Skip to main content

பாஜகவின் பாகிஸ்தான் எதிர்ப்பு குறித்து விடை கிடைக்காத 12 கேள்விகள்!

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

2017 ஆம் ஆண்டு குஜராத் தேர்தல் சமயத்தில் பாஜகவை தோற்கடிக்க மன்மோகன் சிங் பாகிஸ்தானோடு சேர்ந்து சதி செய்கிறார் என்று பாஜக தலைவர் அமித் ஷாவும் நரேந்திர மோடியும் குற்றம்சாட்டினர்.

 

modi

 

இதையடுத்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா பாஜகவுக்கு 12 கேள்விகளை விடுத்தார். அந்த 12 கேள்விகளுக்கும் இதுவரை பாஜக பதில் அளிக்கவில்லை. பாகிஸ்தானை வைத்து அரசியல் செய்யும் மோடியின் பாஜகவுக்கு பாகிஸ்தானோடு இருக்கும் தொடர்புகளையும் அந்த கேள்விகள் அம்பலப்படுத்தின.

 

குறிப்பாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் சவ்ரியா தோவல் பாகிஸ்தானில் உள்ள சையது அலி அப்பாஸுடன் இணைந்து வியாபாரம் செய்வது எப்படி என்று காங்கிரஸ் கட்சி வினா எழுப்பியிருந்தது.

 

randeep
ரந்தீப் சுர்ஜிவாலா

 

 

2017-ல் சுர்ஜிவாலா விடுத்த அறிக்கையில் மோடியையும் அமித் ஷாவையும் கடுமையாக சாடியிருந்தார். அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் வியாபார மோசடிகளையும் அவர் விட்டுவைக்கவில்லை. குஜராத்தில் பாஜக தோற்றால் பாகிஸ்தானில் வெடிவெடித்து கொண்டாடுவார்கள் என்று அமித் ஷா கதறும் அதே வேளையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் சவ்ரியா தோவல் பாகிஸ்தானில் உள்ள சையது அலி அப்பாஸுடனும், சவுதி அரேபியாவில் உள்ள இன்னொருவருடனும் வியாபாரக் கூட்டாளியாக இருப்பதை அமித் ஷா ஏன் விமர்சனம் செய்யவில்லை அல்லது தடுக்கக்கூட இல்லை என்று சுர்ஜிவாலா கேட்டிருந்தார்.

 

அமைதியான, நாகரிகமான சுபாவம் கொண்ட மன்மோகன் சிங் குறித்து இந்தியாவுக்கே நன்றாகத் தெரியும். ஆனால், அவரை மோடியும் அமித் ஷாவும் அநாகரிமாக விமர்சனம் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாஜகவின் கடந்த கால பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் பாஜகவை எப்போதும் நம்பமாட்டார்கள் என்ற சுர்ஜிவாலா, மோடிக்கு 12 கேள்விகளை அடுக்கியிருந்தார். அந்தக் கேள்விகளுக்கு இதுவரை பதிலே அளிக்கவில்லை என்பதுதான் இதில் ஹைலைட். அந்தக் கேள்விகள் இதோ…

 

1. சர்வதேச பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிமின் மனைவி 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து மும்பைக்கு எப்படி வந்தார். அவரை கைதுசெய்ய மாநில அரசோ, மத்திய அரசோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

 

2.  தாவூத் இப்ராஹிமுடன் பேசியதற்காக மகாராஸ்டிரா மாநில பாஜக தலைவராகவும் மாநில அமைச்சராகவும் இருந்த ஏக்நாத் கட்ஸேவை பதவியிலிருந்து நீக்கியது உண்மையா பொய்யா?

 

3.   2017 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி நாசிக்கில் நடைபெற்ற தாவூத் இப்ராஹிமின் உறவினர் திருமணத்தில் பாஜகவின் அமைச்சர் கிரிஷ் மகாஜன், தேவ்யானி பரான்டே உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்கள் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டது எப்படி?

 

4. பதான்கோட் விமானப் படைத்தளத்தில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதிகாரிகளை மோடி அரசு எப்படி அனுமதித்தது?

 

5. உதாம்பூரிலும், குர்தாஸ்பூரிலும் பாகிஸ்தான் ஆதரவுபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் அழைப்பே இல்லாமல் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீபின் உறவினர் திருமணத்தில் பங்கேற்க மோடி பாகிஸ்தான் சென்றது எப்படி?

 

6.   பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு ரகசியங்களை விற்றதாக பாஜகவின் தொழில்நுட்ப அணியின் தலைவர் துருவ் சக்ஸேனா தலைமையில் 11 பேர் பிடிபட்டது உண்மையா இல்லையா?

 

7. முந்தைய வாஜ்பாய் அரசாங்கத்தில், காந்தகாருக்கு கடத்தப்பட்ட இந்திய விமானத்தை மீட்க ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸார், காஷ்மீர் பயங்கரவாதி முஸ்தாக் ஸர்கார், அவருடைய கூட்டாளி உமர் சையது ஷேக் உள்ளிட்டோரை விமானத்தி்ல் ஆப்கான் கொண்டு போய் ஒப்படைத்தது உண்மைதானே?

 

8.  தீவிரவாதி புர்ஹான் வானி தற்செயலான என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும், புர்ஹான் வானி அங்கே இருந்தது பாதுகாப்புப் படையினருக்கு தெரியாது என்று பாஜகவைச் சேர்ந்த காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல்சிங் கூறினாரா இல்லையா?

 

9. புர்ஹான் வானியை கொன்ற பிறகு, அவருடைய குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பும், தேவையான உதவியும் செய்வதாக காஷ்மீரில் இருந்த பாஜக கூட்டணி அரசு பேச்சு நடத்தியது உண்மையா இல்லையா?

 

10. காஷ்மீர் மாநிலத்தின் பெண் பிரிவினைவாதி அஷியா அந்த்ராபியை மாநில அரசின் திட்டம் ஒன்றுக்கு தூதராக நியமித்து அவருடைய படத்தை போஸ்டரில் போட்டு விளம்பரப்படுத்தியது உண்மையா இல்லையா?

 

11.   2017 ஆம் ஆண்டு மே மாதம் காஷ்மீரில் பாஜக தலைவரான நிரஞ்சன் ஹோஜாய் உள்ளிட்ட 15 பேர் மீது தேசிய புலன்விசாரணை ஆணையத்தின் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டது உண்மையா இல்லையா?

 

12.   தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் சவ்ரியா தோவல் பாகிஸ்தானில் உள்ள சையது அலி அப்பாஸுடன் இணைந்து வியாபாரம் செய்வது எப்படி? 

 

 

 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.