Skip to main content

யார் பிள்ளைக்கு மோடி உரிமை கொண்டாடுறார்?

Published on 02/05/2018 | Edited on 02/05/2018

இந்தியா முழுக்க உள்ள கிராமங்கள் அனைத்தும் மோடி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் மின்சாரம் இல்லாமலா இருந்தன? சுருக்கென்று தைப்பதைப் போலத்தான் கேட்கிறார் ப.சிதம்பரம். ஆனால், மோடிக்கு உண்மையை ஒப்புக்கொண்டு பழக்கமே இல்லையே. அவருடைய ஆட்சியே பொய்களின் அஸ்திவாரத்தில்தானே ஓடிக்கொண்டிருக்கிறது.

Modi

 

 

இரண்டு நாட்களுக்கு முன் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பை வழங்கிவிட்டதாக பக்கம் பக்கமாய் விளம்பரம் செய்து மோடி அரசு பீற்றிக்கொண்டது. இதற்கு பதிலளித்த, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடிக்கு பல கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பினார். பொய்யைச் சொல்வாரே தவிர, அது பொய் என்று நிரூபிக்கப்பட்டாலும் தான் சொன்ன பொய்யை திரும்பப் பெறும் பழக்கம் மோடிக்கோ, பாஜகவுக்கோ எப்போதும் கிடையாது.

 

Modi govt advt

 

 

'விடுதலைக்கு பிறகு தொடங்கிய மின்மயமாக்கும் திட்டத்தை காங்கிரஸ் மட்டுமின்றி, இடையில் வந்த அனைத்து அரசுகளும் தொடர்ந்து மேற்கொண்டுவந்தன. முந்தைய அரசுகள் நிறைவேற்றிய திட்டங்களின் பலன்களையும் மோடி தனது கணக்கில் வரவு வைப்பது எப்படி நியாயமாகும்?' என்று சிதம்பரம் கேட்டுள்ளார். 'மோடி பதவியேற்கும்போது, 5 லட்சத்து 79 ஆயிரம் கிராமங்களுக்கு மின் இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்ததா இல்லையா? அந்த இணைப்புகளை வழங்கியது யார் என்று மோடி சொல்வாரா?' என்றும் அவர் கேட்டார். 'பெட்ரோல் மீதும் டீசல் மீதும் அளவுக்கதிகமான வரியை விதித்துவிட்டு, மக்களுடைய நலனுக்காகத்தான் வருமானத்தை அரசு திரட்டுவதாக கூறியிருக்கிறார், இவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்றும் கிண்டல் செய்துள்ளார்.

 

pa.chidambaram

 

இதனிடையே, எல்லா கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு கொடுத்துவிட்டதாக மோடி அரசு விளம்பரம் செய்திருப்பதை பொய் என்று நிரூபிக்கும் வகையில் அசாமில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் அந்த மாநில பாஜக தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தனது கிராமத்தில் தனது வீட்டிற்கு மட்டுமே மின்சாரம் கொடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறைகூறியிருக்கிறார். இன்னொரு முதியவரோ தனது கிராமத்துக்கு மின்சார வசதி செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவி்ததிருக்கிறார்.

 

இவ்வளவுக்கும் பிறகு, பெரிய கிராமங்களுக்கு மட்டுமின்றி குக்கிராமங்களுக்கும், சிறு குடியிருப்புகளுக்கும் மின் இணைப்பு வசதி செய்துதரப்படும் என்று மத்திய அரசு புதிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.