Skip to main content

ஒளித்து வைக்கப்பட்ட ஜெ.வின் பணிப்பெண்கள்... விசாரிக்கக் களமிறங்கும் ஆணையம்!

Published on 03/10/2018 | Edited on 03/10/2018

ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மங்களை விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன், "அதிரடி விசாரணைக் கமிஷன்' என விரைவில் அழைக்கப் படும்' என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

"அக்டோபர் 24-ஆம் தேதி காலாவதியாகும் விசாரணைக் கமிஷனை, வருகிற ஜனவரி மாதம் வரை நீட்டிக்க வேண்டும்' என தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள் ளார் நீதிபதி ஆறுமுகசாமி. "அவரது கோரிக்கையை தமிழக அரசு நிச்சயம் ஏற்கும்' என்கிறார்கள். ஏனென்றால்... விசாரணைக் கமிஷனில் அடுத்து நடக்கப்போகும் அதிரடி நிகழ்வுகள் அப்படிப்பட்டவை என சஸ்பென்ஸான படத்தின் த்ரில்லர் காட்சியை நினைவுபடுத்துவது மாதிரி பேசுகிறார்கள் ஆணையத்தைச் சேர்ந்தவர்கள்.

 

jaya's-servants


2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி. காலையில் அரசுப் பேருந்துக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டு வந்தவர், இரவு பத்தரை மணிக்குமேல் நினைவற்ற சூழலில் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜெ. அன்றைய தினம் போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்பது பற்றிய விவரங்கள் சரியாக இல்லை.

செப்டம்பர் மாத தொடக்கத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தனக்காக வாதாடிய வழக்கறிஞர் பாலி நாரிமனை ஜெ., சந்தித்தார். ""நீங்கள் சிறைக்குச் செல்வது உறுதி'' என்றார் நாரிமன். அன்று முதல் ஜெ. சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்தஅழுத்தத்திற்கான மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டார். அதனால் அவருக்கு உடல்நிலை குன்றிவந்தது. 22-ஆம் தேதியும் அவர் சாப்பிட வேண்டிய மருந்துகளை சாப்பிடவில்லை. "அக்கா மருந்து சாப்பிடலை' என சசிகலா சொன்ன போதும் ஜெ. அதை கண்டுகொள்ளவில்லை. இரவில் டெல்லியில் யாருடனோ போன் பேசி முடித்ததும் மயங்கிச் சரிந்திருந்த ஜெ.வை சசிகலாதான் எழுப்பினார்.
judge-arumugasamy
ஜெ. மயங்கி விழுந்ததும் சசியின் உறவினரான டாக்டர் சிவக்குமார் வந்தார். ஜெ.வை அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். இதுதான் சசிகலா தரப்பு, ஜெ.வின் உடல்நலம் குன்றிய 22-ஆம் தேதிபற்றி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பிறகு கொடுத்த விளக்கம். இதுபற்றி விசாரணைக் கமிஷனில் பல சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளன. "ஜெ. நாற்காலியில் மயங்கிக் கிடந்தார்' என சசிகலா, டாக்டர் சிவக்குமார் ஆகியோர் சாட்சியம் அளித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் டிரைவர் "ஜெ. ஒரு கட்டிலில் கிடத்தப்பட்டி ருந்தார்' என சாட்சியம் அளித்தார். "ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது ஜெ.வுக்கு நினைவு வந்தது' என ஒரு சாட்சியமும் ஆணையத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதையெல்லாம் தாண்டி "போயஸ் கார்டனில் சசிகலா வகையறாக்களால் ஜெ. தாக்கப்பட்டார், அதனால் மயங்கி விழுந்தார். அந்த மயக்கமே ஜெ.வின் மரணத்திற்கு காரணம்' என சசிக்கு எதிராக தர்மயுத்தத்தை தொடங்கிய ஓ.பி.எஸ்., பொன்னையன், மனோஜ்பாண்டியன் போன்றோர் குற்றம்சாட்டினர். அந்தக் குற்றச்சாட்டுகளில் உள்ள உண்மைத்தன்மையை அறிய ஓ.பி.எஸ்., எடப்பாடியுடன் இணைந்த பிறகு ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. எந்த நோக்கத்திற்காக ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டதோ அதைக் கண்டறிய, போயஸ் கார்டனை நோக்கிப் பயணிக்க அதிரடியாக திட்டமிட்டிருக்கிறார் ஆறுமுகசாமி.

""போயஸ் கார்டனில் ஜெ. தங்கியிருந்த அறை, அவர் மயங்கிச் சரிந்த இடம், போயஸ் கார்டனில் சசிகலா தங்கியிருந்த இடம், ஜெ.வின் அறைக்குள் சசிகலாவால் எப்படி நினைத்த நேரத்தில் செல்ல முடிந்தது? டாக்டர் சிவகுமார் எப்படி 22-ஆம் தேதி ஜெ.வின் அறைக்கு வந்தார், போயஸ் கார்டனில் "இசட் ப்ளஸ்' பாதுகாப்புப் பிரிவு எப்படி இயங்கியது, ஜெ.வுடன் தங்கியிருந்த உதவியாளர் பூங்குன்றன் எங்கிருப்பார்?, ஜெ.வுக்கு சமையல் செய்த ராஜம்மாள் தங்கி சமையல் செய்த அறைகள் எங்கே உள்ளன?, ஜெ.வுக்கு உதவியாகப் பவனிவரும் பெண்கள் யார் யார்?, அவர்கள் எங்கே தங்கியிருந்தனர், ஜெ. மயங்கி விழுந்ததை 22-ஆம் தேதி அந்தப் பணிப்பெண்கள் பார்த்தார்களா?, ஜெ.வை சசிகலா வகையறாக்கள் தாக்கினார்களா?, அப்படி ஜெ. தாக்கப்பட்டதை பணிப்பெண்கள் யாராவது பார்த்தார்களா? என ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்துள்ள ஆணையம், சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ. சிகிச்சை பெற்ற அறைகளை நேரடியாகச் சென்று ஆராய்ந்ததைப் போல, போயஸ் கார்டனுக்கு வழக்கறி ஞர்கள் துணையுடன் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது'' என ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
jaya=doctor
சமீபத்தில் போயஸ் கார்டனில் நடந்து முடிந்த வருமான வரி சோதனைக்குப் பிறகு ஒருசில பாது காவலர்களைத் தவிர யாரும் அங்கு தங்குவதில்லை. சமையல் வேலை செய்யும் ராஜம்மாள், இளவரசியின் தி.நகர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். ஜெ.வுக்கு நீண்டநாட்களாக கால் அமுக்கி விடவும், உடை மாற்றவும், அவர் சொல்லும் பொருட்களை எடுத்துத் தரும் வேலைகளைப் பார்த்தவர் கள் ராணி மற்றும் மகாலட்சுமி. "ஜெ. மரணம் மர்மம்' என சர்ச்சைகள் வெடித்தவுடன் வெயிட்டாக ஒரு தொகை கொடுத்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டார் சசிகலா.

இவர்கள் மட்டுமல்ல... போயஸ் கார்டனில் வேலை செய்யும் அனைத்து வேலைக்காரர்களும் மன்னார்குடி வட்டாரத்திலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள்தான். அவர்கள் ஜெ.வுக்கு பணிவிடை செய்வது சசியின் கண் அசைவின்படிதான் நடக்கும். ஜெ.வின் மரணத்திற்குப் பிறகு ஜெ.வின் பாதுகாவலர் பெருமாள்சாமியின் பாதுகாப் பில் இவர்கள் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வரிசையாக விசாரிக்க திட்டமிட்டிருந்த நீதிபதி ஆறுமுகசாமி முதல்கட்டமாக ராணி, மகா லட்சுமியை ஆணையத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் செப்டம்பர் 22-ஆம் தேதி என்ன நடந்தது என்பதுபற்றி அப்பல்லோ நிர்வாகம் கைவிரித்த நிலையில்... ""போயஸ் கார்டனில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய ஆணையம் முடிவுசெய்துள்ளது. அத்துடன் போயஸ் கார்டனிலிருந்து அப்பல்லோ மருத்துவமனைவரை பதினேழு சி.சி.டி.வி. கேமராக்கள், ஜெ. சென்ற அப்பல்லோ ஆம்புலன்ஸை பதிவு செய்துள்ளன. அவை அனைத்தையும் பெற்றுத்தரும்படி சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்'' என்கிறது ஆணைய வட்டாரம்.

அ.தி.மு.க.வின் மூலஸ்தானம் என்பது போயஸ் கார்டன்தான். அதையே எட்டிப் பிடித்திருக்கும் ஆணையத் தின் விசாரணை, மர்மங்களை வெளிக்கொணருமா? அல்லது கண்துடைப்பு நிகழ்வாகுமா? என்பது ஆறுமுகசாமியின் போயஸ் கார்டன் விசிட்டும், அவர் நடத்தும் விசாரணையும் தெளிவாக்கும் என காத்திருக் கிறார்கள், தங்கள் தலைவிக்கு என்னாயிற்று என்பதை 2 ஆண்டுகளாக அறிய முடியாமல் இருக்கும் அ.தி.மு.க.வின் தொண்டர்கள்.

 

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.