Skip to main content

இளம் சீரியல் நடிகர் தற்கொலை... சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

indira kumar

 

இலங்கைத் தமிழரான இந்திர குமார், சென்னையில் தங்கியிருந்து தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த வியாழக்கிழமை (18 பிப்.) இரவு, நண்பர்களுடன் இணைந்து திரைப்படம் பார்க்கச் சென்ற இந்திர குமார், அன்றைய இரவு நண்பர்களின் அறையிலேயே தங்கியுள்ளார். மறுநாள் காலை வெகுநேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வராததால், நண்பர்கள் அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு,  இந்திர குமார் தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், உடனே போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இந்திர குமார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

முதற்கட்ட விசாரணையில், திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால்  இந்திர குமார் விரக்தியில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக அவர் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

சித்ரா மற்றும் ஸ்ரீவஸ்தவா சந்திரசேகர் தற்கொலைகளால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இந்திர குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கலர்ஸ் தமிழில் புதிதாக 2 தொடர்கள்

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

Colors Tamil New 2 Serials

 

திங்கள் முதல் வெள்ளி வரை பேரழகி 2 தொடர் இரவு 8.30 மணிக்கும், அர்ச்சனை பூக்கள் தொடர் இரவு 9 மணிக்கும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது

 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பொழுதுபோக்கு சேனல் 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி  உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் ரசிகர்ளை மகிழ்விக்கும் விதமாக தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த தொடர்களைக் கொண்டு வருகிறது. இதன் மூலம் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை ஊக்குவித்தல், கொண்டாட வைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஸ்டீரியோடைப் நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல், முற்போக்கு எண்ணம் கொண்ட நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தல், சமகால நிகழ்ச்சிகளை நடத்துவதில் கலர்ஸ் தமிழ் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் இரண்டு சீரியல்களை அறிமுகப்படுத்துகிறது

 

விதியின் திருப்பங்களால் ஒன்றிணைக்கப்படும் போது வேறுபட்ட எண்ணங்கள் உடைய பெண்களிடையே எவ்வளவு ஆழமான மற்றும் தனித்துவமான பிணைப்புகள் உருவாகின்றன என்பதை எடுத்துக்காட்டும் விதமாக பேரழகி 2, மற்றும் அர்ச்சனைப் பூக்கள் என்ற இரு சகோதரிகளின் கதை ஆகிய இரண்டு தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளன. இந்த இரண்டும் கன்னடத்தில் ஹிட்டான லக்சனா மற்றும் பாக்யலஷ்மி ஆகிய தொடர்களின் டப்பிங் வெர்ஷனாகும். இந்த 2 தொடர்புகளும் ஜூலை 3-ம் தேதி முதல் வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகவுள்ளன.

 


 

Next Story

கோமா நிலையில் பிரபல சீரியல் நடிகர் வேணு அரவிந்த்! 

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

Venu Arvind

 

'காஸ்ட்லி மாப்பிள்ளை’, ‘கிரீன் சிக்னல்’, ‘காசளவு நேசம்’, ‘காதல் பகடை' உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் வேணு அரவிந்த். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த ‘செல்வி’, 'வாணி ராணி’, ‘அக்னி சாட்சி’, ‘சந்திரகுமாரி’ ஆகிய சீரியல்களில் அவரது கதாபாத்திரங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சின்னத்திரை தவிர்த்து வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

 

இவருக்கு சமீபத்தில் மூளையில் கட்டி இருப்பது மருத்துவப் பரிசோதனை ஒன்றில் தெரியவந்தது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேணு அரவிந்திற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், அவர் கோமா நிலைக்குச் சென்றுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள வேணு அரவிந்திற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. வேணு அரவிந்த் விரைவில் குணமடைய வேண்டும் என சின்னத்திரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.