Skip to main content

என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? ஊரடங்கு இப்போது வேண்டாமா? முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி!

Published on 06/04/2020 | Edited on 06/04/2020


கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் விவாதித்தார் பிரதமர் மோடி. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சில மாநிலங்கள் மத ரீதியாக அலட்சியம் காட்டுவதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும்,ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர்களுடன் விவாதிப்பதற்கு முன் கடந்த 31-ந்தேதி பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல்.அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய உளவுத்துறைகளான ஐ.பி., ரா உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகளுடன் ஒரு அவசர ஆலோசனையை நடத்தியிருந்தார் பிரதமர் மோடி.


  bjp



அந்த ஆலோசனையில், உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச அளவிலான சில வைரலாலஜி ஆராய்ச்சி மையங்கள் ஆகியவை இந்தியாவில் கொரோனா தாக்கம் குறித்து கொடுத்துள்ள ரிப்போர்ட்டுகள் அலசப்பட்டிருக்கின்றன. குறிப்பாக,கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது.ஆனால் அவைகள் குறைத்துக்காட்டப்படுகின்றன.

21 நாள் தேசிய ஊரடங்கு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்தாலும் இந்திய மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடவடிக்கைகள் தற்போதுள்ளதைவிட இரு மடங்கு தீவிரப்படுத்தப்பட வேண்டும். அதற்கு ஊரடங்கை நீட்டிப்பது அவசியம்.இதில் அலட்சியம் காட்டினால் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை செய்திருக்கிறது.

இந்த எச்சரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதில்,கொரோனாவைக் குறித்த தெளிவு மக்களுக்கே வந்திருப்பதால் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதில் முழுமையாக ஒத்துழைக்கிறார்கள்.ஆனால், ஊரடங்கை நீட்டிப்பது வேறு பல சிக்கல்களை உருவாக்கும்.ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் இப்போதே பணப்புழக்கம் குறைந்து விட்டதால் ஊரடங்கை உடைத்து வெளியேறலாமா என யோசிக்கிறார்கள்.மளிகைக் கடைகளில் உள்ள பொருட்களும் குறைந்து விட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் உணவுதானியத் தட்டுப்பாடு பல மாநிலங்களில் நெருக்கடியை ஏற்படுத்தும்.அதனால், ஊரடங்கை நீட்டிக்காமல் சூழலைக் கையாள்வதுதான் சரியானதாக இருக்கும் என உயரதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.அதிகாரிகளின் யோசனை அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்களையும் ஆமோதிக்க வைத்திருக்கிறது.



 

cm



கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி அவர்களை கண்காணிப்பதிலும் தொற்று உறுதி சோதனைகளை விரைவு படுத்துவதிலும் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களை மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சைத் தருவதிலும் மாநில அரசுகள் வேகத்தை அதிகரிக்க வேண்டும். ஊரடங்கு முடிவுக்குப் பிறகும் இதே கவனத்தை சுகாதார துறையினர் மேற்கொள்வது அவசியம் என அதிகாரிகள் சொன்ன யோசனைகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. இதனையடுத்தே, மாநில முதல்வர்களுடன் மீண்டும் விவாதிக்க முடிவு செய்யப்பட்டது என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

முதல்வர்களுடன் மோடி விவாதித்தபோது, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டும்படி இருக்கிறது. இருப்பினும் சமுக தொற்றாக மாறாமல் இருக்க இன்னும் வேகம் வேண்டும். தீவிர கவனம் செலுத்துங்கள். சோதனை மையங்களையும், மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகப்படுத்துவதிலும் பல மாநிலங்கள் அக்கறை காட்டவில்லை. மேலும், கொரோனாவை தடுப்பதற்காக மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒதுக்கிய நிதிகளில் தவறுகள் நடந்து வருகிறது. அதனை சரி செய்யுங்கள். டெல்லியில் நடந்த மத வழிபாட்டு மாநாட்டில் கலந்து கொண்டு மாநிலங்களுக்கு திரும்பியவர்களை கண்காணிப்பதில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என காட்டமாக பேசிய மோடி, ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து மக்கள் வெளியேறாமல் இருக்க அவர்களுக்குத் தேவையான பொருட்கள் அவர்களது வீடு தேடி செல்வதற்குரிய வழிகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தம்மிடமிருந்த புள்ளி விபரங்களை வைத்து கேள்விகளை எழுப்பினார் மோடி.

 

admk



மோடியுடன் பேசிய மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ்தாக்கரே, டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்களை கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்தியிருக்கிறோம். அவர்களோடு தொடர்புடையவர்களும் கண்காணிப்பில் இருக்கிறார்கள். அவர்களின் ஒத்துழைப்பும் திருப்திகரமாக இருக்கிறது. எந்த ஒரு மதத்தின் கூட்டங்களுக்கும் நாங்கள் அனுமதிக்கவில்லை. சோதனைகளின் முடிவுகளை விரைந்து அறிந்துகொள்வதில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளன. மூன்றாவது நிலைக்கு போகாமல் இருப்பதற்கான எல்லா மருத்துவ முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. முக கவசம் அணிந்தும், சமூக விலகலை கடைப்பிடித்தும் மதம் சார்ந்த கூட்டங்களில் பங்கேற்க முயற்சிக்கிறார்கள். அப்படிப்பட்ட முயற்சிகளுக்கும் தேசிய அளவில் தடை விதிக்கலாம் என சொல்லியிருக்கிறார்.

இதே ரீதியில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், உ.பி.முதல்வர் யோகி ஆதித்யாநாத், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், ம.பி.முதல்வர் சிவராஜ் சவுகான் உள்ளிட்ட பலரும் பேசினர். தமிழக முதல்வர் எடப்பாடி, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உயரதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இதுவரையில் எடுக்கப்பட்டு வந்துள்ள நடவடிக்கைகளையும், எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், நோய் தொற்றுள்ளவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும் விரிவாகப் பேசினார்.

கொரோனா தடுப்பு நடவடிக் கைகளுக்காக 9 ஆயிரம் கோடி நிதி கேட்டு ஏற்கனவே எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டியதுடன், பல்வேறு மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ய மேலும் 3 ஆயிரம் கோடி தேவைப்படுவதால் 12 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார் எடப்பாடி. அப்போது மோடி எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்தார் தலைமைச் செயலாளர் சண்முகம். மோடியுடன் விவாதித்த முதல்வர்கள் அனைவருமே தங்கள் மாநிலத்துக்கு இத்தனை கோடி நிதி வேண்டும் என்பதை வலியுறுத்த தவறவில்லை. ஆனால், யாருக்குமே மோடி உறுதி தரவில்லை.

இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா என மோடி கேள்வி எழுப்பியபோது, வேண்டாம் என்றே பெரும்பாலான முதல்வர்கள் தெரிவிக்க, டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட 8 மாநில முதல்வர்கள் ஊரடங்கு முடியும்போது அப்போ தைய சூழலில் தீர்மானிக்கலாம் என சொல்லியுள்ளனர். இறுதியாக பேசிய மோடி, ஊரடங்கு முடிந்த பிறகும் இப்போதைய மருத்துவ நடவடிக் கைகளே தொடர வேண்டும்.; அதில் அலட்சியம் இருக்கக்கூடாது. அனைத்து மாநிலங்களும் பின்பற் றும் வகையில் கையாள வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வழங் கும் என்பது உள்ளிட்ட சில அறி வுறுத்தல்களை கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடியுடனான ஆலோசனையை முடித்ததும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அமைச்சர்கள் மற்றும் அதன் உயரதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி. அதுகுறித்து விசாரித்த போது, ’கொரோனா தடுப்புக்கான மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்வதிலுள்ள சிக்கல்களை களைவதற்காக சில முடிவுகளை எடுத்தனர். குறிப்பாக, இன்வெசிவ் வெண்டிலேட்டர்ஸ், என்-95 ரக மாஸ்க்குகள், மலேரியா நோய் எதிர்ப்பு மருந்துகளான ஹைட்ராசிக் குளோரோகுவினோன், அசித்ரோமைசின், பாதுகாப்பு கவச உடைகள், மல்டி பேராமீட்டர் ஐ.சி.யூ. மானிட்டர்கள் உள்ளிட்டவைகளை கொள்முதல் செய்வதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்காக அவைகளை உற்பத்தி செய்யும் தகுதி வாய்ந்த நிறுவனங் களுக்கு மொத்த மூலதனத்தில் 30 சதவீத மானியம் தருவது உள்பட பல சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது‘’ என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

இந்த ஆலோசனைகளுக்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை எடப்பாடியை ராஜ்பவனுக்கு அழைத்து விசாரித்தார் கவர்னர் பன்வாரிலால். அப்போது, தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதியுடன் கவர்னரை சந்தித்த எடப்பாடி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை அழைத்து செல்லவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கையையும் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு குறித்தும் கவர்னர் விசாரித்த போது அது குறித்து தயாரிக்கப்பட்டிருந்த ஒரு ரிப்போர்ட்டை கவர்னரிடம் கொடுத்துள்ளார் எடப்பாடி. அதனை படித்துப்பார்த்து சில அதிருப்திகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அது குறித்து விளக்கத்தை தலைமைச்செயலாளர் சண்முகம் விவரித்த நிலையில், வைரலாலஜி சோதனை மையங்களுக்கான உபகரணங்களில் நடந்துள்ள ஒரு ஊழல் குறித்து கவர்னர் எழுப்பிய கேள்விக்கு எடப்பாடியும் அதிகாரிகளும் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்துள்ளனர் என்கிறார்கள் ராஜ்பவனுக்கு நெருக்கமான அதிகாரிகள்.

 

Next Story

தமிழக பா.ஜ.க.வினருக்கு பிரதமர் மோடி பாராட்டு! 

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Prime Minister Modi praises Tamil Nadu BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் இந்த மக்களவை தேர்தலில் திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அ.ம.மு.க. பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

இந்நிலையில் பிரதமர் மோடி நமோ செயலி (NAMO APP) மூலம் ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற தலைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளுடன் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக பாஜகவின் அனைத்துத் தொண்டர்களும் மிக நீண்ட காலமாக நன்றாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர். ‘எனது பூத், வலிமையன பூத்’ என்றால் எனது வாக்குச் சாவடி வலிமையானது என்று பொருள். இந்த திட்டம் அனைத்து பா.ஜ.க. தொண்டர்களையும் இணைப்பதுடன் ஒருவருக்கொருவரும் கற்றுக்கொள்ள உதவும்.

தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் வணக்கத்தோடு பேசத் தொடங்குகிறேன், ஆனால் இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஒரு தொண்டர் மற்றொரு தொண்டரை வாழ்த்துகிறார். வணக்கம் என்றவுடன், தொண்டர்களுக்குள் ஒரு உணர்வு வரும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பள்ளி நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம், 25, 30 வருடங்கள் கடந்தாலும், சிறியவர், பெரியவர் என்று யாரும்  பாராமல் ஒருவரை ஒருவர்  மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார்கள். அதேபோல், இது தேர்தல் பணி தொடர்பான ஒரு திட்டம் என்பதால் நானும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறேன். உங்கள் எல்லோரையும் போல என் வாழ்வின் பெரும்பகுதியை ஒரு தொண்டனாகவே உழைத்திருக்கிறேன், அதனால்தான் இன்று நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருவதால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொது நிகழ்ச்சிகளுக்காக கடந்த முறை தமிழகம் வந்தபோது தமிழக மக்களின் ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொண்டர்களின் கடின உழைப்பைப் பார்க்க முடிந்தது, அப்படிப்பட்ட தொண்டர்களைப் பெற்றதை பெருமையாக உணர்ந்தேன். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்மாதிரியாக கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதும், அதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதும் எங்களது உறுதி. பா.ஜ.க.வின் பெண் தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

போதைப்பொருட்கள் நம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அழிக்கும். கடந்த நாட்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருள் பதுக்கல்களும், அதற்கு முக்கிய காரணமானவர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்புடையவர்கள். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே நீங்கள் அனைவரும் நம் குடும்பங்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” எனப் பேசினார். 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.