Skip to main content

கொடநாடு வழக்கு; முழு ரகசியம் அறிந்த மூவர்? 

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

The case of Kodanadu; Three who know the whole secret?

 

கொடநாடு கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக மத்திய அரசின் உதவியில்லாமல் கொடநாடு கொள்ளை தொடர்பான டெலிபோன் ரெக்கார்டுகளை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். கொடநாடு கொள்ளை நடந்தபோது அதில் ஈடுபட்ட கனகராஜுக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் மிக முக்கியமானவை. அந்த அழைப்புகள் எல்லாம் யாரிடமிருந்து வந்தவை என்பதைக் கண்டுபிடிப்பது போலீசாருக்கு மிகச் சிரமமான வேலையாக இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த கொலை கொள்ளையில் சம்பந்தப்பட்ட போன் கால்களின் ஆதாரங்களைப் பெறுவதற்கு மத்திய அரசு நிறுவனமான ‘TRAI’ உதவி செய்யவில்லை. அதைக் கேள்வி கேட்டு யாரும் வழக்குப் போடவில்லை.

 

இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் தாங்களாகவே முயற்சி செய்து சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களுடன் பேசி அழைப்புகள் பற்றிய புலனாய்வு விவரங்களை எடுத்துள்ளனர் என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். இந்த வழக்கு விசாரணையில் ஒரு முக்கிய திருப்பமாக கருதப்படும் இந்தத் தரவுகள் கிடைத்ததனால் குற்றவாளிகள் தரப்பு அதிர்ந்துபோய் இருக்கிறது. இந்தத் தரவுகளுடன் முக்கிய குற்றவாளியான கனகராஜின் அண்ணன் தனபாலை போலீசார் நெருக்கி வருகிறார்கள். அந்த நெருக்குதலை வெளிக்காட்டவே தனபால், “கொடநாடு விசயத்தில் எனக்குப் பல உண்மைகள் தெரியும், முதல்வர் அய்யா... என்னைக் காப்பாற்றுங்கள்” என அலறியிருக்கிறார்.

 

 

The case of Kodanadu; Three who know the whole secret?
தனபால்

தனபாலின் இந்த அலறல் ஏன்? என இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளிடம் கேட்டோம். “தனபால் மற்றும் கனகராஜின் இன்னொரு சகோதரர் ரமேஷ் ஆகியோர் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகள். தி.மு.க. ஆட்சியில் மறுபடியும் இந்த வழக்கை நாங்கள் நோண்ட ஆரம்பித்தபோது எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. கனகராஜின் மனைவி முக்கியக் குற்றவாளி சயானுக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்தார். அந்தப் பெண்ணை நாங்கள் கிடுக்கிப்பிடி விசாரணை செய்ததில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.

 

கனகராஜ் லட்சக் கணக்கில் பணத்தை அவரது சகோதரர் தனபாலிடம் கொடுத்து வைத்திருந்தார். அதை எந்த வேலைக்கும் போகாத தனபால் வட்டிக்கு விட்டிருந்தார். கனகராஜின் நிலம் தொடர்பாக கனகராஜின் மனைவிக்கும் தனபாலுக்கும் இடையே அடிதடி தகராறு ஏற்பட்டது. இந்த சமயத்தில் உள்ளே புகுந்த நாங்கள், தனபால் பற்றிய பல உண்மைகளை அவரிடமிருந்து கறந்தோம். கொலை செய்த ஒருவன் போலீசிடம் மாட்டாமல் தப்பி ஓடுவான். ஆனால், கனகராஜ் முதலில் நெல்லூருக்கு போனான். அங்கிருந்து நேரடியாக தனது சொந்த ஊரான ஆத்தூருக்கு வந்து சொந்த வீட்டிலேயே தங்கினான். இவ்வளவு தைரியமாக எந்தக் கொலைக் குற்றவாளியும் நடந்து கொள்ளமாட்டான். அவனுக்கு போலீஸ் தன்னைத் தேடுவது நன்கு தெரியும். போலீஸ் அவனை கைது செய்யாது என்கிற தைரியத்தை கொடுத்தது யார் எனக் கேட்டாம். அவனிடம் அதற்கான பதில் இல்லை. 

 

The case of Kodanadu; Three who know the whole secret?
சயான்

 

ஆனாலும், கொடநாடு கொள்ளை, கொலை கனகராஜ் மட்டும் செய்தது அல்ல. இதில் முழு ரகசியத்தையும் தெரிந்தவர்கள் மூன்று பேர். கனகராஜின் சகோதரர்களான தனபால், ரமேஷ் மற்றும் முக்கியக் குற்றவாளியான சயான். இவர்கள் மூவருக்கும் ரகசியம் தெரியும். கனகராஜ் கொள்ளையடித்த பொருட்களோடு கொடநாடு எஸ்டேட் பங்களா இருந்த மலையிலிருந்து கீழே வரும்பொழுது, கொள்ளையின் போது அவன் உபயோகித்த செல்போனை வாங்கி தனபால் தீ வைத்து எரித்திருக்கிறார். இது சயானின் கண் முன்பே நடந்த வேலை. அந்த செல்போனில் முக்கியமான ஒருவர் பேசியிருக்கிறார். அதனால்தான் குறிப்பிட்ட செல்போனை அழித்திருக்கிறார்கள். கனகராஜ் இறந்து விட்டாலும் கொடநாடு கொலை கொள்ளை சம்பந்தமான முழு மர்மங்களையும் அறிந்தவர்களாக அவனது சகோதரர்கள் தனபாலும் ரமேஷும் சயானும் இருக்கிறார்கள்” என கனகராஜின் மனைவி உண்மைகளைப் போட்டுடைத்தார்.

 

நாங்கள் கனகராஜின் செல்போன் அழைப்பு தொடர்பாளர்களைத் தேடி புறப்பட்டோம். கொடநாடு கொலைக்கும் கனகராஜ் இறப்பதற்கும் இடையே நெல்லூருக்குப் போய்விட்டு வந்த கனகராஜ், பல சிம்கார்டுகளை வாங்கியிருக்கிறார். ஒவ்வொரு சிம்கார்டாக நாங்கள் தேட ஆரம்பித்தோம். கடைசியாக அவர் பி.எஸ்.என்.எல். சிம்கார்டை உபயோகித்தார். அந்த சிம்கார்டில்தான் எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கனகராஜ் (அவர் பெயரும் கனகராஜ்தான்) பேசியிருந்தார். அதை நாங்கள் கண்டுபிடித்தோம். அவரை விசாரிக்க முற்படும்பொழுது அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதமும் தடையாக வந்தார். எங்கள் டீமில் இருந்த எடப்பாடிக்கு நெருக்கமான டி.ஐ.ஜி. முத்துசாமிக்கு இந்த விவரம் தெரிந்தவுடன் அவர் டேவிட்சனுக்கு இதைச் சொல்ல, எங்கள் விசாரணைக்கு உளவுத்துறை டேவிட்சனால் தடைவந்தது. சயான், தனபால், ரமேஷ் மூவரும் வாழும் கனகராஜுகள். இந்த மூவரையும், போலீஸ் டி.எஸ்.பி. கனகராஜையும் நன்கு விசாரித்தால் கொடநாடு கொலை வழக்கு முடிந்துவிடும்” என்கிறார்கள் காவல்துறையினர்.

 

The case of Kodanadu; Three who know the whole secret?
ரமேஷ்

 

சி.பி.சி.ஐ.டி. தற்பொழுது அந்த முயற்சியில் சிறப்பாக ஈடுபட்டுள்ளது. அதனால் டெலிபோன் ரெக்கார்டுகளில் முதல் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த விவரங்கள் தனபாலுக்கும் தெரியும். தனபாலை கவனிக்கவேண்டிய விதத்தில் கவனித்தாலே போதும், அல்லது அவருக்கொரு பெருந்தொகை கொடுப்பதாக சொன்னாலேகூடப் போதும்... கொடநாடு மர்மம் விலகி விடும். ஆனால், "அதெல்லாம் வேண்டாம், நாங்கள் எங்கள் முயற்சியிலேயே அதைக் கண்டுபிடித்துவிடுவோம்” என்கிறார்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார்.
 

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார். 

Next Story

“சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் தனியார் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்வது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை தொகுதியில் மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதிக்கான இடங்கள் கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால், சில மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறவும், சில மாநிலங்கள் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை விட குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாஜக ஏன் வரவே கூடாது?. தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாடு உட்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்?. சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்!. வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!. பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.