ஸ்டண்ட் யூனியன் 51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டண்ட் யூனியனில் நேற்று சிறப்பாக கொண்டாப்பட்டது. விழாவில் கலைப்புலி எஸ்.தாணு, விஜய் சேதுபதி, இயக்குனர் விக்ரமன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கேக் வெட்டி விழாவை ஆரம்பித்த விஜய் சேதுபதி பின்னர் ரத்ததானம் செய்துவிட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஆசிப்பவை பற்றி பேசுகையில்...."பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிபாவை நினைக்கும்போது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. தவறு செய்தவர்களுக்கு சப்போர்ட் செய்தவர்களைப் பார்க்கும்போது பயங்கர கோபம் வருகிறது. பெண்களை மதிக்க கற்றுக்கொடுப்பது போல், பெண் குழந்தைகளை மதிக்க தனியாகக் கற்றுக் கொடுக்கணும் போல் இருக்கிறது. எப்படி பாடம் எடுக்கிறது என்று தெரிய வில்லை. நம்முடைய வேலைவாய்ப்போ, தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் எதையும் தீர்க்க மாட்டார்கள். ஆனால், நாம் எந்த ஜாதி, எந்த மதம், எதைக் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பாடம் எடுப்பார்கள். இதிலிருந்து நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் பத்தாது. ஆனால், தண்டனை கிடைக்கனும். இதை சப்போர்ட் பண்றவர்களை பார்த்தால் அசிங்கமாக இருக்கிறது" என மனம் வருந்தி கூறினார்.
பெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும் - விஜய் சேதுபதி உருக்கம்
சார்ந்த செய்திகள்
Next Story
'நல்ல வேள நா வடசென்னை படத்துல நடிக்கல' - விஜய்சேதுபதி புலம்பல்
விஜய் சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்த '96' படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றுள்ள நிலையில் பா. இரஞ்சித்தின் கூகை திரைப்பட இயக்கம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் '96' படகுழுவினர் பங்கேற்று அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள், உதவி இயக்குனர்கள், எழுத்தாளர்களுடன் கலந்துரையாடினர். அப்போது நடிகர் விஜய்சேதுபதி வாராவாரம் தன் நடிப்பில் படம் வெளிவருவது குறித்தும், ரஞ்சித்துடன் எப்போது இணைந்து பணியாற்றுவீர்கள் என் கேள்விக்கும் பதில் அளித்து பேசியபோது...
"ஏற்கனவே வாராவாரம் என் படம் வெளிவருவதை வைத்து மீம் போட்டு தாளித்து விடுகிறார்கள். நல்ல வேளை நான் 'வடசென்னை' படத்தில் நடிக்கவில்லை. இல்லையென்றால் தொடர்ந்து மூன்று வாரம் என் படமாகத்தான் இருந்திருக்கும். மேலும் அந்த கதாபாத்திரத்தில் அமீர் நன்றாகவே நடித்திருந்தார் ரஞ்சித் எனக்கு நல்ல நண்பர். 'காலா' படம் பார்த்துவிட்டு அன்றே அவரை தொடர்பு கொண்டு பாராட்டினேன். நட்பு வேறு தொழில் வேறு. இருவருக்குமே அதற்கான நேரம் அமைய வேண்டும். அமைந்தால் தான் வேலை செய்ய முடியும். அவருக்கும் தோன்ற வேண்டும். சினிமா உணர்ச்சிகளுக்காக செய்யமுடியாது. நல்ல கதைக்கு தான் செய்யமுடியும். ஜாதி ஒழிப்பு பற்றி ரஞ்சித் பேசுவது பாராட்டுக்குரியது. எனக்கும் வாய்ப்பு கிடைக்கும் தருணங்களில் நானும் ஜாதி ஒழிப்பு பற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்" என்றார்.
Next Story
கௌதம் கார்த்திக்குக்காக வந்த விஜய் சேதுபதி
'மிஸ்டர்.சந்திரமௌலி' படத்திற்கு பிறகு கௌதம் கார்த்திக் தற்போது முத்தையா இயக்கத்தில் 'தேவராட்டம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கௌதம் கார்த்திக் நடிக்கும் அடுத்த படத்தை நடிகர் விஜய் சேதுபதி துவங்கி வைத்தார். ஒயிட்லைன் புரொடக்ஷன்ஸ் சார்பில் அன்பு தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குநர் அருண் சந்திரன் இயக்குகிறார். படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரி நடிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.