Skip to main content

தூசுறிஞ்சியை கண்டுபிடித்தவர்...

Published on 04/07/2018 | Edited on 05/07/2018
vaccum cleaner

 

 

 

முதன்முதலில் மின்சாரத்தால் இயங்கும் வாக்வம் கிளீனர் எனும் தூசுறிஞ்சியை கண்டுபிடித்தவர் ஹியூபெர்ட் செசில் பூத். இன்று இவருடைய 147 ஆவது பிறந்தநாள். இவர்தான் தீம் பார்க்குகளில் முக்கிய இடம்பிடித்துள்ள ஜெயண்ட் வீலையும், தொங்கு பாலத்தையும் கண்டுபிடித்தார்.

 

sheshil booth


 

 

 

சிவில் என்ஜினியரான பூத் லண்டன், பிளாக்பூல், பாரீஸ், வியென்னா ஆகிய நகரங்களில் ஜெயண்ட் வீல்களை அமைத்துக் கொடுத்தார். இத்தகைய வீல்கள் அமைக்கப்பட்ட புதிதில் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

 

 

 

நதிகளுக்கு இடையிலும், மலைகளுக்கு இடையிலும் குறைவான மூலப்பொருட்களுடன் பாதுகாப்பான தொங்கு பாலங்களை முதன்முதலில் வடிவமைத்தவரும் இவர்தான். இவருடைய நினைவாக கூகுள் தனது டூடுலை வடிவமைத்திருக்கிறது.

 

 

 

Next Story

“நான்தான் பாலத்தை கட்டவேண்டும் என்பது பகவான் கிருஷ்ணரின் முடிவு” - பிரதமர் மோடி பெருமிதம்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
 PM Modi proudly says It was Lord Krishna's decision that I should build the bridge

குஜராத் மாநிலத்தில், 4 வழி கொண்ட கேபிள் பாலம் ஒன்றை பிரதமர் மோடி நேற்று (25-02-24) திறந்து வைத்தார். நாட்டின் மிக நீண்ட பாலமான இந்த பாலத்திற்கு சுதர்சன் சேது அல்லது சுதர்சன் பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதையடுத்து, துவாரகா தீவுக்கு அருகில் உள்ள துவாரகா கடற்கரையில் மூழ்கி பிரதமர் மோடி பார்வையிட்டு பிரார்த்தனை செய்தார். மேலும் அவர், நீருக்கடியில், கிருஷ்ணருக்கு அடையாளமாக மயில் இறகுகளை கொண்டுசென்று காணிக்கையாக செலுத்தினார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அதன் பிறகு, துவாரகாவில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “குஜராத்தில் நான் முதல்வராக இருந்த போது, நான் சுதர்சன் சேது திட்டத்தை, அப்போது இருந்த காங்கிரஸ் அரசிடம் முன்வைத்தேன். ஆனால், அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. சுதர்சன் பாலத்தை நான் கட்ட வேண்டும் என்பதை பகவான் கிருஷ்ணர் சாத்தியப்படுத்தியுள்ளார். இன்று துவாராகவிற்கு நான் ஒரு மயில் தோகையை எடுத்துச் சென்று சமர்ப்பித்துள்ளேன். இன்று என் கனவு நனவாகியதால் என் இதயம் உணர்ச்சிகளால் நிரம்பி வழிகிறது.

புதிய இந்தியாவுக்கான உத்தரவாதத்தை நான் மக்களுக்கு வழங்கியபோது, எதிர்கட்சிகள் என்னை கேலி செய்தனர். ஆனால் இன்று ஒவ்வொரு இந்தியனும் தங்கள் கண் முன்னே ஒரு புதிய இந்தியா கட்டப்படுவதை பார்க்க முடிகிறது. காங்கிரஸ், நீண்ட காலம் ஆட்சியில் இருந்த போதிலும் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்களின் முயற்சி அனைத்தும் ஒரு குடும்பத்தை மட்டும் முன்னேற்றுவதற்காகவே. இருந்தது. ஊழல்களை மறைத்து ஐந்தாண்டுகள் எப்படி அரசாங்கத்தை நடத்துவது என்பதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினார்கள். 2014க்கு முந்தைய 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்தது. 

2014-ல் நீங்கள் அனைவரும் என்னை ஆசிர்வதித்து டெல்லிக்கு அனுப்பிய போது கொள்ளையடிக்கப்படாமல் நாட்டைக் காப்பாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்து காங்கிரஸ் ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இப்போது இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இதன் விளைவுதான் இப்போது இந்தியாவில் நீங்கள் பார்க்கக்கூடிய கட்டுமான அற்புதங்கள்” என்று கூறினார்.

Next Story

'மேம்பாலப் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை சரிதான்' - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
'Prohibition imposed on flyover works is correct'- Madurai High Court orders

மதுரையில் 350 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாலப் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை சரிதான் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். மதுரையில் இரண்டு கண்மாய்களைப் பாதிக்கும் வகையில் 350 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் இருக்கக்கூடிய முக்கியமான நீர் ஆதாரத்தின் மேல் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே இதற்குத் தடை விதிக்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த நிலையில், ஜி.ஆர்.சாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. இரண்டு மேம்பாலப் பணிகளுக்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் நீதிபதி புகழேந்தி பணிகளைத் தொடரலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்தநிலையில் இந்த மாறுபட்ட உத்தரவுகளைத் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தனர். தலைமை நீதிபதியான தண்டபாணி முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், கண்மாய்களை அழிக்கும் வகையில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. நீர்த்தேக்கம் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்தார். அதைப் பதிவு செய்த நீதிபதி தண்டபாணி, பாலம் கட்டுவதற்கு முன்பாக இருந்த கண்மாய்களின் பரப்பளவு  மற்றும் நீர்த்தேக்க பரப்பளவு குறித்து விவரங்களைக் கேட்டார். ஆனால் அதற்கு அரசு தரப்பில் எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து 350 கோடி ரூபாய் மேம்பாலப் பணி திட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி கொடுக்க இயலாது. இந்த வழக்கில் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கவும் விரும்பவில்லை. நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் இடைக்காலத் தடை உத்தரவு கொடுத்திருக்கிறார். அந்த உத்தரவுக்கு நான் பொருந்துகிறேன் எனத் தெரிவித்து, மீண்டும் இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விற்குப் பட்டியலிட உத்தரவிட்டார்.