Skip to main content

மீண்டும் பாலியல் புகாருடன் ஸ்ரீரெட்டி... சிக்கித்தவிக்கும் ராஜமௌலி பட ஹீரோ 

Published on 12/06/2018 | Edited on 13/06/2018


 

sri reddy

 

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி பின்னர் டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களையும், சர்ச்சையான படங்களையும் சமூகவலைத்தளங்களில் 'ஸ்ரீலீக்ஸ்' வாயிலாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

 


பின்னர் தன் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த பவன் கல்யானை கடுமையாக சாடி தன் செருப்பை எடுத்து தன்னை தானே அடித்து கொண்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து சில காலம் அமைதி காத்த இவர் தற்போது மீண்டும் ஒரு புகார் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

 

 

 

sri reddy

 

உலகின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் தெலுங்கு பதிப்பின் இரண்டாம் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்களின் பட்டியலை வெளியிட்டது தெலுங்கு பிக்பாஸ் குழு. அதன்படி சமீபத்தில் நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி மற்றும் அவர் புகார் கூறிய பிரபல காமெடி நடிகர் விவா ஹர்ஷா ஆகிய இருவரும் இந்த போட்டியில் பங்கேற்கவுள்ளனர் என்ற செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நானி திடீரென ஸ்ரீரெட்டி பங்கேற்றால் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டே வெளியேறிவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிக்பாஸ் குழு உடனடியாக நிகழ்ச்சியில் இருந்து ஸ்ரீரெட்டியின் பெயர் மட்டும் நீக்கியது.

 

sri reddy

 

இதனால் கடும் கோபமடைந்து கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி நானியை வார்த்தைகளால் வாட்டியெடுத்துவிட்டார். நானியை கடுமையாகத் திட்டி அவர் போட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், 'உன் தொழிலின் மீதும் குடும்பத்தின் மீதும் ஆணையாகச் சொல் நானி, என்னுடன் நீ தொடர்பில் இருந்ததில்லையென்று' என்றும் பதிவிட முடியாத வார்த்தைகளாலும் நானியை நோக்கி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

 

 


இதைத்தொடர்ந்து இந்த புகாருக்கு பதிலளித்த நடிகர் நானி... "இந்த விஷயத்திற்கு அவர்கள் எதிர்பார்த்தது போல் நான் தேவையில்லாமல் உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்ற போவதில்லை. சட்ட ரீதியாக மட்டும் அணுகி இந்த பிரச்சனைக்கு தீர்வு காணுவேன். என் குடும்பம் பாதிக்கப்படக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார். அதற்கு ஸ்ரீரெட்டி... "சட்ட ரீதியாக அணுக நானும் தயார்" என சவால் விட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராடவுள்ளேன்' - ஸ்ரீரெட்டி அறிவிப்பு ! 

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து ஒரு பக்கம் பெண்கள் அமைப்பினரும் மாணவ, மாணவிகளும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இன்னொரு பக்கம் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் கண்டித்து வரும் நிலையில் தென்னிந்திய சினிமாவில் உள்ளவர்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கிய நடிகை ஸ்ரீரெட்டி பொள்ளாச்சி சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

sri reddy

 

இது குறித்து ஸ்ரீரெட்டி பேசும்போது.... "பொள்ளாச்சி சம்பவம் ஏழு வருடங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பெண்கள் இதுபோன்ற குற்றங்களை மூடி மறைக்காமல் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். புகார் அளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும். இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராட முடிவு செய்து இருக்கிறேன். விரைவில் போலீஸ் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் இந்த பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேச இருக்கிறேன். பாதிக்கப்பட பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன். நம் நாட்டில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால்தான் இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க முடியும்" என்றார்.

 

Next Story

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய அடுத்த நடிகை..! படங்கள் உள்ளே

Published on 01/10/2018 | Edited on 01/10/2018
sri reddy

 

சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தென்னிந்திய சினிமாவின் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும், படங்களையும் வெளியிட்டு திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் சண்டக்கோழி 2 விழாவில் தன்னை பற்றி பேசியபோது சிரித்ததற்கு அவரை சமூகவலைத்தளத்தில் கண்டித்து "கீர்த்தி சுரேஷ் சிரிப்பு மிகவும் கேவலமாக இருந்தது" என்று கோபமாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு நடிகை ஹேமா குறித்தும் தற்போது சமூகவலைத்தளத்தில் காட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அடுக்கடுக்காக பாலியல் புகார் கூறியிருந்த ஸ்ரீரெட்டியை நடிகை ஹேமா ஏற்கனவே... "ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தியது நல்லது அல்ல. இயக்குனர் தனது பார்வைக்கேற்ப நடிகர், நடிகைகளுக்கு கதைக்கேற்ற கதாபாத்திரத்தை கொடுப்பார். யாருடைய பரிந்துரையிலும் வாய்ப்புகள் கொடுப்பது இல்லை. ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்" என்று விமர்சித்திருந்தார். 

 

 

 

 

sri reddy


இந்நிலையில் தற்போது ஹேமா மீது கோபமடைந்த ஸ்ரீரெட்டி...."ஹேமா நீங்கள், கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சையிடம் சொல்லி உங்களுடையை ஆபாச வீடியோவை நீக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு மக்கள் மத்தியில் நான் ஆடையை கழற்றியது பற்றி பேசுங்கள். உங்கள் கருப்பு பக்கத்தை பார்க்காமல் எனது போராட்டத்தை பற்றி பேசாதீர்கள். என்னைப் பற்றி தெரியாமல் நீங்கள் கருத்து சொன்னால், நீங்கள் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எனது அதிரடியை பார்க்க வேண்டி இருக்கும்" என்று சமூகவலைத்தளத்தில் காட்டமாக கருத்து தெரிவித்திருப்பது தெலுங்கு பட உலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.