![vijay antony press meet in maamannan audio launch](http://image.nakkheeran.in/cdn/farfuture/N-gZr8ApHwA6aMWBULI087oY8oRXINDkxCqOd9kJL3Q/1685708385/sites/default/files/inline-images/27_62.jpg)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளன. இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் இசை வெளியீட்டிற்காக படக்குழுவினர் உட்பட பல திரைப்பிரபலங்கள் வருகை தந்த நிலையில், படம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது விஜய் ஆண்டனி பேசுகையில், "எல்லா விஷயத்திலும் தான் ஒரு அருமையான இயக்குநர் என்பதை மாரி செல்வராஜ் நிரூபித்துள்ளார். உதயநிதியின் நடிப்பில் கடைசி படம் என்கிறார்கள். அதில் எனக்கு விருப்பமில்லை.
இருப்பினும் அரசியல் காரணத்திற்காக போகிறார் எனும் போது, வாழ்த்தி அனுப்ப வேண்டிய சூழ்நிலை. அதனால் போகட்டும். வடிவேலு சார் இதுவரை நடிக்காத ஒரு ஸ்பெஷல் கேரக்டர். அதைப் பார்க்கும் போது நமக்கே புதிதாக இருக்கிறது. உதயநிதியின் நடிப்பில் கடைசி படம் என்பதால் அவருக்கு என் வாழ்த்துகள்" என்றார்.