Skip to main content

தேர்தலை சந்திக்க திராணியற்றவர்கள்... கட்சியின் மூத்த தலைவரை விளாசிய தமிழக எம்.பி.

Published on 01/12/2020 | Edited on 01/12/2020
dddd

 

வெளிப்படையான எதிரியை வெற்றிகொள்ளும் வலிமை இல்லை. உள்ளுக்குள்ளேயே உருவாகும் எதிரிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியவில்லை. இதுதான் காங்கிரசின் அகில இந்திய நிலை. கடும் நெருக்கடியில் இருக்கிறார் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி.

 

நேரு குடும்பத்துக்கு வெளியே இருந்து தலைவரை தேர்வு செய்யுங்கள் என்பதை வலியுறுத்தி கட்சியின் தலைவர் பதவியிலிருந்து கடந்த 2019-ல் விலகினார் ராகுல்காந்தி. அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டியும் தலைவராக ராகுல்காந்தியை தேர்ந்தெடுத்த பிறகும் தலைவர் பதவியை அவர் ஏற்கவில்லை. இன்னமும் நிரந்தரத் தலைவரின்றித் தவிக்கிறது காங்கிரஸ்.

 

நிரந்தரத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை இடைக்காலத் தலைவரான சோனியாவிடம் அளித்தும் அவர் இன்னும் தேர்வு செய்யாததால், தலைமைப் பொறுப்பு குறித்து பலவித கருத்துகளும் சர்ச்சைகளும் வெளிப்படுகின்றன.

 

பீஹார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்த் திருந்தனர். ஆனால், கடுமையான தோல்வியை காங்கிரஸ் சந்திக்க, எதிர்மறை விமர்சனங்களை வைக்கத் துவங்கி யுள்ளனர் கட்சியின் மூத்த தலைவர்கள்.

 

ddd

ராஜ்யசபாவின் காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத், ""தேர்தல் காலங்களில் காங்கிரசில் வேட்பாளர் தேர்வின்போது, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கலாச்சாரம் தலை தூக்கியிருக்கிறது. இதனால் மக்களுக்கும் காங்கிரசுக்குமான தொடர்பு அறுந்து விட்டது. மக்கள் தொடர்பை காங்கிரஸ் நிர்வாகிகள் இழந்து விட்டனர். பாஜகவிலும் இது விதிவிலக்கல்ல. இருப்பினும் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் கூட பாஜக வேரூன்றி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள் அப்படி இயங்கவில்லை'' என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

 

அதாவது, கட்சியின் மேலிடப் பார்வை யாளர்களாக அந்தந்த மாநிலங்களுக்கு செல்பவர்களை லோக்கல் பிரமுகர்கள் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் தங்க வைத்து, சகல வசதிகளுடன் ஜிவ் ஏற்றி விடுகிறார்கள். அதில் மயங்கியும், லோக்கல் அரசியலில் ஒரு சார்பு நிலை எடுத்தும், மாநிலத்தில் கட்சி வளர்ச்சியைக் கண்டு கொள்ளாமல் விடுவ தால், வேட்பாளர் தேர்வில் கோட்டை விட்டுவிடு வதால், காங்கிரசுக்கு தொடர்ந்து தோல்வி ஏற்படுகிறது என்பதுதான் குலாம்நபியின் குற்றச்சாட்டு. தமிழக காங்கிரசின் மேலிடப் பிரதிநிதி தொடர்பான இந்த ஃபைவ் ஸ்டார் கலாச்சாரம் பற்றி அண்மையில் ராங்-கால் பகுதியில் பதிவாகியிருந்தது.

 

குலாம் நபி ஆசாத் போன்ற மற்றொரு மூத்த தலைவரான கபில்சிபில், ""18 மாதங்களாக முழு நேரத் தலைவர் இல்லாத கட்சியால் பாஜகவுக்கு எதிராக வலிமையான கட்சியாக நாம் எப்படி இருக்க முடியும்'' எனக் கேள்வி எழுப்பி யிருக்கிறார். இதற்கு வலிமை சேர்ப்பது போல பேசியிருக்கும் ப.சிதம்பரம், ""குஜராத், உத்தரபிரதேசம், ம.பி. உள் ளிட்ட மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கு அடிப் படை கட்டமைப்பில் வலிமை இல்லை என்பதையும், கட்சி பலவீனமடைந்து வருவதையும் நமக்கு உணர்த்துகிறது'' என விமர்சித்திருக்கிறார்.

 

பீகாரின் மூத்த தலைவர் தாரிக் அன்வர், ‘""கட்சியின் தோல்விக்கு ஒருவகையில் குலாம்நபி ஆசாத்தும் பொறுப்பேற்க வேண்டும். தோல்விக்கு தலைமை மட்டுமல்ல அனைவருமே காரணம்தான். தலைவர்கள் பொறுப்புடன் நடந்திருந்தால் நமக்கு இவ்வளவு பெரிய தோல்வி வந்திருக்காது'' என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.

 

ராகுலின் ஆதரவாளரும் நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ""தலைமைக்கு எதிராக விமர்சிப்பவர்கள் தேர்தல் களத்திற்கே வராதவர்கள். இந்த சரிவில் இருந்து காங்கிரஸ் மீண்டும் எழும்'' என்கிறார்.

 

ddd

 

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் எம்.பி. மானிக்கம்தாகூரிடம் நாம் பேசியபோது, ’""குலாம் நபி விமர்சித்திருக்கும் 5 நட்சத்திர ஹோட்டல் கலாச்சாரம் அவருக்கு தெரியாததல்ல. தமிழகத் துக்கு வரும் போதெல்லாம் அந்த கலாச்சாரத்தை அனுபவித்தவர்தான். குலாம்நபியை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் மோடி-அமித்சாவின் அதிகாரத்தை 2024-ல் காங்கிரஸ் துடைத்தெறியும். ராகுலின் தலைமையில் காங்கிரஸ் மீண்டும் உயிர்த்தெழும். தலைமையை விமர்சிக்கும் குலாம்நபி போன்றவர்கள், கட்சி தேர்தலை சந்திக்க திராணியற்றவர்கள்'' என்கிறார் ஆவேசமாக.

 

குலாம்நபியின் விமர்சனத்திற்கு ஏதேனும் பின்னணி இருக்கிறதா என விசாரித்தபோது, ""வருகிற ஜனவரி மாதம் அவரது ராஜ்யசபா பதவி காலம் முடிவடைகிறது. மீண்டும் அவர் ராஜ்யசபா எம்.பி.யாக அண்மைக்காலத்தில் சாத்தியமில்லை. 1982-களிலிருந்தே டெல்லியில் அரசின் ஆடம்பர பங்களாவில் இருந்தே பழக்கப்பட்டு விட்டார் ஆசாத். பிப்ரவரிக்கு பிறகு அரசு பங்களாவை காலி செய்வ வேண்டும். கட்சியிலும் இனி பெரிய பிடிப்பு அவருக்கு கிடைக்காது. அதனால் பாஜகவின் விருப்பத்திற்கேற்ப இப்படி விமர்சித்து வருகிறார்'' என்கின்றனர்.

 

இதற்கிடையே, பாஜகவின் வேளாண்மை சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிக்கும் சோனியா உத்தரவிட்டி ருக்கும் நிலையில், தமிழகத்தில் இதனை வீரியமாக நடத்தி வருகிறார் கே.எஸ்.அழகிரி. பாஜகவின் வேல் யாத்திரைக்குப் போட்டியாக ஏர் கலப்பை பேரணி யை நடத்தி வரும் அழகிரி, வருகிற 28-ந்தேதி 71 தொகுதிகளில் இந்த பேரணியை நடத்த திட்டமிட் டிருக்கிறார். முக்கிய தலைநகரங்களில் இந்த பேரணியை துவக்கி வைக்கிறார்கள் காங்கிரஸ் தலை வர்கள். 234 தொகுதிகளிலும் இத்தகைய பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளது தமிழக காங்கிரஸ்.

 

டெல்லியில் காற்றில் மாசு அதிகரித்திருப்ப தால் கோவா அல்லது சென்னையில் தங்கியிருக்கச் சொல்லி சோனியாவுக்கு அறிவுறுத்தி யிருக்கிறார்கள் அவரது குடும்ப மருத்துவர்கள். இதனைத் தொடர்ந்து மகன் ராகுல்காந்தியுடன் கோவாவுக் குப் பயணப்பட்டிருக்கிறார் சோனியா. இரு வாரங்கள் அங்கு தங்கியிருக்கும் சோனியா, கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது குறித்து ராகுலிடம் விவாதித்து வருகிறார். மூத்த தலைவர்களையும் காங்கிரஸ் நிர்வாகிகளையும் கட்சியின் தொண்டர்களையும் ஒருங்கிணைத்து அரசியல் செய்யும் சக்தி ராகுல் காந்தியைத் தவிர வேறு எந்த ஒரு தலைவருக்கும் இல்லை என்பதால் கட்சியின் முழு நேர தலைவராக ராகுலை ஏற்க வைக்கும் முயற்சியில் இருக்கிறார் சோனியா காந்தி.

 


 

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.