Skip to main content

நீட் தேர்வுக்கு எதிரான அதிமுகவின் அழுத்தம் மசாஜ் சென்டரில் கொடுப்பதை போல் இருக்கிறது -ரவிசங்கர் அய்யாகண்ணு தடாலடி!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020
hj

 

 

கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு டேக் "இந்தி தெரியாது போடா" என்ற வாக்கியம். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக இளைஞர்களால் இந்த கருத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது ஒருபுறம் என்றால், அதையே டீ சர்ட்டில் ப்ரிண்ட் செய்து பிரபலங்கள் அணிந்து வந்தது அந்த வாக்கியத்துக்கு மேலும் வலுசேர்த்தது.

 

இதுஒருபுறம் இந்திய அளவில் விவாதம் ஆன நிலையில் நீட் தொடர்பான அழுத்தத்தில் தமிழக மாணவர்கள் மூவர் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டனர். இது தமிழகத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தன. இதுஒருபுறம் அனலாக எரிந்துகொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா அனல் கக்கும் வார்த்தைகளை கொண்ட இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டார். அரசியல் கட்சிகளையும் தாண்டி நடிகர் சூர்யாவின் அறிக்கை இந்திய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த பாஜக அவரை கண்டித்தது. முக்கிய தலைவர்கள் எல்லாம் சூர்யா சினிமாவில் வசனம் பேசுவதைபோல் பேசக்கூடாது என்று கடுமையான வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி பேசினார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை திராவிட இயக்க சிந்தனையாளர் ரவிசங்கர் அய்யாகண்ணு அவர்களிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

நீட் தேர்வு தொடர்பாக ஆதாரப்பூர்வமான பல்வேறு தகவல்களை முகநூல்களில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறீர்கள். இதுதொடர்பான வாதப்பிரதிவாதங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த வாரம் நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பு மூன்று மாணவர்களை நாம் இழந்திருக்கிறோம். தமிழக சட்டப்பேரவையில் கூட இதுதொடர்பான காரசார விவாதங்கள் நடைபெற்றது. முதற்கட்டமாக இந்த சம்பவங்களை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

இந்த போராட்டமே எந்த பார்வையில் அணுகப்படுகின்றது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. திமுக தொடர்ந்து 2010 முதல் நீட் தேர்வை எதிர்த்து வருகின்றது. மற்ற கட்சிகளும் நீட் தேர்வை எதிர்ப்பதில் ஆதரவாக இருந்து வருகிறார்கள். இது சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் தொடர்ந்து எதிரொலித்து வருகின்றது. கடந்த வாரம் தொடங்கிய பாராளுமன்ற கூட்டத்தொடரும் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் பதாதைகளை வைத்து கொண்டு இந்த நீட் தேர்வு எதிராக போராடினார்கள். மாணவர்கள் தற்கொலைக்கு பிறகு திமுக தலைவர் வெளியிட்ட அந்த அறிக்கைகள் பரபரப்பாக பேசப்பட்டது. நீட் தேர்வை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒழிப்போம் என்று தெளிவாக கூறியிருந்தார். ஏற்கனவே தேர்வு எழுதியவர்களுக்கும் புதிதாக சீட் ஒதுக்கி கொடுப்போம் என்ற அளவில் அந்த உரையாடல் இருந்தது. திமுகவுக்கு இந்த பெருமை போகக்கூடாது என்பதற்காக பல்வேறு நாடகங்கள் தற்போது நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

 

ஆனால் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகிய இருவரும் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கும் போதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்று பேசினார்களே?

 

தமிழ்நாட்டுக்கு நீட் எப்போது வந்தது? 2017ம் ஆண்டுதான் அனிதா இறந்தார். அப்போது யார் ஆட்சியில் இருந்தார்கள். இவர்கள் தானே ஆட்சியில் அப்போதும் இருந்து கொண்டிருந்தார்கள். திமுக ஆட்சியில் நீட் வரவில்லை, முதல்வராக ஜெயலலிதா இருக்கின்ற வரையிலும் கூட நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை. தானாக ஆட்சி நடத்த முடியாத துணிவில்லாத ஆட்சியாளர்கள் எப்போது தமிழகத்திற்கு வந்தார்களோ அப்போதுதான் தமிழகத்திற்கு நீட் தேர்வு வந்தது. அதிமுக அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.  நீட் தேர்வுக்கு அவர்கள் கொடுக்கும் அழுத்தம் மசாஜ் சென்டரில் கொடுக்கும் அழுத்தத்தை போலத்தான் இருக்கிறது. 

 

ஒட்டுமொத்த சட்டப்பேரவையும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினார்கள். ஆனால் அந்த தீர்மானம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் கூறுகிறார். அதை பற்றி கேட்க மாநில அரசுக்கு தோணவில்லை. அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு கடந்து போனார்கள்.  கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ஆளும் அதிமுக அரசு நீட் தேர்வு தொடர்பாக என்ன செய்தது என்று பாருங்கள். இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் செய்யாத வேலைகளை திமுக தொடர்ந்து செய்து வருகின்றது. திமுக தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வருகின்றது. ஆளும் அதிமுகவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை திமுகவிடம் தொலைக்காட்சிகள் தொடர்ந்து கேட்டு வருகின்றது. இது எப்படி சரியாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. 

 

திமுக இதில் அரசியல் செய்கிறது, எதற்காக நீட் தேர்வுக்கு முதல் நாள் இனி நீட் தேர்வு இருக்காது என்று திமுக சொல்ல வேண்டும் என்று எதிர்தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்களே? சூரியாவின் அறிக்கையையும் விமர்சனம் செய்கிறார்களே?

 

கல்வி தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கு எதிராகவும் திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. மாணவர்களின் நலனில் அதிக அக்கறை காட்டி வருகின்றது. இந்த சம்பவங்கள் நடைபெற்ற நான்கு தினங்களுக்கு முன்பு கூட நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞரணியினர் போராட்டங்களை முன் எடுத்தனர். தற்கொலையை வைத்து திமுக அரசியல் பண்ணவில்லை. நீட் தேவையில்லை என்று முதலில் குரல் கொடுத்த இயக்கமும் அதுதான், தற்போது குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற இயக்கமும் அதுதான். நீட் தேர்வு வேண்டாம் என்று இந்த கரோனா காலத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுதியதாக கூறினார். கடிதம் எழுதி என்ன சாதித்தார்கள். நீட் தேர்வு நடக்கவில்லையா? எனவே தமிழக மக்களை ஏமாற்றும் வேலையை அவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள், அதனால்தான் சூர்யா போன்ற நீட் தேர்வை எதிர்க்கும்போது, அதற்கு பதில் சொல்லாமல் அவர் மீது தனிப்பட்ட தாக்குதலை தொடுக்கிறார்கள். 

 

 

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.