Skip to main content

காலையில் மலர்ந்து மாலையில் கருகியது - கர்நாடக தாமரை அரசியல்

Published on 15/05/2018 | Edited on 15/05/2018
karnataka


நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாமல் முடிவுகள் வந்துள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டு 222 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் கூடுதல் இடங்களை பெற்று 104 தொகுதிகளையும், காங்கிரஸ் 78 தொகுதிகளையும், மதசார்பற்ற ஜனதா தளம் 38, சுயேட்சைகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 
 

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. ஒரு கட்டத்தில் 124 தொகுதிகளை பாஜகவும், காங்கிரஸ் 68 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 32 தொகுதிகளிலும் முன்னிலை என செய்திகள் வெளியாகின. நண்பகல் வரை பாஜக தொடர் முன்னிலையில் இருந்தது. இதனால் உற்சாகம் அடைந்த கர்நாடக பாஜகவினர் குத்தாட்டம் போட்டு கொண்டாடினார்கள். அதன் எதிரொலியாக தமிழகத்திலும் ஆங்காங்கே பாஜகவின் ஆட்டம் பாட்டம் நடந்தது. அக்கட்சியின் தமிழக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு கர்நாடகாவின் வெற்றி தென்நாட்டில் பாஜகவுக்கு வாசல் திறந்தது என்று கூறினார். 
 

பாஜகவின் தேசிய செயலாளரான எச்.ராஜா, கர்நாடகாவில் பாஜக வலுப்பெறும் சக்தியாக வந்துவிட்டது. அடுத்து தமிழகமும் திரிபுராவாக மாறும் என்றார். இப்படி இவர்கள் மனம்போன போக்கில் கொண்டாடிக்கொண்டிருக்க கர்நாடகா வாக்கு எண்ணிக்கை கதை மாறத் தொடங்கியது. 

124 என்ற கணக்கு 114 ஆகி, அடுத்து 110 ஆகி, ஒவ்வொன்றாக குறைந்து 104ஆக சுருங்கியது. காங்கிரஸ் 68 என்ற கணக்கு உயரத்தொடங்கி, 78ல் நின்றது. அதே மதசார்பற்ற ஜனதாதளம் 38ஆக வளர்ந்தது. பிற்பகலுக்கு பிறகு இந்த முடிவுகள் வெளிப்பட பரபரப்பான அரசியல் திருப்பங்களும் நடந்தது. காங்கிரஸ் உயர்மட்ட குழு டெல்லியில் விவாதித்தது. அதன்படி பாஜகவை தென்நாட்டில் விடக்கூடாது என்று முடிவு செய்து முதல் அமைச்சர் சித்தராமையா அக்கட்சியின் மாநிலத் தலைவர் பரமேஸ்வரா உட்பட முன்னணி தலைவர்களோடு தொலைபேசி வாயிலாகவோ ஆலோசனை வழங்கி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம். இதன் மூலம் கர்நாடகாவில் பாஜகவின் அதிகார கனவை அறுத்தெறிவோம் என முடிவு செய்தார்கள். 
 

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களுடைய சிந்தனையும் அதுவாகவே இருந்தது. டெல்லி ஆலோசனைக்கு ஏற்க உடனடியாக களம் இறங்கிய காங்கிரஸ் மூத்த குலாம் நபி ஆசாத், மதசார்பற்ற ஜனதா தளத்தின் நிறுவனரான தேவகவுடா மற்றும் அவரது மகனும், முன்னாள் முதல் அமைச்சருமான குமாரசாமியிடம் நேரில் சென்று பேசினார். அதன்படி குமாரசாமிக்கு முதல் அமைச்சர் பதவியை கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டு துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான பரமேஸ்வராவை நியமிப்பது என்றும், இரண்டு கட்சி தரப்பிலும் உறுதி செய்யப்பட்டது. 
 

மஜக சார்பாக ஒரு நாள் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் தரப்பு அவகாசமே வேண்டாம், தேர்தல் முடிவு முழுமையாக வெளிவந்தவுடன் எங்களது ஆதரவு கடிதத்தோடு, ஆட்சி அமைக்க கோருமாறு கவர்னரை சந்தியுங்கள் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் இந்த திடீர் திருப்பம் பாஜகவை அதிர்ச்சியடைய வைத்தது. டெல்லி வரை கர்நாடக நிலவரம் பாஜகவை அதிரவைத்துள்ளது. காலையில் இருந்து மாலை வரை தென்னாட்டில் தாமரை மலர்ந்தது என்று மகிழ்ந்து கொண்டாடிய பாஜக மாலையில் அது பறிபோனது என துக்கத்தில் மூழ்கியுள்ளது. 
 

இருப்பினும் கர்நாடக கவர்னர் வஜ்ஜிபாய் லாலாவுக்கு டெல்லியில் இருந்து சில அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் செயல்பட தொடங்கியுள்ளார். இந்த அரசியல் ஆட்டத்தில் பாஜக அடுத்தடுத்து என்ன செய்யப்போகிறது என்பது கர்நாடகாவில் பரபரப்பு தொடங்கியுள்ளது. முதல்வர் கனவில் இருந்த எடியுரப்பா காங்கிரஸ் பின் வாசல் வழியாக ஆட்சி முற்பட்டுள்ளது என கூறியிருக்கிறார். காங்கிரஸ் மாநிலத் தலைவர் பரமேஸ்வரா, பின் வாசல் வழியாக நாங்கள் ஆட்சி அமைக்கவில்லை. சட்டமன்றத்தில் அதிக பெரும்பான்மையாக உள்ள எங்கள் அணி ஆட்சி அமைக்கிறது. எங்களது நோக்கம் ஆட்சி அதிகாரம் அல்ல, மதவாத சக்திகளை தென்னிந்தியாவில் நுழையவிடக்கூடாது என்கிற போராட்டத்தில் நாங்கள் தியாகம் செய்து வெற்றி பெற்றுள்ளோம் என பதலடி கொடுத்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.