Skip to main content

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் லஞ்ச ஒழிப்புத்துறை வரத்தான் செய்யும்..! அதற்காக அரசை குறை சொல்வதா..? - ராஜீவ்காந்தி பேட்டி!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

ghj

 

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டுவருகிறது. எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் தொடங்கிய இந்த ரெய்டு, வேலுமணி, வீரமணி என்று தொடந்து நடைபெற்ற நிலையில், தற்போது சி. விஜயபாஸ்கர் வரை தொடர்கிறது. அரசியலில் இருப்பவர்கள் தொழில் செய்யக் கூடாதா? பணம் சம்பாதித்தாலே அனைவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று கூறுவது நியாயமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை திமுகவின் ராஜீவ் காந்தியிடம் நாம் கேள்விகளாக முன்வைத்தம். நம்முறைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

திமுகவின் இந்த ஐந்து மாத கால ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள், சிறப்பாக செயல்படுகிறது என்று உங்கள் கட்சியினர் கூறுவதை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்களா?

 

திமுகவின் இந்த ஆட்சியை மக்களுக்கான ஆட்சியாகவே நாங்கள் பார்க்கிறோம். திமுகவுக்கு வருவதற்கு முன்பு எத்தனையோ முறை திமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்களை நாம் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறோம். அப்போதும் சரி, இப்போதும் சரி நாம் மேடையில் பேசுவது எல்லாம் சரி என்ற மனநிலையில் நான் எப்போதும் இருப்பதில்லை. அது ஏற்படுத்துகின்ற தாக்கம், மக்களின் மனநிலைகளுக்கு ஏற்ப அதில் மாற்றம் தேவைப்பட்டால் என்னை மாற்றிக்கொள்ள நான் எப்போதும் தயாராகவே இருந்திருக்கிறேன். அந்த அடிப்படையில் கருத்துக்களைக் கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் சோதித்து மறுபரிசீலனை செய்வதில் தவறில்லை. பாஜக போன்ற மதவெறி இயக்கங்களைத் தத்துவார்த்த ரீதியாக எதிர்கொள்ள திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற இயக்கம் தற்போதைக்குத் தேவை. எனவே மக்கள் நலன் சார்ந்தும், பாசிச சக்திகளுக்கு எதிராகவும் தற்போது திமுக சிறப்பாக செயல்பட்டுவருகிறது. 

 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து ரெய்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதைப் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக விமர்சனம் செய்துள்ளதைப் பற்றி? 

 

அரசியலில் ஈடுபடுபவர்கள் தொழில் செய்யக் கூடாது என்ற எந்த சட்டமும் இல்லை. எல்லா வகையான தொழிலும் செய்யலாம். ஆனால் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான வழிமுறைகளில் செய்ய வேண்டும். நான் ஒரு அரசியல்வாதி, நான் வக்கீல் தொழில் செய்கிறேன். எனக்கு கிடைக்கும் ஊதியத்தில் நான் முறையாக வருமான வரி கட்ட வேண்டும். அதுதான் இந்திய அரசியலமைப்பு வகுத்துள்ள சட்டத்திட்டம். எனக்கு ஒருவர் வழக்கிற்காக 2 கோடி பணம் தருவதாக கூறினால், அந்தப் பணத்திற்கு நான் முழுமையான வருமான வரி தாக்கல் செய்திருக்க வேண்டும். விஜயபாஸ்கர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருடைய வருமானம் 6 கோடி என்று காட்டியுள்ளார். அதற்காக வருமான வரியும் முறையாக கட்டியுள்ளார். அடுத்தமுறை தேர்தலில் போட்டியிடும்போது அவர் தனக்கு சொத்து மதிப்பு 56 கோடி எனக் கூறி, அதற்கான வருமான வரியைக் காட்டியுள்ளார்.

 

இவர் அமைச்சராவதற்கு முன்பு தொழில் செய்திருக்கலாம், அதன் மூலம் வருமானம் பார்த்திருக்கலாம். ஆனால் அமைச்சராக இருந்த அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் இவர் வருமானம் தரும் எந்த தொழிலையும் செய்யக் கூடாது என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இப்படி இருக்கையில், அவர் இந்த அளவு சொத்துக்கு வருமானவரி கட்டியிருந்தாலும் சொத்து எப்படி வந்தது என்ற கேள்வி இயல்பாகவே அனைவருக்கு வரும். அந்த வகையில், இந்த சொத்துக்கள் அனைத்தும் பினாமிகள் மூலம் பெறப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதால் அதிகாரிகள் தற்போது விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இதில் அனைத்து தகவல்களும் நிச்சயம் வெளிவரும். வீரமணியிடம் 200 மடங்கு, வேலுமணியிடம் 300 என்று வருமானம் எப்படி அதிகரித்தது என்ற சந்தேகம் இயல்பாகவே அனைவருக்கும் வரும். எல்லாமே பினாமிகள் மூலம் வாங்கப்பட்ட  சொத்துக்கள்தான்.  

 

இதை எப்படி கண்டுகொள்ளாமல் ஒரு மக்கள் அரசு செயல்படும். புகாருக்குள்ளாகும் அனைவரும் இந்த சோதனையில் சிக்குவார்கள். அரசியலில் தனிப்பட்ட நேர்மை மிக முக்கியம். இல்லை என்றால் கடுமையான நெருக்கடியை நாமே சந்திக்க வேண்டிவரும். அமைச்சராக இருப்பவர் தொழில் செய்யக் கூடாது, ஆனால் அவரின் வருமானம் மட்டும் 100 மடங்குகளில் அதிகரித்தால் அரசாங்கம் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் நாங்கள் செய்வோம். இதில் அதிமுக தலைமை குற்றம் சொல்வதற்கு இடமில்லை. விஜயபாஸ்கருக்கு கூடுதலாக வந்த 28 கோடி பணத்துக்கு அவர் முறையாக கணக்கு காட்ட வேண்டும். ஆனால் அவரால் கணக்கு காட்ட முடியில்லை. சொத்து சேர்த்தால் லஞ்ச ஒழிப்புத்துறை வரத்தான் செய்யும். அதற்காக அரசைக் குறை சொல்வதை எப்படி புரிந்துகொள்வது எனத் தெரியவில்லை. 

 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.