Skip to main content

ஆர்.எஸ்.எஸ். அரங்கேற்றும் புதிய நாடகம்!

Published on 09/06/2018 | Edited on 09/06/2018

தேர்தல் நெருங்குகிற சமயத்தில் எல்லாம் பாஜகவும் காவிச் சங்கங்களும் புதிய தந்திரத்தை கடைப்பிடிப்பார்கள். 2019 ஆம் ஆண்டு மே மாதம் மக்களவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதோ ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது புதிய நாடகத்தை அறங்கேற்றியுள்ளது.

 

pranab at rss



இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும். எல்லா மதத்தினருக்கும் ஒரே சட்டம் கொண்டுவர வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும். சமஸ்கிருத மொழிக்கு முடி சூட்ட வேண்டும். சாதி அமைப்புகளை உத்தரவாதப்படுத்தும் மனுசாஸ்திரத்தை அமல்படுத்தபடுத்த வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ்சின் திட்டம்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தவே அரசியல் அமைப்பாக பாஜகவையும் அதன் துணை அமைப்புகளாக பல்வேறு காவி அமைப்புகளையும் ஆர்எஸ்எஸ் உருவாக்கி உலவவிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஆளுக்கொரு குரலில் பேசுவார்கள். கலகம் செய்வார்கள். கட்டிப்பிடிப்பார்கள். ஆனால், அவர்கள் அனைவரின் இலக்கும் ஒரே இடத்தை நோக்கியே இருக்கும்.

கடந்த தேர்தலுக்கு முன் மோடியை மோல்டு செய்து மூத்த தலைவர்கள் பலரை பின்னுக்கு தள்ளியது ஒரு தந்திரம். அதாவது, அவர்களுக்கு எதிரான விஷயம் மக்கள் மத்தியில் பிரச்சாரத்துக்கு பயன்பட்டுவிடக்கூடாது என்பதே ஆர்எஸ்எஸ்சின் திட்டம்.

ஆனால், இப்போது பாஜகவுக்கு ஆதரவான கட்சிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக கழன்றுகொண்டிருக்கும் நிலையில், இடைத்தேர்தல்கள் அனைத்திலும் தோல்வி அடைந்து கொண்டிருக்கிறது பாஜக. மோடியைச் சுற்றி உருவாக்கிய பிம்பம் உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது. பாஜகவின் ஒரே இந்தியா, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே சட்டம் என்பதெல்லாம் நடைமுறை சாத்தியமில்லை என்பதை ஆர்எஸ்எஸ் உணர்ந்துவிட்டது.

 

 


எனவே, இப்போது புதிய வேடத்தை போட வேண்டியிருக்கிறது. அதற்கான முயற்சிதான், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை, ஆர்எஸ்எஸ் விழாவுக்கு அழைத்தது என்கிறார்கள்.

பிரணாப்புக்கு அழைப்பு விடுத்ததும் நாடு முழுவதும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது. அதை பிரணாப் ஏற்றது மதசார்பற்றோர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஆர்எஸ்எஸ் விழாவில் பங்கேற்ற பிரணாப் இந்தியாவின் பலமே சகிப்புத்தன்மைதான். நாட்டின் பன்முகத் தன்மைக்கு மதிப்பளிக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாட வேண்டும். சகிப்புத்தன்மை இல்லாமல் போனால் நமது நாட்டின் அடையாளத்தை அழித்துவிடும் என்று பொட்டில் அறைந்தது போல பேசினார் பிரணாப்.

பிரணாப் அப்படித்தான் பேசமுடியும். ஆனால், பிரணாப் ஆர்எஸ்எஸ் மேடையில் பேசியதை அந்த அமைப்பு தனது முகத்துக்கு புதிய அரிதாரம் பூசப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

மாற்றுக் கருத்துக்களுக்கும் ஆர்எஸ்எஸ் மதிப்பளிக்கும் என்பதை வெளிப்படுத்த இந்த மேடையை பயன்படுத்திக் கொள்ளும். இந்த விழாவில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத், ஆர்எஸ்எஸ் தனது நிலைப்பாட்டில் மாறாது என்பதை தெளிவுபடுத்தினார்.

  pranab photoshop



ஆனால், இந்த விழாவில் பேசிய பிரணாப் ஆர்எஸ்எஸ் அமைப்பை நிறுவிய ஹெட்கேவரை பாரதத்தாயின் தவப்புதல்வர் என்று சொல்லியிருக்கிறார். அதுதான் சங்கடமாக இருக்கிறது. பிரிட்டிஷாருடன் ஒத்துழைத்த, நாட்டு மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்த ஒரு அமைப்பின் தலைவரை பாரதத்தாயின் தவப்புதல்வர் என்றால் மதசார்பின்மையை ஆதரிப்போருக்கு சங்கடமாகத்தானே இருக்கும்?

இது ஒரு பக்கம் இருந்தாலும், விழா முடிந்த சில நிமிடங்களிலேயே ஆர்எஸ்எஸ், பாஜக கூட்டத்தினர் தங்களுடைய போட்டோஷாப் வேலையை தொடங்கிவிட்டார்கள். ஆம், ஆர்எஸ்எஸ் மேடையில் பிரணாப் முகர்ஜி தலையில் தொப்பியுடன் மார்பில் கைவைத்து உறுதிமொழி எடுப்பதுபோன்ற படத்தை வெளியிட்டனர். இந்தப் படத்தை பார்த்ததும் பிரணாப்பின் மகள் ஷர்மிஸ்தா கொந்தளித்துவிட்டார். தாங்கள் பயந்ததுபோலவே நடந்துவிட்டதாகவும், இதற்காகத்தான் அந்த விழாவுக்கு போகவேண்டாம் என்று கூறியதாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

 

 


போட்டோஷாப் வேலையை மட்டுமல்ல, இனிவரும் தேர்தல்களில் அனுதாபம் தேடுவதற்கான வேலைகளிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டது. மோடியைக் கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதி என்ற செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி உண்மையானால் அனைவரும் இணைந்து கண்டிக்க வேண்டும்தான். ஆனால், மோடியின் செல்வாக்கு குறைந்துவரும் நிலையில், அவரைக் கொலை செய்யும் அளவுக்கு மாவோயிஸ்ட்டுகள் முட்டாள்களா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லையே. அதுமட்டுமின்றி ஆர்எஸ்எஸ் கூட்டத்தினர் ஆட்சியைப் பிடிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்ற கடந்தகால உண்மையும் கண்முன்னே வந்து போகிறது. மோடியின் உயிரைப் பறித்தால் அந்த அனுதாபம் யாருக்கு சாதகமாக அமையும் என்பதை மாவோயிஸ்ட்டுகள் அறியாதவர்கள் அல்ல. எனவே, இந்தப் பிரச்சாரமே ஒரு சதிதான் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

 

 

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.