Skip to main content

அந்த 20 "சி!' சுருட்டிய கும்பலை சுட்டுத்தள்ள போலீஸ் ரெடி!

Published on 01/11/2018 | Edited on 01/11/2018
dmk


 

டந்த சில நாட்களுக்கு முன்பு கோவை-சூலூர் பகுதியில் உள்ள ஒரு காண்ட்ராக்டரை அள்ளிக்கொண்டு போனது காரில் வந்த நான்கைந்துபேர் கொண்ட கும்பல்.


கத்தி முனையில் மிரட்டியும் அடித்து துன்புறுத்தியும் அந்த காண்ட்ராக்டரின் பெரிய பேக்கை பிடுங்கிக்கொண்டு, வழியில் காரிலிருந்து காண்ட்ராக்டரை இறக்கி விட்டுவிட்டுப் போனது அந்த கும்பல். பேக்கைத் திறந்து பார்த்தபோது 20 கோடிக்கும் மேலாக பணம் இருக்க... ""அடேய்... நமக்கு வந்த தகவல்படி அவனை ரெண்டுநாள் வச்சுக் காட்டியிருந்தா... இன்னும் பல கோடிகளை அள்ளியிருக்கலாம்'' என்று கும்பலைச் சேர்ந்தவர்கள் பேசிக்கொண்டனர். ""நேரம் அமைத்து தூக்குவோம்'' என்று அந்தக் கும்பலின் தலைவன் அருண் சொல்ல, கூட்டாளிகளான டெல்லி என்கிற ஜில்ஜித், கவின், தளபதி சுரேஷ் உள்ளிட்டவர்கள் தலையாட்ட, அந்தநாளை குறித்துக்கொண்டார்கள்.


மூன்று நாட்களுக்கு முன்பு அதே காண்ட்ராக்டரை மீண்டும் தூக்கப்போன அந்தக் கும்பலை காண்ட்ராக்டரின் ஆட்கள் விரட்ட... கும்பல் தப்பிப்போனது. உடனே அந்த கும்பலை சூலூர் போலீஸ் உட்பட சில தனிப்படை டீம்கள் விரட்ட ஆரம்பிக்க... அந்த கும்பல் பெங்களூர் பக்கம் தப்பித்துக்கொண்டிருந்ததை ட்ரேஸ்அவுட் செய்துகொண்டே இருந்தார்கள்.

கும்பலைத் தேடும் தனிப்படை டீமில் இருக்கும் போலீசார் ஒருவரிடம் கேட்டபோது... ""அந்தப் பணம் யாரோட பணமா இருந்தா, நாங்க எதுக்கு எங்க சொந்தச் செலவுல போகப்போறோம். இப்ப பெங்களூர், கடப்பா வரைக்கும் சுத்தியும் அவனுகளை பிடிக்க முடியாததால எங்க உயர் அதிகாரிகள் வரைக்கும் திட்டு வாங்கிட்டே வந்துட்டிருக்கோம். ஏன்னா கொள்ளையடிக்கப்பட்ட அந்தப் பணம் மாநிலத்தின் வி.வி.ஐ.பி. வகையறாவுடையது.


அதுனாலதான் இத்தனை தனிப்படைகள் அமைக்கப்பட்டு விடிய, விடிய தூங்காம ரகசியமா அவனுகளைப் பிடிக்க அலைஞ்சுட்டு இருக்கோம்.

அந்தக் கும்பலின் தலைவன் அருண் பி.ஜே.பி.யில இருந்து பல கேஸ்கள் வாங்கியவன். அதுனால இவனோட போன்கால் லிஸ்ட்ல யார், யார்கிட்ட பேசிட்டு இருந்துருக்கான்னு கால் டீடெய்ல்ஸ் எடுத்துப் பார்த்தபோதுதான் எங்களுக்கே ஷாக். கோவை வடக்கு தி.மு.க. புறநகர் மா.செ. ராமச்சந்திரன் கிட்டதான் அதிகமா இப்பவரைக்கும் பேசியிருக்கான். 15 எல் கொடுத்து உதயநிதி ஸ்டாலின் இங்கே வந்தபோது தி.மு.க.வில் சேர்ந்திருக்கான். இப்ப கடைசியா ரகசியம் ஒண்ணு சொல்லணும்னா அருணை பிடிக்க முடியாததால அவனோட தம்பி அரவிந்த், அவன் அம்மா, அப்பா உள்ளிட்டவங்களை இன்னைக்கு விசாரிக்க தூக்கப்போறோம். அந்த அருண் கும்பலை அரெஸ்ட் பண்ணத்தான் முன்னாடி உத்தரவும் கொடுத்தாங்க. ஆனா இப்ப அரைமணி நேரத்துக்கு முன்னால கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் என்னன்னா... அந்த கும்பலைப் பிடிச்சுட்டா அருணையும், ஜில்ஜித்தையும் என்கவுன்ட்டர் பண்ணணும்ங்கறதுதான் அத்தனை தனிப்படை டீம்களுக்கும் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட். இந்த அசைன்மெண்ட் இப்படி ஆனதுக்குப் பின்னால அரசியலும் இருக்கு. "காண்ட்ராக்டரிடம் இருந்து கோடிகளை கொள்ளையடித்த தி.மு.க. கும்பல் கைது. கூட்டாளியான தி.மு.க. மா.செ. சிக்குகிறார்' என தலைப்புச் செய்தியிடலாம் அல்லவா?'' என்கிறார் விரிவாக.
 


 

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.