Skip to main content

சாராயம் தந்தால் சேவல் சண்டை போடாது. – சேவற்சண்டை ரகசியம்

Published on 08/03/2018 | Edited on 08/03/2018

ஆந்திரா – தமிழக எல்லையை ஒட்டினார்ப்போல் உள்ள வேலூர் மாவட்டத்தை சேர்ந்த திருப்பத்தூர் புறநகர் பகுதி, நாட்றாம்பள்ளி, குடியாத்தம், பேரணாம்பட்டு, திருத்தணி, கே.வி.குப்பம் போன்ற பகுதிகளில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் சேவற்சண்டை நடக்கிறது. சேவல்கள் மீது ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பந்தயம் கட்டுகிறார்கள். தமிழகத்தில் சேவற்சண்டை தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் இலை மறை காயாக தான் ஆங்காங்கு சேவற்சண்டைகள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. வார இறுதியில் நடத்தப்படும் இந்த சேவற்சண்டையை காணவும், கோழிகள் மீது பந்தயம் கட்டவும் நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளார்கள்.

cock fight

ஆடுகளம் படத்தில் வருவது போல சேவலுக்கு சாராயம் தந்தாலெல்லாம் வெற்றி பெறாது. பயிற்சி, பயிற்சி, கடும் பயிற்சி தந்தால் மட்டுமே சக சேவலோடு சண்டைப்போட்டு வெற்றி பெறும் என்கிறார்கள் சண்டை கோழி பயிற்றுனர்கள். அதுப்பற்றி விளக்கமாக அறிய முயன்றோம்.



வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த தெலுங்கு மட்றப்பள்ளியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், சண்டைக்கோழி வளர்ப்பதில் சுற்று வட்டார கிராமங்களில் மிக பிரபலமானவர். சண்டைக்கோழி வளர்ப்பு பற்றி நாம் அவரிடம் பேசியபோது, நான் 17 வயதில் இருந்து சண்டைக்கோழி வளர்க்கிறேன். இந்த பகுதிகளில் திருப்பத்தூர் புதுப்பேட்டைதான் இப்பவும் சண்டைக்கோழி விளையாட்டுல ஃபேமஸ்சா இருக்கு. அதுக்கடுத்து ஜோலார்பேட்டை, குடியாத்தம், ஆந்திராவுல நடக்குது. 100க்கும் அதிகமானவங்க சண்டைக்கோழியோட இப்பவும் வந்து போட்டிகளில் கலந்துக்கறாங்க.

cock fight


சேவல்களில் பல வகைகள் இருந்தாலும் சண்டைக்கோழிக்கு பழக்கப்படுத்தும் இனங்கள் ஜாவா, பீலா, கதர்யாகுத்து, யாகுத்து, நாட்றங்கு, வெத்துக்கால் சேவல், வால்சேவல் ஆகியவைதான். இந்த இனங்கள்தான் சண்டைக்கு சரியா வரும். சண்டைக்கோழியை பத்து மாதத்தில் தயாராக்கிடுவோம். சேவல் குஞ்சா இருக்கும்போதே சண்டைக்கு சரியா வரும்மான்னு பார்த்து அதுகளுக்கு பாதம், பிஸ்தா, முட்டை, மண்ணீரல் தந்து அதன் உடல் பலத்தை கூட்டுவோம். அதோட, கம்பு, சோளம், அரிசி போன்ற சாதாரண உணவையும் தருவோம். நல்ல உடல் பலத்தோட வளரும்போதே மனிதரோட கை சிட்டிகைக்கு சேவலை பழக்கப்படுத்துவோம். சிட்டிகைதான் சண்டைக்கோழிக்கான சிக்னல். அந்த சிட்டிகையை யார் போடறாங்களோ அதை உணர்ந்துக்கிட்டு அதுப்பிரகாரம் நடந்துக்கும். சிட்டிகை போடும் ஓசையை வைத்து, முகத்தை பார்க்கும் அதுப்பிரகாரம் சண்டைப்போடும்.



சண்டைக்களத்துக்கு போறதுக்கு முன்னாடி இட்லி, குளுக்கோஸ்தான் அதுக்கான உணவு. சண்டையில அடிப்பட்டுடும், அப்ப அதுக்கு தையல் போடறது, மருந்து போடறதுயெல்லாம் நாமளேதான் செய்துக்கனும். மாற்று ஆள்ன்னா அதுக்கு பயம் வந்துடும் அதுக்கப்பறம் சரியா சண்டை போடாது என்றவர் அவரை விட்டு தூரச்சென்ற சேவலுக்கு சிட்டிகை போட்டதும் அவர் அருகே மீண்டும் வந்தது.

 

cock fight


தொடர்ந்து நம்மிடம், ஐந்து வயது வரைதான் சேவலை சண்டைக்கு பயன்படுத்த முடியும். அதுக்கப்பறம் பயன்படுத்த முடியாது. சேவலுக்கு சாராயமெல்லாம் கொடுத்து விளையாட வைக்க முடியாது, அதுயெல்லாம் சினிமாவுலதான். சண்டை மைதானத்தில் சரியா சிட்டிகை போடனும், சண்டை போடறதுக்கு எந்தளவுக்கு பழக்கறம்மோ, அதே அளவுக்கு சிட்டிகைக்கும் பழக்கனும். அதுதான் ரொம்ப முக்கியம். நம்ம சேவல் பந்தையத்தில் கலந்துக்கிட்டு சண்டையிட்டு ஜெயிச்சா ஆயிரம் முதல் லட்சம் வரைக்கும் பணம் கிடைக்கும். 50 ஆயிரம், ஒரு லட்சம்ன்னு பெட் கட்டுவாங்க. என் சேவல் பலமுறை ஜெயிச்சியிருக்கு. ஒருமுறை 30 ஆயிரம் ஜெயிச்சி தந்தது என்றவர்,

நான் கேட்கறவங்களுக்கு சண்டை கோழிகளை வளர்த்தும் தர்றேன். நாம வளர்த்து மத்தவங்கிட்ட தரும்போது, அது ஒரு சத்தம் போடும் பாருங்க, கண்ல தண்ணீர் வந்துடும். வாங்க வர்றவங்களுக்கு நுணுக்கம் கத்து தந்து அனுப்பிடுவேன். அங்கப்போச்சின்னா கொஞ்ச நாள்ல செட்டாகிடும். நம்மை அனுப்பிட்டாங்களேங்கற கோபத்தை சண்டையில காட்டும் என்றார்.

 

Next Story

தீபாவளியையொட்டி சட்டவிரோத சேவல் சண்டை-15 பேர் கைது

Published on 24/10/2022 | Edited on 24/10/2022

 

 Illegal cockfighting on the occasion of Diwali- 15 people arrested

 

கோவையில் சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்டது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலங்கட்டிபுதூரில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோட்டப் பகுதியில் கொடுங்கரை பள்ளம் எனும் இடத்தில் சேவல் சண்டை சூதாட்டமானது நடைபெற்றுள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 15 பேரை கைது செய்தனர். மேலும் சேவல் சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட 18 சேவல்கள், 11 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் மற்றும் 36,750 ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

 

Next Story

பாகிஸ்தான் வெற்றி..மோதிக்கொண்ட ரசிகர்கள்..மைதானத்தில் திக் திக் நிமிடங்கள் 

Published on 08/09/2022 | Edited on 08/09/2022

 

Pakistan win..Clashing fans.. minutes on the field

 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. சூப்பர் 4 சுற்றிற்கு 4 அணிகள் தயாரான நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் அணிகள் மோதின.

 

முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இப்ராஹிம் ஜார்டன் 35 ரன்களை எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் இரண்டு விக்கெட்களை எடுத்தார்.

 

130 ரன்கள் இலக்கை கொண்டு விளையாடிய பாகிஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. கடைசி ஒவரில் முதல் இரு பந்துகளில் சிக்சர்களை அடித்து நசீம் ஷா ஆட்டத்தை முடித்து வைத்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ஷதாப் கான் 36 ரன்களை எடுத்தார்.

 

நேற்று ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது என சொல்லப்பட்டது. இதனால் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போட்டியை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்களும் ஆவலுடன் பார்த்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிபெற்றுள்ளது. இது இந்திய அணி ஆசியா கோப்பையில் இருந்து வெளியேற வழிவகை செய்துவிட்டது.

 

போட்டியின் நடுவே ஆசிப் அலி 16 ரன்களை எடுத்திருந்த போது பரீத் அஹமது பந்தில் அவுட்டானார். அப்போது இரு வீரர்களுக்கும் வாக்குவாதம் எழுந்தது. அப்போது ஆசிப் அலி தனது பேட்டால் அஹமதுவை அடிக்க ஓங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

போட்டி முடிந்த பிறகு இருநாட்டு ரசிகர்களும் மோதிக்கொண்டனர். போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதால் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் மைதானத்தின் இருக்கைகளை உடைத்தும் அதனை பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள்  மீது வீசி எறிந்தனர். இதனால் இரு நாட்டினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டதால் மோதலில் ஈடுபட்டவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.