொருள் எல்லாம் மூட்டையா கட்டி வீட்டுக்குள்ள கிடக்குது. வாங்கின கடனை கேட்டு கடன் கொடுத்தவங்க கேட்கும் போது பதில் சொல்ல முடியாம ஓடி ஒழியுறோம். ஒருவேளை  சோத்துக்கு தொட்டுக்கக் காய்கறி வாங்க காசு இல்லாமப் போச்சு.

There is not even money to buy milk for a hungry crying baby ... Teardrop toy sellers!

 

வாங்கினக் கடனை அடைக்க முடியல. நாங்க ரேசன் அரிசியால பசியாறினாலும் எங்க குழந்தைங்க பசியால அழும் போது பால் வாங்கிக் கொடுக்க காசு இல்லாம நாங்களும் சேர்ந்து அழுறோம். கரோனாவுல சாகுறதைவிட பசியால செத்துடுவோம் போலிருக்கு. இதையெலலாம் பார்க்கும் போது கரோனா வந்து எங்கள ஒரேயடியா கொன்னுட்டாலும் சரினு தோனுதுய்யா.. எங்களைப் போல அன்றாடம் பிழைப்புக்காக பலூன் விக்கிற நரிக்குறவர் கூட்டத்தைப் பார்க்க யாருக்கும் மனசு வரல. எங்க நிலைமையை நினைச்சுப் பாருங்கய்யா.. எங்களுக்கும் இந்த அரசாங்கம் கொஞ்சம் கருணை காட்டி நிவாரணம் கொடுத்தால் எங்க குழந்தைகளுக்கு பால் வாங்கி கொடுப்போம். இல்லன்னா பசி நோயாலயே செத்துடுவோம்" என்றனர்.

 

இது போன்ற சிறு சிறு வியாபாரிகள் மீது அரசாங்கத்தின் கவனம் திரும்பினால் அவர்களையும் காப்பாற்றலாம். 


 

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.