Skip to main content

மோடி விரும்புவதை தமிழக மக்கள் விரும்பவில்லை! -விளாசிய ராகுல்!  

Published on 28/01/2021 | Edited on 28/01/2021
ddd

 

வாக்குவங்கி பலம் பற்றிக் கவலைப்படாமல், "ஒரு கை பார்ப்போம்'’என்ற பெயரில் தமிழகம் முழுதும் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. அதன் ஹைலைட்டாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 23- ந் தேதி கோவைக்கு வந்தார்.

 

நேரு குடும்பத்தின்மீது தமிழக மக்களுக்கு எப்போதுமே ஈர்ப்பு உண்டு. காளப்பட்டி சாலை சந்திப்பில் திறந்த காரில் நின்று பேசிய ராகுல், ""தமிழகத்துக்கு வருவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது உள்ள பி.ஜே. பி அரசு. ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே கொள்கைதான் இருக்க வேண்டும் என நினைத்து காய் நகர்த்துகிறது. ஆனால் அந்த காய் நகர்த்தலை எதிர்த்து தான் நாம் போராடி வருகிறோம்.

 

பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மக்களின் கலாசாரம், மொழிப் பற்று எதையும் மதிப்பது இல்லை. தமிழக மக்களை ரெண்டாம் தர குடி மக்களாக கருதுகிறார். இந்தியாவில் பன்முக கலாசாரம், மொழிகள், வாழ்க்கை முறைகள் உள்ளன. தமிழ், பெங்காலி, இந்தி அனைத்து மொழிகளையும் நாங்கள் சமமாகத்தான் நடத்துகிறோம். ஆனால் மோடி அப்படி அல்ல. அவர் இந்தியாவில் உள்ள 2, 3 பெரிய தொழில் அதிபர்களுக்காக ஆட்சி நடத்துகிறார். இதுதான் நமக்கும், மோடிக்கும் உள்ள வித்தியாசம்.

 

3 வேளாண்மை சட்டங்களை கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு. அந்த சட்டங்கள் , இந்தியாவில் பாரம்பரியமாக தொழில் செய்து வரும் விவசாயிகளை தொழிலதிபர்களின் வேலைக்காரர்களாக மாற்றும் சட்டங்கள். அதை திறம்பட மோடி வடிவமைத்து இருக் கிறார். தமிழகம்தான் எந்தவொரு விசயத்திற்கும் முன்னுதாரணமாக இருக்கிறது. இன்னும் இருக்கும்...'' என பலத்த கை தட்டல்க ளுக்கிடையே பேசி விட்டு... திருப்பூரை நோக்கி அவர் வாகனம் பறந்தது. போகும் வழியில் சின்னியம்பாளையத்தில் பேசிய ராகுல் காந்தி...

 

""ஆளும் தமிழக அரசை அச்சுறுத்துவதற்காக சி.பி.ஐ,- வருமானவரித் துறையை மோடி பயன்படுத்துகிறார். இதன் மூலம் தமிழக அரசை தன் கட்டுப்பாட்டில் வைக்க மோடி விரும்புவதை தமிழக மக்கள் விரும்பவில்லை.

 

என் பாட்டி, தந்தை ஆகியோர்மீது அதீத அன்பை தமிழக மக்கள் நீங்கள் வைத்து உள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். என் மீது அன்பும், நம்பிக்கையும் வைத்திருக்கிற நீங்கள் தமிழகத்தில் புதிய அரசு உருவாக வேண்டும் என்கிற எண்ணத்தையும் நான் அறிவேன். அந்த எண்ணத்தை நான் பூர்த்தி செய்வேன். தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி என மோடி நினைக்கிறார். ஆனால் தமிழ்நாடேதான் இந்தியாவாக இருக்கும்...'' என பேசி விட்டு திருப்பூர் அவினாசிப் பாளையத்தில் உள்ள ஒரு பேக்கரிக்குள் சென்றார் ராகுல்.

 


ராகுல் வந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்ட அங்கிருந்த மூதாட்டி ஒருவர்... ""என்னை மாதிரி வயசானவங்க சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாம நிக்கறோம்''னு சொல்ல.. ""அடுத்து வரும் ஆட்சி உங்களை காப்பாத்தும்... அதற்கு நான் சாட்சி...'' என சொல்லி அந்த மூதாட்டியை ஆறுதல் படுத்தினார். பேக்கரிக்குள் வந்த எல்லோரும் ராகுலுடன் செல்பி எடுத்துக் கொண்டார்கள். சளைக்காமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு... எல்லோருடனும் கைக்குலுக்கி விட்டு தன் பயணத்தை தொடர்ந்தார் ராகுல்.

 

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆன நிலையில், அதன் வாக்கு வங்கியும் குறைந்துகொண்டே வந்தது. அருகில் உள்ள புதுச்சேரியில் ஆட்சியில் இருந்தாலும், கூட்டணிக் கட்சியான தி.மு.க. தன் பலத்தைப் பெருக்கும் வகையில் தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இருக்கும் காங்கிரசின் செல்வாக்கைத் தக்க வைக்கவும், தி.மு.க. கூட்டணியில் தனக்கான இடங்களைப் பெறவும் ராகுல் வருகை பயன்படும் என நம்புகிறார்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். கமல் போன்ற கட்சிகளுடனான கூட்டணிக்கும் இந்தப் பயணம் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஈரோடு சென்ற அவருக்கு பெருந்துறை விவசாய மக்கள் கை காட்டி ஆர்ப்பரிப்பு செய்தனர். பின்னர் ஈரோட்டில் பேசிய ராகுல்... "சிறு, குறு தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. அதை அடுத்து வரும் ஆட்சி சரி செய்யும். இந்த தமிழகத்தை நான் பிறந்த மண்ணாக உணர்கிறேன்.

 

நான் இந்த தமிழகத்திற்கு அடுத்த முறை வரும் போது... நல்ல ஆட்சியாளர்தான் இந்த தமிழ் நாட்டை ஆண்டு கொண்டிருப்பார்...'' என முத்தாய்ப்பாய் பேசி கை சின்னத்தை காட்டி விட்டு கிளம்பினார். பகல் நேர சூரிய வெளிச்சம் அவர் மீது படர்ந்திருந்தது.

 

 

Next Story

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியா? பதிலளித்த கார்கே

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில்,  இந்த மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். அதே சமயம், ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. 

Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

இந்த நிலையில், இன்று (27-04-27) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். 

அப்போது அவர், “பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனாலும், மோடி நாட்டுக்காக நிறைய வேலை செய்துள்ளார் என்று கூறுகிறார். நான் அதிகம் பேச விரும்பவில்லை. காங்கிரஸ் இந்தியாவை சுதந்திரமாக்கியவர்களின் கட்சி. இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க ஒருபோதும் போராடவில்லை. இந்த நாட்டைக் கட்டியெழுப்பினோம். நேருவுக்கு ஒன்றுமில்லை, இந்திரா காந்தி ஒன்றுமில்லை, லால்பகதூர் சாஸ்திரி ஒன்றுமில்லை, மோடிதான் எல்லாம் என தேசப்பற்றைப் பற்றி பாஜகவினர் எவ்வளவோ பேசுகிறார்கள்.

2014க்குப் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்தது, அதற்கு முன் நாடு சுதந்திரம் அடையவில்லை என்ற எண்ணத்தை கூட வைத்துள்ளார்கள். இவை அனைத்தும் அவரது வார்த்தைகளில் பிரதிபலிக்கின்றன. இதில் வருத்தம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியால் வளர்க்கப்பட்டு, தலைவர்களாக மாறியவர்களும் இதையே சொல்கிறார்கள். காங்கிரஸ் மிகவும் மோசமாக இருந்திருந்தால், உங்கள் வாழ்நாளில் 30-40 வருடங்களை ஏன் தேவையில்லாமல் செலவழித்தீர்கள்?. இவர்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆனால் அவர்களும் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தியை விமர்சிக்கிறார்கள் எனப் பேசினார். இதனையடுத்து, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் சார்பாக யார் போட்டியிடுவார்கள் என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்கே, “சில நாட்கள் பொறுத்திருங்கள். எல்லாம் தெளிவாகிவிடும்” எனக் கூறினார்.

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.