Skip to main content

என்ன படிச்சாலும் கூலி வேலைதான்.. 28 வருஷமாச்சு இன்னும் அகதிகளாகப் பார்க்காதீர்கள்..!!!

Published on 16/10/2018 | Edited on 16/10/2018
refugees


 

"என்ன படிச்சாலும் இங்கு கூலி வேலை தான். தயை செய்து இன்னும் எங்களை அகதிகளாகப் பார்க்காதீர்கள்.!" என மன்றாடுகின்றனர் இலங்கையிலிருந்து தமிழகத்தில் தஞ்சமடைந்து 28 வருடங்களாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் அகதிகள்

 

யுத்தம் தொடங்கிய 1983 ஆண்டிலிருந்தே, தங்களின் உயிர்களை பாதுகாத்து கொள்ள, தங்களின் உடமைகளை உறவுகளையும் சொந்த நாட்டையும் விட்டு விட்டு, கையில் கிடைத்தப் பொருட்களுடன் இலங்கை இராணுவத்திற்கு தெரியமால் கடலில் படகில் உயிரை பணயம் வைத்து, அகதியாக தமிழக தனுஷ்கோடி பகுதிக்கு வந்து இறங்கியவர்களை  மீட்டு மண்டபம் கேம்ப்பில் இலங்கை தமிர்கள் மறுவாழ்வு முகாமில் அகதியாக பதிவு செய்த பின், மண்டபம் உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களுக்கு அவர்களை அனுப்பி வைத்தது அரசு. அத்தோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு மாதம் தோறும் குடும்ப தலைவருக்கு 1000 ரூபாய் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு 750 ரூபாய் நிவாரணமாகவும் கொடுத்து வருவதுடன் ரேசன் பொருட்களையும் இலவசமாக அனைத்து மாதந்தோறும் வழங்கி வருகின்றது.

 

refugees


 

"உயிரை பாதுகாத்துக்கொள்ள தமிழகத்தில் தஞ்சம் அடைந்தோம்.! இது வரை அரசும் உதவி செய்து வருகின்றது. இங்கு திருமணம் செய்திருக்கின்றோம். திருமணம் முடிந்து எங்கள் மக்கள் குழந்தைகளைப் பெற்று, அதற்கான பிறப்பு சான்றிதழையும் பெற்றிருந்தாலும் இன்னும் எங்களை அகதிகளாகவேப் பார்க்கின்றது அரசு. அகதியாக பதிவு செய்து படித்து நல்ல நிலைக்கு வந்தாலும் எங்கும் எங்களால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இரவானால் இங்கு வந்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கு. தமிழகத்திற்கு முக்கிய பிரமுகர்கள் வரும் போது தணிக்கை என்று அறிவிக்கப்படுவதால் என்ன செய்வது என்று தெரியாமல் உடனே சம்பந்தப்பட்ட முகாமிற்கு வந்து தணிக்கையின் போது தங்களின் பெயர்களை  பதிவு செய்ய வேண்டும் என்றும் இல்லை என்றால் அகதி என்ற பதிவு முற்றிலும் நீக்கப்படுவதால் கிடைக்கும் சில சலுகைகள் அனைத்து நிறுத்தப்படுகிறது. இதனால் நல்ல வேலை கிடைத்தும் எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. என்ன தான் படித்தாலும் இங்கு கூலி வேலை தான் கிடைக்கின்றது. தயை செய்து எங்களை அகதிகளாகப் பார்க்காதீங்க" என வேண்டுகோள் வைத்தனர் மண்டபம் முகாம் வாசிகள்.

 

 

Next Story

ஒரு தமிழ் குடும்பத்தின் வாழ்க்கையை காக்க தெருக்களில் இறங்கி போராடும் ஆஸ்திரேலியா மக்கள்....

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கை தமிழர் குடும்பத்தை நாடுகடத்தும் முடிவுக்கு எதிராக ஆஸ்திரேலியா மக்கள் பேரணிகள் மற்றும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

 

australian people protests in support of tamil family

 

 

இலங்கை உள்நாட்டு போர் காலகட்டங்களில் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த அகதிகளான நடேசலிங்கம், பிரியா ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவிலேயே திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு கோபிகா (4 வயது), தருணிகா (2) என 2 மகள்களும் பிறந்தனர்.

இந்த நிலையில் குடியுரிமை சட்டத்தை கடுமையாகியுள்ள ஆஸ்திரேலியா இந்த தம்பதிகளை நாடு கடத்த உத்தரவிட்டது. இவர்கள் நாடு கடத்தப்படுவதற்காக கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டனர். இதற்கு ஆஸ்திரேலியா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் இவர்கள் நாடுகடத்தப்பட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டது. பாதி வழியில் விமானம் சென்றுகொண்டிருந்த போது ஆஸ்திரேலிய நீதிபதி, இவர்களது நாடு கடத்தும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.

இதனால் பாதி வழியில் விமானம் மீண்டும் திருப்பப்பட்டு ஆஸ்திரேலியா கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், இவர்களை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலிய முழுவதும் பேரணிகள் மற்றும் போராட்டங்கள் நடந்து வருகிறது. அவர்களை நாடு கடத்தும் முடிவை விடுத்து, அவர்கள் வாழும் சூழலை உருவாக்கி தரவேண்டும் என ஆஸ்திரேலியா அரசை அந்நாட்டு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  

 

 

Next Story

திண்டுக்கல் இலங்கை அகதிகள் முகாமில் குடிதண்ணீர், கழிப்பிட வசதிகள் இல்லை!!! அவதிப்படும் இலங்கை தமிழர்கள்...

Published on 17/12/2018 | Edited on 17/12/2018
Refugees


திண்டுக்கல்லிலிருந்து நத்தம் செல்லும் சாலையில் சிறுமலை பிரிவு அருகே அடியனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இலங்கையில் வவுனியா, முல்லைதீவு, கிளிநொச்சி, யாழ்பானம், திரிகோணமலை ஆகிய பகுதிகளிலிருந்து அகதிகளாக வந்தவர்களை 1990ம் வருடம் அவர்களுக்கு 9ஏக்கர் நிலம் ஒதுக்கி குடியிருப்பு அமைத்துக் கொடுத்தனர். 170 குடியிருப்புகளில் 1700 பேர் வசிக்கின்றனர். ஒரு ஆழ்துளை கிணறு அமைத்துக்கொடுத்து 9 இடங்களில் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி வைத்து கொடுத்திருந்தனர். ஆரம்பத்தில் 10சதுரஅடி இடம் ஒதுக்கி தார் அட்டையில் மேற்கூரை அமைத்து கொடுத்திருந்தனர். நாளடைவில் வெயிலினால் அட்டைகள் உடைந்து விட்டன. அதன்பின்னர் தற்போது தென்னங்கீற்றில் குடிசைகளை அமைத்துள்ளனர். அடியனூத்து ஊராட்சி சார்பாக ஆழ்துளை கிணற்றிலிருந்து வழங்கப்பட்ட குடிதண்ணீர் கடந்த 9மாத காலமாக வழங்கப்படாததால் அவர்கள் 3 குடம் குடிதண்ணீர் ரூ.10க்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளனர். 


இது தவிர அவசர தேவைக்காக 6கி.மீ தூரம் உள்ள ரெட்டியபட்டியிலிருந்து இருசக்கர வாகனம் மூலம் குடிதண்ணீரை எடுத்து வருகின்றனர். இலங்கை அகதிகள் முகாமிற்கு அடியனூத்து ஊராட்சி நிர்வாகம் துப்புறவு பணியாளர்களை கடந்த 3மாத காலமாக அனுப்பாததால் குப்பைகள் முகாமை சுற்றி மலைபோல் குவிந்துள்ளன. தண்ணீர் வசதி இல்லாததால் கழிப்பறைகள் செயல்பாடின்றி உள்ளது. இதனால் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 1700 பேரும் சுற்றியுள்ள பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளனர். இதனால் அவர்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இது தவிர முகாமிற்குள் பன்றிகள் சர்வசாதாரமாக சுற்றித்திரிவதால் பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக அப்பகுதியில் பன்றி ஒன்று இறந்து கிடக்க அதை அப்புறப்படுத்தாமல் விட்டுவிட்டதால் முகாமின் வடக்குப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் குடிதண்ணீருக்காக தினமும் கண்ணீர் வடிக்கும் நிலையில் உள்ளனர்.


 

refugees

 


இது குறித்து இலங்கை அகதிகள் முகாம் செயலாளர் ரஞ்சித் கூறுகையில் 1990ம் ஆண்டு முதல் இப்பகுதியில் குடியிருந்து வருகிறோம் எங்களுக்கு குடிதண்ணீர் வசதி முறையாக இல்லாததால் தினசரி கடும் அவதிப்படுகின்றோம். மாவட்ட ஆட்சித்தலைவர் தகுந்த நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் உள்ள மைதானத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி குடிதண்ணீர் கிடைக்கச் செய்யவேண்டும் என்றார்.


சுஜீவன் - இலங்கை அகதிகள் முகாம் பொருளாளர் கூறுகையில், எங்கள் முகாமில் உள்ள அனைவரும் கூலித்தொழிலாளர்கள் தினசரி ரூ.30 முதல் ரூ.40 வரை குடிதண்ணீருக்கு செலவிடவேண்டிய அவலநிலையில் உள்ளனர். ஊராட்சி நிர்வாகம் எங்கள் இலங்கை அகதிகள் முகாமிற்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றார். நத்தம் மெயின்ரோட்டில் காவேரி கூட்டுகுடிநீர் திட்டம் குடிதண்ணீர் குழாய்கள் மூலம் செல்கிறது. அங்கிருந்து எங்களுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.


பாக்கியநாதன் இலங்கை அகதி கூறுகையில் எங்கள் மக்களுக்கு தமிழக அரசு மாதம்தோறும் நிவாரண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.1000மும் பெண்களுக்கு ரூ.750ம் வழங்கி வந்தது. கடந்த ஒருவருட காலமாக அந்த உதவித்தொகையை நிறுத்தி வைத்துள்ளனர். அதை எங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.
சசிகலா இலங்கை அகதி கூறுகையில் எங்கள் முகாம் பெண்கள் குடிதண்ணீர் பிரச்சனையால் வாரம் ஒருமுறைதான் குளிக்க கூடிய அவலத்தில் உள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவர் தகுந்த நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியின் குடிதண்ணீர் பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்றார். கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் பகல் நேரத்தில் கடும் சிரமப்படுகின்றனர். திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் எங்கள் பகுதி குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவி வருகிறது என கூறினார்.

 
செல்வநாயகி இலங்கை அகதி கூறுகையில், 1990ம் ஆண்டு கண்ணீருடன் இந்தியா வந்தோம் எங்களுக்கு திண்டுக்கல்லில் தங்க இடம் கொடுத்தார்கள். ஆனால் இன்றுவரை குடிதண்ணீருக்காக கண்ணீர் விட்டுதான் வருகிறோம் எங்களை யாரும் கண்டுகொள்வதில்லை. சமூக ஆர்வளர்கள், தொண்டுநிறுவனங்கள் எங்கள் முகாமில் வசிக்கும் 1700 பேரின் நலன் கருதி புதிய ஆழ்துளை கிணறு அமைத்துக்கொடுத்தால் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கண்ணீர் மல்க கூறினார். 


அடியனூத்து ஊராட்சி நிர்வாகம் இலங்கை அகதிகள் முகாமை கண்டுகொள்ளாததால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவுகிறது. மேலும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கும் திட்டமும் வீனாகிவருகிறது. மத்திய அரசின் இந்த திட்டம் இலங்கை அகதிகள் முகாமில் முடங்கிப்போய் உள்ளது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட திட்ட அலுவலர், தூய்மை இந்தியா திட்டத்தை இலங்கை அகதிகள் முகாமில் செயல்படுத்தினால் அப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!