Skip to main content

சன்னிலியோனுடன் இணையும் விஷால்... ரசிகர்கள் உற்சாகம் !

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
sunny leone

 

 

 

ஹிந்தி கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தற்போது தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் 'வீரமாதேவி' சரித்திர படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் நடக்கின்றன. மதுரை கோர்ட்டிலும் வீரமாதேவி படத்தில் சன்னிலியோன் நடிக்க தடை விதிக்க வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சன்னிலியோன் நடிக்க கோர்ட்டு தடைவிதிக்க மறுத்துவிட்டதை அடுத்து 'வீரமாதேவி' படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நடிகை சன்னிலியோன் அடுத்ததாக விஷாலின் 'அயோக்கியா' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா நாயகியாக நடிக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சன்னி லியோன் டைரக்டர் படத்தில் ஜீவன்!

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

6.2, ஓரம்போ, வாத்தியார் படங்களை தயாரித்த வி.பழனிவேல் தன் வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பாக  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் 'பாம்பாட்டம்'. காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜீவன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

 

svas

 

 

இதுதான் இவர் நடிக்கும் முதல் ஹாரர் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஹாரர் படங்களை இயக்கி வரும் வி.சி வடிவுடையான் தற்போது ஹாரர் கலந்த திரில்லர் கதையை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குகிறார். ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் ஐந்து மொழிகளிலும் இருந்து முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். முண்ணனி  கிராபிக்ஸ் நிறுவனமொன்று இந்த படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளை  வடிவமைக்க இருக்கிறார்கள். அம்ரீஷ் இசையமைக்கும் இப்படத்தின் நடிகர், நடிகையர், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் இம் மாதம் நடைபெற உள்ளது. வி.சி வடிவுடையான் தற்போது சன்னி லியோனை வைத்து வீரமாதேவி படத்தை இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

இரண்டு நாள் தூங்காமல் நடித்த விஷால் !

Published on 18/02/2019 | Edited on 18/02/2019
vishal

 

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில்  விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’. ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னையில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட்  ஒன்று போடப்பட்டுள்ளது.  படத்தின் திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான கோர்ட் காட்சியை கடந்த மூன்று நாட்களாக இந்த செட்டில் தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நடிகர் ஆர்.பார்த்திபன், ராதாரவி, கே எஸ் ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, நடிகை ராசி கண்ணா, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களோடு  சுமார் 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இணைந்து  நடிக்கும் பிரம்மாண்ட காட்சி படமாக்கப்பட்டது.

 

 


படத்தின் முக்கிய காட்சி என்பதால் இக்காட்சி முழுவதும் நடிகர் விஷால் தொடர்ந்து நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவருடன் இணைந்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அவரவர் பகுதியை நடித்துவிட்டு சென்றபோதும், படத்தின் நாயகன் விஷால் மட்டும் சுமார் 48 மணி நேரம் இரவு பகல் பாராமல் தூக்கத்தை தொலைத்து  நீதிமன்ற காட்சிகள் சிறப்பாக அமைய தொடர் நடிப்பில் ஈடுபட்டார். ஏற்கனவே இந்த படத்திற்காக  விஷால் மிடுக்காக ஒரு கம்பீரமான தோற்றத்திற்கு தன்னை மாற்றி இருந்த நிலையில் தற்போது தொடர்ந்து 48 மணி நேரம் படப்பிடிப்பில் ஈடுபட்டு அர்ப்பணிப்போடு நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.