Skip to main content

திரிபுராவில் பாஜகவினரின் அட்டூழியம்!!!

Published on 02/07/2018 | Edited on 02/07/2018

திரிபுரா மாநிலத்தில் 27 ஆண்டுகால இடது முன்னணி ஆட்சி மாற்றப்பட்ட பிறகு, அந்த மாநிலம் இதுவரை இல்லாத அளவுக்கு முட்டாள்தனத்திலும், மூடநம்பிக்கையிலும் முன்னேறி இருக்கிறது. முதல்வரும், அமைச்சர்களும் பொறுப்பற்ற வகையில் பேட்டியளிப்பதால் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பாஜகவினர் தங்கள் விருப்பத்துக்கு ஒத்துழைக்காத பத்திரிகையாளர்களையும் விட்டு வைக்காமல் தாக்குதல் நடத்துகிறார்கள் என்றும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன.

 

திரிபுரா மாநிலத்தில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி 11 வயது சிறுவன் கொல்லப்பட்டான். இதுகுறித்து சமூகவலைத் தளங்களில் தகவல்கள் பரவின. அந்தச் சிறுவனுடைய கிட்னிகள் திருடப்பட்டிருப்பாதக சில தகவல்கள் வெளியாகின.

 

tripura


 

 

 

இதுபற்றி பேசிய மாநில சட்ட அமைச்சர், அந்த சிறுவனின் கிட்னியை சர்வதேச அளவிலான ஒரு கிட்னி திருட்டுக் கும்பல் திருடியிருக்கலாம் என்று பொறுப்பில்லாமல் பதில் அளித்திருக்கிறார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. குழந்தைகளை திருடுகிறவர்கள் என்ற சந்தேகத்தில் மாநில முழுவதும் பல இடங்களில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

 

இந்தத் தாக்குதல்களில் 20க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். மூவர் பலியாகினர். இதையடுத்து திரிபுராவில் இணை சேவை ரத்துசெய்யப்ட்டது. மூன்று நாட்கள் இணைய சேவை ரத்து செய்யப்பட்டன.

 

tripura


 

இதுபுறமிருக்க, திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதும், தாக்குதலுக்கு ஆளாவதும் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பழங்குடியினர் ஆர்ப்பாட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற சந்தானு போவ்மில்க் என்ற பத்திரிகையாளர் கொல்லப்பட்டார். அதன்பிறகு, கடந்த ஜூன் 18 ஆம் தேதி எண்ணெய் திருடும் கும்பலைப் பற்றி செய்தி வெளியிட்ட தேப்நாத் என்ற பத்திரிகையாளரை அந்தக் கும்பல் கத்தியால் தாக்கி காயப்படுத்தியது.

 

 

 

கடந்த சனிக்கிழமை திரிபுராவிலிருந்து வெளிவரும் தேசர்கதா என்ற பத்திரிகையின் செய்தியாளர் தர் மீது 20 பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். ஃபோகஸ் திரிபுரா தொலைக்காட்சி சேனல் செய்தியாளர் தாஸ் என்பவர் மீதும் இதேபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டது. இரு சம்பவங்களிலும் பாஜகவினர் மீதே குற்றம்சாட்டப்பட்டது.

 

tripura


 

இந்த இருவரில் தேசர்கதா பத்திரிகையின் ஆசிரியர் தர், ஒரு கோழிப் பண்ணையை பெற்றுத்தர உதவவில்லை என்பதால் 20க்கும் அதிகமான பாஜகவினரால் தாக்கப்பட்டதாக அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் சமிர் பால் தெரிவித்துள்ளார்.

 

ஜனநாயகத்தின் தூண்களை அடித்து நொறுக்கி தங்களின் அட்டூழியங்களை பாஜகவினர் தொடர்வதாகவும், மக்களை அச்சுறுத்தியும் திசைதிருப்பியும் பாஜகவினர் கார்ப்பரேட்டுகளுக்கு காரியம் செய்துகொடுப்பதாகவும் இடதுமுன்னணியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

 

 

 

 

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.