Skip to main content

’புரோக்கர் ஜெயக்குமார்...’- ஸ்டாலின் அடித்த கமெண்ட்டால் சிரிப்பலை 

Published on 07/02/2020 | Edited on 07/02/2020
s

 

டி.என்.பிஸ்.சி.யில் நடந்த முறைகேட்டில் தேடப்பட்டு வந்த தரகர் ஜெயக்குமார் நேற்று சரண் அடைந்துவிட்டார்.  இந்நிலையில், துறை சம்பந்தப்பட்ட அமைச்சரான, நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின்  அனுமதி இல்லாமல் இந்த முறைகேடு நடந்திருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளதால், அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

 

இந்த சூழ்நிலையில், சென்னை ராயபுரத்தில் தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 

’’டி.என்.பி.எஸ்.சி. விவகாரத்தில் ஜெயக்குமார் சரண் அடைந்திருக்கிறார்...’’என்று சொல்லிவிட்டு, ‘’தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள்...புரோக்கர் ஜெயக்குமார் சரணடைந்திருக்கிறார்’’என்று சொன்னபோது சிரிப்பலை எழுந்தது.  பின்னர் அவர்,   ‘’டி.என்.பி.எஸ்.சி. விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பதவிவிலக வேண்டும் என தி.மு.க. தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது’’என்று கூறினார்.