Skip to main content

காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தாரா கலைஞர்? - ஜோதிமணி விளக்குகிறார்  

Published on 08/08/2018 | Edited on 27/08/2018

சமூக ஊடகங்களில் ஒரு செய்தி நேற்றிலிருந்து பரவி வருகிறது. அன்று காமராசர் தவறியபோது, மெரினாவில் நினைவிடம் அமைக்க  காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இடம் கேட்டபோது, அன்றைய முதலமைச்சராய் இருந்த தி.மு.க தலைவரான கலைஞர்,  'ஒரு முன்னாள் முதல்வருக்கெல்லாம் இடம் ஒதுக்க முடியாது' என்று சொல்லியதாக சொல்வதுதான் அந்த செய்தி. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணியிடம் இது குறித்த விளக்கத்தைக் கேட்டோம்...

 

kamarajar death



"இந்தக் கருத்தைப் பரப்புவது யார் என்று பார்த்தால், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.  பசுவதைத் தடுப்பு சட்டத்தில் அன்று காமராசரை உயிருடன் கொளுத்த முயற்சி  செய்தார்கள். அப்பொழுது காமராஜருடைய பி.ஏ.வின் புத்திசாலித்தனத்தினால் வீட்டின் பின்வாசல் வழியாகத் தப்பிக்கிறார். இல்லை என்றால் காமராசர் அன்றே அவர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பார். இப்படி இருக்க, இன்னைக்கு  திடீர்னு எங்க இருந்து காமராசர் மேல பற்று வந்துச்சு? அன்றைய பத்திரிகைகளைப் பார்த்தாலே தெரியும். முதலில் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் காமராசர் உடலை  அடக்கம் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது, 'இல்லை அரசு மரியாதையுடன் காந்திக்கு பக்கத்தில் பண்ணலாம்' என்று அன்றைய முதலமைச்சர் கலைஞர் முடிவெடுத்தார்.

 

jothimani



இந்த நிகழ்வுகள் எல்லாம் கலைஞர் மீதான விமர்சனங்களை காட்டவில்லை. மாறாக பா.ஜ.க. எப்படி அதில் வேலை செய்பவர்களின்  மூளையை, மனநிலையை அழுகிப்போகச் செய்திருக்கிறது என்றும், எவ்வளவு கேவலமாகவும் வக்கிரமாகவும் அவர்கள் சிந்தனை இருக்கிறது என்றும்தான் காட்டுகிறது. இதற்காகத்தான் ராகுல் காந்தி அவர்கள் மனதில் அன்பை விதைக்கணும் என்கிறார். ஒரு மனிதர் 95 வயதாகி இறந்து போகிறார், தமிழ் நாட்டின் 5 முறை முதலமைச்சர், 13 முறை தேர்தலில் போட்டியிட்டு ஒரு முறைகூட மக்களால் தோற்கடிக்கப்படாதவர். இன்னிக்கு உலகம் முழுக்க அவருக்காக கண்ணீர் சிந்திக்கொண்டு இருக்கும் சூழலில், எவ்வளவு ஒரு அழுகிப்போன மனநிலையில் இருந்தால் இது போல் பேசிட்டு இருப்பார்கள்.
 

 

 


மற்ற எல்லா அரசியலையும் விட்டுவிடுங்க ஒரு 95 வயது வரை வாழ்ந்த முதியவர் இறந்து போகிறார், அவர் ஒரு சாதாரண மனிதன் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள். ஒரு மனிதருடைய  இறப்பில் இந்த மாதிரியான ஒரு மன நிலையோடு திரிபவர்கள், சாதாரண காலங்களில் மாட்டின் பெயரால் மனிதர்களை கொள்வதற்கும், 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்தவனை விடுதலை செய்யவேண்டும் என்றும் ஒரு கட்சி போராடுவதற்குமான மன நிலை  இங்கிருந்துதான் ஊற்றெடுக்கிறது. எனக்கு என்ன அச்சம் என்றால் பா.ஜ.க. என்னும் ஆர்.எஸ்.எஸ் அரசியல் சித்தாந்தம் கொண்ட ஒரு கட்சி அவர்கள் கட்சிக்காரர்களின் மனதில் விஷத்தை மட்டும் இல்லை, அவங்க மனதே  அழுகிப் போகக்கூடிய அளவிற்கான விதையையும் சேர்த்து விதைக்கிறார்கள், இது முதலில் அவர்களுக்கு ஆபத்து, அடுத்து அவர்கள் குடும்பத்திற்கும், அடுத்தது தேசத்திற்கும் ஆபத்தானது. அதனால் அவர்கள் இந்த மன நிலையில் இருந்து சீக்கிரம் விடுபட்டு ஒரு ஆரோக்கியமான மன நிலைக்கு திரும்ப வேண்டும் என்று நினைக்கிறேன்.    

 

 

 

 

 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.