Skip to main content

புதிய நாடாளுமன்றத்தில் பசு மாடுகள் - இரகசியம் சொல்லும் இள. புகழேந்தி 

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

DMK Election Commission Secretary Ela. Pugazhendhi spoke about new parliament

 

புதிய பாராளுமன்றக் கட்டடம் திறப்பு மற்றும் செங்கோல் நிறுவியது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து திமுகவின் தேர்தல் பணிக் குழுச் செயலாளர் இள. புகழேந்தி நம்முடன் பேசினார். 

 

புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவில் ஆதீனங்கள் எல்லாம் இணைந்து பிரதமர் மோடிக்கு செங்கோல் வழங்கியுள்ளனர். அதனை அவர் சபாநாயகர் இருக்கையின் அருகே வைத்துள்ளார். இது தமிழர்களுக்கு பெருமை என பாஜகவினர் கூறுகின்றனர்?

 

இதற்கு பதில் அளித்த இள. புகழேந்தி, “மோடி அரசு பாராளுமன்ற திறப்பு விழாவில் தமிழர்களை பெருமைப்படுத்துவதாக பாஜக  கூறுவது, தமிழ்நாட்டில் இதன் மூலம் இந்துத்துவா கொள்கைகளை பரப்பி பாஜக ஆட்சியை பிடிப்பதற்காக அவர்கள் செய்யும் வாக்கு அரசியல் தான். இவர்களுக்கு உண்மையாகவே தமிழ் மேல் பற்று இருக்கிறது என்றால் அந்த பாராளுமன்றத்தில் சமஸ்கிருத கல்வெட்டிற்கு பதிலாக தமிழ் கல்வெட்டைத்தானே வைத்திருக்க வேண்டும்.

 

DMK Election Commission Secretary Ela. Pugazhendhi spoke about new parliament

 

இந்தியாவில் 20,000 பேர் கூட பேசாத சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக சுமார் ரூ. 1100 கோடி ஒதுக்கிய இதே மோடி அரசு, உலகத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த தமிழ் மொழிக்கு வெறும் 20 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. 

 

அனைத்து மதத்தை சார்ந்த மக்களும் இருக்கும் ஜனநாயக நாடான இந்தியாவில் இந்து முறைப்படி, ஆதீனங்களை வரவழைத்து இந்த விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக இன்னொரு சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது. உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் ஆட்கள், விழாவிற்கு முந்தைய நாள் இரவு இரண்டு பசு மாடுகளை அந்த இடத்திற்கு  கொண்டு சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி அந்த மாடுகள் சாணம் போடு வேண்டும் என 10 நிமிடங்களாக அங்கேயே காத்திருந்திருக்கின்றனர். 

 

மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.கள் அமரப்போகும் அந்த பாராளுமன்றக் கட்டடத்தில் காவி உடை அணிந்தவர்களை அழைத்து வந்த நோக்கம், 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ‘நாங்கள் அன்றே புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் இதனை எல்லாம் செய்தோம்; மக்கள் யாரும் எங்களை எதிர்க்கவில்லை. மீண்டும் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். அதனால், இந்த நாட்டில் சிறுபான்மையின மக்கள் இருக்கக்கூடாது என சட்டம் போடுவேன்’ என பேசுவார்கள்” என்று தெரிவித்தார். 

 

 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.